பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
- 'பசி'பரமசிவம்
- அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.
சனி, 6 டிசம்பர், 2025
”சாமியே சரணம் ஐயப்பா”... அவனின் ஆபாசக் கதை அறியாத அப்பாவிப் பக்தர்களுக்கு...
வெள்ளி, 5 டிசம்பர், 2025
திருப்பரங்குன்றம்... தீர்ப்பளித்த சுவாமிநாதனும் தமிமுன் அன்சாரியின் 'அடடா' விமர்சனமும்!
//திருப்பரங்குன்றத்தில் கார்த்திகைத் தீபம் ஏற்றும் பிரச்சினையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பைக் கண்டிக்கும் வகையில், ‘விசிக எம்எல்ஏ’ தமிமுன் அன்சாரி, மாதவி நீதிபதியாக இருக்கும் இடத்தில் கண்ணகிக்கு நீதி கிடைக்காது என்றும், எழுதுகோலில் நீல நிற மை இருக்கலாம்; காவி இருக்கக் கூடாது என்றும் ‘கடுமையாக’ விமர்சித்துள்ளார்// என்கிறது ஊடகச் செய்தி*
என்னவாகவோ இருக்கட்டும். அதை அறியும் ஆர்வம் அடியேனுக்கு உள்ளது எனினும், தமிமுன் அன்சாரியின் அற்புதமான கவிநயம் மிளிரும் அந்தக் கற்கண்டு நடைத் தமிழை வெகுவாக ரசித்தேன்; மகிழ்ந்தேன்.
மீண்டும் மீண்டும் வாசித்து மகிழத் தூண்டும் அந்த வாசகம்;
“மாதவி நீதிபதியாக இருக்கும் இடத்தில் கண்ணகிக்கு நீதி கிடைக்காது. எழுதுகோலில் நீல நிற மை இருக்கலாம்! காவி இருக்கக் கூடாது.”
* * * * *
‘தீ’யைத் ‘தீபம்’ ஆக்கிய அந்த அயோக்கியர்கள் யார்?!
கற்கள் ஒன்றோடொன்று உரசும்போது ‘தீ’ப்பொறி சிதறுவதையும், காய்ந்த மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசி காடுகள் தீப்பற்றி எரிவதையும் ஊன்றிக் கவனித்த காட்டுமிராண்டிகளாக இருந்த நம் மூதாதையர்கள், கற்களை உரசி, சருகுகளிலும் காய்ந்த மரத் துண்டுகளிலும் தீயைப் பற்றவைத்து, பச்சையான இறைச்சியை அதில் சுட்டுச் சுவைகூட்டி உண்ணப் பழகினார்கள்.
அப்போதெல்லாம் ‘தீ’ வெறும் தீயாகவே இருந்தது.
காலப்போக்கில் அதை உருவாக்குவதில் புதிய புதிய வழிமுறைகள் கையாளப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் இருப்பிடத்தில் சூழ்ந்துள்ள இருளை அகற்ற விளக்குகளைக் கண்டுபிடித்தார்கள்[சிம்னி விளக்கு, மண் விளக்கு, லாந்தர் என்றிப்படி...]. அப்போதும் ‘தீ’ வெறும் தீயாகவே இருந்தது.
சமையலுக்காக அதைப் பயன்படுத்திய நிலையிலும் ‘தீ’ தீதான்.
குவிந்துகிடக்கும் குப்பைகளை அள்ளி எடுத்து அப்புறப் படுத்துவதைத் தவிர்க்க, அவற்றில் தீயிட்டார்கள். பற்றிப் பரவி, பெரு நெருப்பாக அது கொழுந்துவிட்டு எரிந்தபோதும் அது சாதாரணத் ‘தீ’தான். மனிதர்கள் பகை காரணமாக ஒரு தரப்பார் மற்றொரு தரப்பாரின் உடமைகளுக்குத் தீயிட்டு அழித்தபோதும் ‘தீ’ தீயாகவே இருந்தது.
இவ்வாறு, பலவகையிலும் பயன்படுத்தப்பட்ட அதே ‘தீ’தான் கோயில்களில் விளக்கு ஏற்றும்போது ‘தீபம்’ ஆன பேரதிசயம் நிகழ்ந்தது.
அது தானாக நிகழவில்லை; கட்டப்பட்ட கோயில் கலசங்களில், வேத மந்திரங்கள் சொல்லி அவற்றைப் புனிதமாக்குவதாகவும், உள்ளே வைக்கப்படும் சிலைகளுக்கு மந்திரங்கள் ஓதி, அபிஷேகம் செய்து, அவற்றில் கடவுளைக் குடியேற்றுவதாகவும் கதையளந்து மக்களை நம்ப வைத்த ‘அவர்கள்’தான் ‘தீ’யைப் புனிதமான ‘தீபம்’ ஆக்கினார்கள்.
மக்களும் அதை நம்பினார்கள்.
கோயில்களில், உலோகங்களால் ஆன விளக்குகளில் தீபம் ஏற்றும் வழக்கம், காலப்போக்கில் கடவுள்கள் குடியிருப்பதாகச் சொல்லப்படும் மலை உச்சிகளில், அகன்ற பெரிய குண்டாக்களிலும் அண்டாக்களிலும்[கொப்பரை] பிரமாண்டமான திரிகள் வைத்து தீயைப் பற்றவைத்து ‘மகா தீபம்’ ஏற்றுவது வழக்கத்திற்கு வந்தது.
