எனது படம்
மாந்தராய்ப் பிறந்த அத்தனைப் பேரும் ‘மனிதம்’ போற்றி, அச்சம் தவிர்த்து, அமைதியாக வாழ்ந்து முடிப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதே அறிவுடைமை ஆகும். கடவுளைத் தேடி அலைந்து, விதம் விதமாய் விழாக்கள் நடத்திக் கூத்தடித்துக் கோரிக்கைகள் வைத்துக் காத்திருப்பதால் பயனேதும் இல்லை.

வியாழன், 18 டிசம்பர், 2025

மோடியின் வயது எழுபத்தைந்தா[17 செப்டம்பர், 1950] பதினைந்தா?!

//பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின், தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா என்ற உயரிய விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. எத்தியோப்பிய பிரதமர் இந்த விருதை மோடிக்கு அளித்தார். இந்த விருது பெறும் முதல் உலகத் தலைவர் மோடியே ஆவார்//[மாலைமலர்].
ஓட்டப் பந்தயத்திலோ பேச்சுப் போட்டியிலோ பதக்கம்[பரிசு] பெறும் ஒரு பதினைந்து வயதுப் பாலகனாக மாறியிருக்கிறார் நம் பிரதமர் மோடி. பரிசாகப் பெற்ற விருதைத் தூக்கிக் காட்டி, அதை ஆசை ஆசையாய்ப் படமெடுத்துக் காட்டியிருப்பதே அந்த மாற்றத்திற்கான அடையாளம்.

நம் மதிப்பிற்குரிய பிரதமரைப் போலவே, அவர் பெற்றதை இந்தியக் குடிமக்களாகிய நாம் அனைவரும் பெற்றப் பேறாகக் கருதிப் பெருமிதப்படுவோம்[விருது எதற்காக வழங்கப்பட்டது என்பது ஒரு பொருட்டல்ல].

தினம் தினம் ஒரு மில்லியன் ‘பார்வை’களைப் பெறும் முதல் தர[ஹி... ஹி... ஹி!!!] வலைப்பதிவாளனாகிய நான் நம்மவரின் இந்தப் படத்தைப் பகிர்ந்துகொண்டதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

நீங்களும் பகிருங்கள்.

                               *   *   *   *   *

https://www.maalaimalar.com/news/world/prime-minister-modi-receives-ethiopias-highest-award-801690