சனி, 27 டிசம்பர், 2025

மெகபூபா முஃப்தி வாழ்க! ஸ்டாலின் நீடூழி வாழ்க!!

மக்கள் ஜனநாயகக் கட்சியின்(பிடிபி) தலைவர் மெகபூபா முஃப்தி, வெள்ளிக்கிழமை கட்சியின் தலைமையகத்தில் காஷ்மீரி மொழியில் தனது செய்தியாளர் சந்திப்பைத் தொடங்கிய உடனேயே, ஒரு பத்திரிகையாளர் அவரை உருது மொழியில் பேசுமாறு கேட்டார்.

முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான அவர், ஊடகங்கள் ஏன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஆங்கிலத்திலோ அல்லது உருதுவிலோ பேசுமாறு கேட்பதில்லை என்று கேள்வி எழுப்பி, அந்தப் பத்திரிகையாளரைக் கடுமையாகச் சாடினார்.

ஊடகக்காரனைச் சாடியது மட்டுமல்லாமல், தய்மொழிப் பற்றுக்கு முதல்வர் ஸ்டாலினை முன்னுதாரணமாக அவர் காட்டியிருப்பது தமிழர்களைப் பெருமிதப்படச் செய்திருக்கிறது.

இந்தியாவில் பாதிக்கும் மிகக் குறைவாகப் பேசப்படும் இந்தியைக் கொண்டாடும் இந்தி வெறியர்களுக்கு, மெகபூபா முஃப்தியின் செயல்பாடு புத்தி புகட்டுவதாக அமைந்துள்ளது.

இந்தி அல்லாத பிற மொழிக்காரர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதாகவும் இது அமைகிறது.

“இப்போது இது ஒன்றுதான் மிச்சம் இருக்கிறது[அத்தனை உரிமைகளையும் ‘பாஜக’ அரசு பறித்துவிட்டது என்கிறார்?], எனவே, காஷ்மீரி மொழிக்குச் சிறிது மரியாதை கொடுங்கள்” என்று ஊடகக்காரர்களிடம் கூறியதோடு,  காஷ்மீரி மொழியிலேயே தொடர்ந்து பேசினார் மெகபூபா முஃப்தி.*

                                           *   *   *   *   *

https://kashmirobserver.net/2025/12/26/mehbooba-speaks-kashmiri-cites-tamil-leaders-in-language-row/

வெள்ளி, 26 டிசம்பர், 2025

ராமாதாசா, அன்புமணியா? ‘பூவா தலையா?’ போட்டால் தெரியும்!

தந்தை ராமதாசுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையிலான பதவிப் பிரச்சினை, ஒரு தீர்வை எட்டுவதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்றே தோன்றுகிறது.*

பெற்றெடுத்த மகனுக்கு அன்புமணி என்று அழகான தமிழ்ப் பெயர் சூட்டி, வளர்த்து ஆளாக்கி, மருத்துவராக்கி, கட்சியில்[பாமக] உயர் பதவி கொடுத்து, டெல்லி அமைச்சராகவும் அமர்த்தி அழகு பார்த்துப் புளகாங்கிதப்பட்ட ராமதாஸ் என்னும் தமிழினப் பற்றுள்ள அப்பனுக்கு[நல்ல தலைவரும்கூட], வரலாறு கண்டிராத அளவுக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கும் அன்புமணியைப் போன்ற ஒரு புதல்வன் இம்மண்ணில் இதுவரை தோன்றியதில்லை என்றே சொல்லலாம்[இவரைவிடவும், பெற்றவனை ஈவிரக்கமின்றிப் போட்டுத்தள்ளிவிட்டுப் பதவியைக் கைப்பற்றிய மொகலாய மன்னர்களின் சில வாரிசுகள் தேவலாம்].

அப்பனுக்கும் மகனுக்குமான போட்டி/போர், முடிவொன்றை எட்டாததால், பிற சாதிக்காரர்கள் ஒட்டுமொத்தப் பாட்டாளி மக்கள் கட்சியினரையும் பார்த்து நகைக்கிறார்கள்.