வெறும் ‘தீ’, இன்று மக்களுக்கிடையேயான மோதல்களுக்கும் கலவரங்களுக்கும் காரணமாகவுள்ள ‘மகா தீபம்’ ஆன கதை இதுதான்!
வியாழன், 4 டிசம்பர், 2025
திருப்பரங்குன்றம் பிரச்சினை... நயினார் பக்தியை மெச்சி ஓடோடி வந்து உதவிய இறைவன்!!!
"திருப்பரங்குன்றம் வழக்கில் இன்று வந்திருப்பது இறைவனின் தீர்ப்பு” என்று சற்று முன்னர், ஊடகவியலாளர் பேட்டியில் நயினார் நாகேந்திரன் கூறினார்[ராஜ் தொ.கா].
குறிப்பாக, தமிழர்களுக்கிடையேயான வழக்கில் இறைவன் தீர்ப்பளித்தது ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் பரவசத்தில் ஆழ்த்துகிறது.
ஒரு தமிழனாக நாமும் பரவசப்படுகிறோம். நயினார் நாகேந்திரன் அவர்களிடம் ஒரு கோரிக்கையையும் சமர்ப்பிக்கிறோம்.
நயினார் அவர்களே,
நீங்கள் 100% உண்மையான பக்தர் என்பதால்தான் இறைவனே தாமாக முன்வந்து உதவியிருக்கிறார்.
ஆகவே, இனியும் இந்தியாவெங்கும் உள்ள இது மாதிரியான வழக்குகளில் உதவுமாறு, பரிசுத்தப் பக்திமானான நீங்கள் வேண்டிக்கொண்டால், சந்தேகத்திற்கு இடமின்றி இறைவன் மனமுவந்து உதவி செய்வார்.
வேண்டிக்கொள்ளுங்கள் நயினார்.
உங்கள் வேண்டுதலுக்குப் பிறகு இந்த மண்ணில் நீதிமன்றங்களின் தேவையே இல்லாமல்போகும். இவற்றிற்காக அரசு கோடிக்கணக்கிலான ரூபாய் செலவிடுவது தவிர்க்கப்படும்.
இனியும் தங்களின் மக்கள் பணி சிறக்க மனமுவந்த வாழ்த்துகள்!
‘ஏவிஎம்’ சரவணன்> நேற்று பிறந்த நாள் கொண்டாட்டம்> இன்று உயிரிழப்பு... நல்ல சாவு!
பெரும் செல்வந்தராயினும் தன்னடக்கம் என்னும் உயரிய பண்பினராக வாழ்ந்தவர் ‘ஏவிஎம்’ சரவணன் அவர்கள். இரு கைகட்டி, சற்றே தலை தாழ்த்தி, அடங்கி ஒடுங்கிய கோலத்தில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை வழக்கமாக்கிக்கொண்ட பெருந்தன்மையாளர் அவர்.
“அடுத்த பிறவியில் என்னவாகப் பிறப்போம்? சொர்க்கமா நரகமா செத்த பிறகு நமக்கு வாய்க்கவிருப்பது எது?” என்றெல்லாம் புலம்பிக்கொண்டிராமல், ஆயுள் முழுவதும் இயன்றவரை நல்லவராக வாழ்ந்து, நோய்நொடிகளின் தாக்குதல் இல்லாமல், அமைதியான மனநிலையில் மரணத்தைத் தழுவுவதே விரும்பத்தக்கதாகும்.
அத்தகையதொரு நல்ல மரணம் ‘ஏவிஎம்’ சரவணன் அவர்களுக்கு வாய்த்துள்ளது.
இன்று அதிகாலை ‘மரணம்’ தழுவிய அவர், நேற்று ‘பிறந்த நாள்’ விழா கொண்டாடினார்* என்னும் ஊடகச் செய்தி அதை உறுதிப்படுத்துகிறது.
*https://cinema.vikatan.com/kollywood/tamil-cinema-producr-avm-saravanan-passed-away
புதன், 3 டிசம்பர், 2025
காலங்காலமாய்ச் 'சொர்க்க வாசல்' காட்டுகிறார்கள்! 'சொர்க்கம்' காட்டுவது எப்போது?!
//ஜனவரி 13ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி தினம். இதற்காக 13ஆம் தேதியிலிருந்து 22-ஆம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஜனவரி 13ஆம் தேதி அதிகாலை 2:00 மணிக்குச் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது// https://temple.dinamalar.com].
செவ்வாய், 2 டிசம்பர், 2025
திரு அண்ணாமலையாரும் திரு காடாத் துணியும்!!
திங்கள், 1 டிசம்பர், 2025
அண்டவெளியில் உள்ள அனைத்தும் உருவாகக் காரணம் அணுக்களே; ஆண்டவன் அல்ல!
*** //அணுக்கள் என்பவை பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் உருவாக்கும் சிறிய அலகுகள்// -https://education.nationalgeographic.org/resource/nuclear-energy/
***//atoms are now understood to be fundamental building blocks of matter…..// -https://medium.com/starts-with-a-bang/the-atom-lost-its-original-me aning-and-thats-good-for-science-bc39e828e75b