இதைத் தவிர்க்கும் வகையில், ‘சமரசத் தீர்வு' காண்பதற்கான திட்டமொன்றை இருவரிடமும் பரிந்துரைப்பது அடியேனின் விருப்பம்.

அது.....

‘பாமக’வின் உண்மை விசுவாசிகளைத் திரட்டி[அத்தனை எளிதல்ல], அவர்கள் முன்னிலையில் ‘பூவா தலையா’ போட்டுப் பார்ப்பது.

பூ விழுந்தால் பெரியவர் ராமதாஸே ‘பாமக’வின் ஆயுட்காலத் தலைவர். தலை விழுந்தால்[விழக்கூடாது என்பது அடியேனின் பிரார்த்தனை] அன்புமணி தலைவராவார்.

                                               *   *   *   *   *

*https://news7tamil.live/g-k-mani-expelled-from-pmk-anbumani-announces.html?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCwq6ALML21uAMw-qruBA&utm_content=rundown#google_vignette

வியாழன், 25 டிசம்பர், 2025

வடக்கன்களின் கால் கழுவிப் பிழைப்பு நடத்தும் காலைக்கதிர்க் கசடன்!

 

கேள்வி கேட்டவனாகட்டும் பதில் சொன்னவனாகட்டும், தமிழர்களை இழிவுபடுத்தியும், ஆதிக்க வெறி கொண்ட வடக்கன்களின் கால் கழுவிய நீர் குடித்தும் பிழைப்பு நடத்தும் அடிமைகள் ஆவார்கள்.

ஆங்கிலமும் இந்தியும் தெரியாததால் ஸ்டாலின் தேசியத் தலைவர் ஆக இயலாது என்கிறான் கழிசடைக் காலைக்கதிர்க்காரன்[‘கேள்வி-பதில்’ பகுதி].

மறைந்த காமராசர் என்னும் தமிழ் மட்டுமே தெரிந்த பெருந்தலைவர், இந்த இந்தியாவின் பிரதமரைத் தேர்வு செய்வதில் முக்கியப் பங்கு வகித்தது இந்த அண்டிப் பிழைக்கும் அறிவீனனுக்குத் தெரியும்.

எப்போது எங்குச் சென்றாலும் மொழிபெயர்ப்பாளரை உடன் அழைத்துச் செல்லும் மோடிக்கு, அரைகுறை இந்தி மட்டுமே தெரியும் என்பதும் இந்த அரைவேக்காடனுக்குத் தெரியும்.

எந்தவொரு மொழியில் பேசினாலும், உடனுக்குடன் விரும்பும் மொழியில் ‘மொழியாக்கம்’ செய்வதற்கான கருவிகள் பயன்பாட்டில் இருப்பதும் இந்தக் குதர்க்கவாதிக்குத் தெரியும்.

தெரிந்திருந்தும், தன் சங்கி எஜமானன்களைத் திருப்திப்படுத்திட ஸ்டாலினை இழிவுபடுத்தியிருக்கிறான் இந்தக் காரியவாதி.

தமிழர்கள் விழிப்புணர்வு பெற்று, காசு கொடுத்துக் காலைக்கதிர் வாங்குவதை நிறுத்தினாலே இவன் பெட்டிப் பாம்பாய் அடங்கிவிடுவான்.

இது விசயத்தில் நம்மவர்கள் காலதாமதம் செய்தல் கூடாது என்பது நம் எச்சரிக்கை.

புதன், 24 டிசம்பர், 2025

அன்றாடங்காய்ச்சிகளின் கடவுள்!!![பதிவு பழசோ பழசு!]

“மேஸ்திரி, நாளைக்கு என் குடும்பத்தோட எங்க குல தெய்வம் கோயிலுக்குப் போறேன். வேலைக்கு வர முடியாது" என்றான் சித்தாள் பழனி.

“நாளைக்கு நிறைய ஆள் வேணும். ஞாயிற்றுக் கிழமை போப்பா” என்றார் மேஸ்திரி.

“இல்ல மேஸ்திரி. ஆறு மாசம் முந்தியே சாமியை நேர்ந்துட்டேன். அதுக்கான நேர்த்திக் கடனை உடனே நிறைவேத்தியாகணும். நாளைக்கு நல்ல நாள்.”

“அப்படியென்ன பெரிய நேர்த்திக் கடன்? உண்டியலில் கத்தை கத்தையா பணம் போடப் போறியா? இல்ல, ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுறயா?” -மேஸ்திரியின் குரலில் ஏகத்துக்குக் கிண்டல்.

“அதுக்கெல்லாம் எங்கமாதிரி அன்னாடுங்காய்ச்சிகளுக்கு ஏதுங்க வசதி?”

“அப்படீன்னா, உன் குடும்பத்தில் உள்ள அத்தனைப் பேரும் மொட்டை போடுங்களேன். இதுக்குச் செலவு கம்மிதான்”- மீண்டும் கிண்டல்.

“எங்க குல தெய்வம் சாமியும் எங்கள மாதிரியே பரம ஏழை மேஸ்திரி. வசதியுள்ள யாரும் இதைச் சீந்துறதில்ல. கோயிலுக்கு வருமானமும் இல்ல. கோயிலைச் சுத்தி எருக்கஞ் செடியும் முள்ளுச் செடியும் முளைச்சிப் புதர் மண்டிக் கிடக்குது. அதையெல்லாம் புடுங்கிப் போட்டுச் சுத்தம் பண்ணனும்” என்றான் பழனி.

                                        *   *   *   *   *

இது என் படைப்பாக, 28-05-2008 ‘குமுதம்’ வார இதழில் வெளியானது.

செவ்வாய், 23 டிசம்பர், 2025

நீதிபதிகள் நீதிதேவனால்[இருந்தால்] அனுப்பப்பட்டவர்கள் அல்ல!!!

தமிழ்நாட்டு உயர் நீதிமன்ற நீதிபதியொருவர் சட்டப் புத்தகங்களைப் படித்து, அவற்றில் இடம்பெற்றுள்ள சட்ட விதிகளைப் பின்பற்றி, வழக்குகளில் தீர்ப்பு வழங்குகிறாரோ அல்லவோ, பகவத்கீதை போன்ற புராணப் புளுகுகளை[கிருஷ்ணன் கடவுள் அவதாரமாம். பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவினாராம். அருச்சுனனுக்கு உபதேசம் பண்ணினாராம். அது கீதையாம். இவற்றிற்கெல்லாம் அறிவியல் ஆதாரம் தந்தவன் எவனும் இல்லை]ப் படித்துத் தேர்ச்சி பெற்று, அவற்றை ஆதாரமாகக்கொண்டு தீர்ப்பு வழங்கும் அதிசயம் இங்கு நிகழ்ந்திருக்கிறது. ஒரு வழக்கு குறித்த அவரின் தீர்ப்பு:*

*'பகவத்கீதையை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடக்கிவிட முடியாது. அது பாரத நாகரிகத்தின் ஒரு பகுதி[பாரத நகரிகம் என்று ஒன்று உள்ளதா? அதற்கான ஆதாரங்கள் உள்ளனவா?]. அது ஒரு நீதிநெறிப் புத்தகம்'[இது தீர்ப்பு].

மக்களாட்சி நடைபெறும் நாடு இது. இதை நிர்வகிப்பதற்கென்று, மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

இந்தச் சட்டங்களை ஆதாரமாகக் கொண்டுதான், தொடுக்கப்படும் வழக்குகளுக்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்குதல் வேண்டும். சட்ட விதிகளைப் புறந்தள்ளி, வானளாவிய அதிகாரங்கள் தனக்கு இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு, நீதித் துறைக்குச் சம்பந்தமே இல்லாத புராணக் கதைத் தொகுப்பு நூலை மேற்கோள் காட்டித் தீர்ப்பு வழங்கியிருக்கிறார் ‘அந்த’ நீதிபதி.

‘இங்குள்ள நீதிபதிகளும் மனிதர்கள்தான்; நீதிதேவனால்[இருந்தால்] இங்கு அனுப்பப்பட்டவர்கள் அல்ல’ என்பது சம்பந்தப்பட்ட நீதிபதி[களு]க்குத் தெரியும்; மக்களுக்குத் தெரிந்திருப்பது மிக அவசியம்.

https://www.dinamalar.com/news/tamil-nadu-news/teaching-bhagavad-gita-does-not-make-a-trust-religious-not-ground-to-deny-fcra-registration-madras-high-court/4110749

சீகைக்காய்... தலைக்கு! தாடிக்கும் அதுவே!! ஹி... ஹி... ஹி!!!

ளங்கோ பக்கா ஆத்திகன். சுந்தரம் சுத்த நாத்திகன். இருப்பினும் இருவரும்  மிக நெருக்கமான நண்பர்கள்.

ஊரின்[சிறு நகரம்] வேறு வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் என்றாலும், விடுமுறை நாட்களில் இருவரும் சந்தித்து அளவளாவுவது வழக்கம், அந்தரங்க ரகசியங்களைப் பகிர்வது உட்பட.

அன்று ஞாயிற்றுக் கிழமை. இளங்கோவைப் பார்க்க அவனின் வீடு தேடிப் போனான் சுந்தரம். அவன் கோயிலுக்குப் போயிருப்பதாகச் சொன்னாள் அவனின் புதுப் பெண்டாட்டி.

“நான் வந்துட்டுப்போனதாச் சொல்லுங்க” என்று சொல்லி நகர்ந்தான் சுந்தரம்.

வழியில் எதிர்பாராத விதமாக இளங்கோ எதிர்ப்பட்டான்.

”நீ கோயிலுக்குப் போயிருக்கிறதா உன் பெண்டாட்டி சொன்னாள். உன் நெத்தியில் திருநீறு இல்ல. பொய் சொல்லிட்டு எங்கடா போனே?”

மெலிதான அதிர்ச்சிக்கு உள்ளான இளங்கோ, “வயாகரா வாங்கப் போனேன். இது விசயம் பெண்டாட்டிக்குத் தெரியக்கூடாது. அதனாலதான் பொய் சொன்னேன்” என்றான்.

சற்றே யோசித்த சுந்தரம், “சாமிகிட்டே வேண்டுதல் வைக்கத்தான் நீங்கெல்லாம் கோயிலுக்குப் போறீங்க. இது விசயத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கக் கருணை காட்டு பகவானேன்னு  அதுகிட்டே வேண்டுதல் வையுங்கடா. எதுக்கு வயாகரா நயாகரான்னு வீண் செலவெல்லாம்” என்று சொல்லிவிட்டு நண்பனின் முகபாவனையைக் கவனித்தான்.

கடும் வாக்குவாதத்திற்கு அவன் தயாராவதை அறிந்து, “பொழுது போகலேன்னுதான் உன்னைத் தேடி வந்தேன். அப்புறமா சந்திப்போம்” என்று நகர்ந்தான்.

கொஞ்சம் தூரம் நடந்து திரும்பிப் பார்த்தபோது, இளங்கோ இவனை முறைத்தவாறே நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. 

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

ஓ அல்லா, ஓம் முருகா, கொஞ்சம் நாள் ‘தி.கு.’ மலையிலிருந்து வெளியேறுவீர் கடவுள்களே!

//திருப்பரங்குன்றம் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றங்களில் விசாரணைகள் நடந்துவருகின்றன.

இந்நிலையில், மலையில் உள்ள பள்ளிவாசலில்[தர்கா] சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நாளை(டிச. 21) நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த காலங்களில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பின்பற்றி, இஸ்லாமியர்கள் சந்தனக்கூடு விழாவை நடத்திக் கொள்ளலாம் என்று அரசு சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சிக்கந்தர் தர்காவுக்குச் சென்று சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்குத் தர்காவைச் சேர்ந்த நிர்வாகிகள் 4 பேர் சென்றனர். அவர்களுக்காக மலைக்குச் செல்லும் பாதையில் இருந்த இரும்புத் தடுப்புகளைப் போலீஸார் அகற்றினர்.

இதற்குப் பழனியாண்டவர் கோயில் அடிவாரத்திலுள்ள கோட்டைத்தெருவைச் சேர்ந்த திருப்பரங்குன்றம் கிராமப் பெண்கள்[ஆண்கள்?], மக்களை மலை மீது செல்ல அனுமதிக்காதபோது, தர்கா நிர்வாகிகளை மட்டும் எப்படி அனுமதிக்கலாம் என்று கேள்வி எழுப்பினர். போலீஸார் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகச் குற்றம் சாட்டினர்//[ஊடகச் செய்தி]

இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால், கடவுள்களின் பெயரால் நம்ம ஊர் மக்களிடையேயான மோதல் தொடர்கிறது என்பதுதான்.

நம்முடைய ஊர்கள் என்றில்லை, உலகம் முழுதும், வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கடவுள்களால் மோதல்களும் கலவரங்களும் நிகழ, கோடிக்கணக்கில் மனிதர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது வரலாறு.

இனியேனும் இந்த அவலங்கள் நிகழாதிருக்க, பக்திமான்கள் தத்தம் வீடுகளுக்குள்ளேயே வழிபாடு நிகழ்த்தலாமே தவிர, பொதுவிடங்களில் வழிபடக்கூடாது. உலக நாடுகள் ஒருங்கிணைந்து சிந்தித்துச் செயல்பட்டால் இது சாத்தியம் ஆகும்.

இது எப்போதேனும் சாத்தியம் ஆகுமா அல்லவா என்பது முற்றிலும் கணிக்க இயலாத நிலையில்.....

‘மலைகள், இயற்கை அழகை ரசிப்பதற்கும், உடல் நலம் பேணுவதற்குமான சுற்றுலா மையங்களாகவே இருக்கட்டும்; எந்தவொரு மதத்தவரும் வழிபாட்டுக்காக அங்கே செல்வது கூடாது’ என்று நம் ஒன்றிய அரசு தயங்காமல் சட்டம் இயற்றுதல் வேண்டும்[மோடி பிரதமராக இருக்கும்வரை இதற்கு 100% வாய்ப்பு இல்லை].

எந்தவொரு கட்சியும் தேர்தலைக் கருத்தில் கொள்ளாமலும், பக்திமான்களின் எதிர்ப்பை ஊக்குவிக்காமலும் அரசுக்கு முழு ஆதரவு தருதல் வேண்டும்.

இம்மாதிரியான சட்டம் இயற்றப்பட்டு அமலாக்கப்பட்டால் மட்டுமே, குறைந்தபட்சம் இது மாதிரியான பிரச்சினைகள் ஆரம்பநிலையிலேயே கிள்ளியெறியப்பட்டு, சமுதாயத்தில் அமைதி நிலவும்; பிரச்சினைகளால், மக்கள் நிம்மதி இழப்பதும், பயனுள்ள வழிகளில் செலவழிக்கப்படுதற்குரிய நேரம் வீணடிக்கப்படுவதும் தவிர்க்கப்படும்.

சனி, 20 டிசம்பர், 2025

‘புடின்’இன் அதிரடி அறிவுரை மோடியின் மண்டையில் உறைத்திருக்குமா?


இந்தியாவின் மொழி, கலாச்சாரம் குறித்துப் பேசியுள்ள அதிபர் புடின், "நான் சில தினங்களுக்கு முன் இந்தியா சென்றேன், சுமார் 150 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் அனைவரும் இந்தி பேசுவதில்லை; 50-60 கோடி மக்களைத் தவிர பிறர் வெவ்வேறு மொழிகள் பேசுகின்றனர். இந்த ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் பாதுகாப்பது அவசியம்[https://www.dinakaran.com/news/hindi-putin-india-russia/amp/?utm=relatedarticles].

பரந்து விரிந்து பெரியதொரு நாடாக இருந்த ‘சோவியத் யூனியன்’, பல நாடுகளாக உடைந்து சிதறியதற்குக் காரணம், ரஷ்யருக்கு மட்டும் உரியதான ‘ரஷ்ய மொழி’யைப் பிற இனத்தவர்[உள்ளடங்கியிருந்த சிறு சிறு நாட்டினர்] மீது திணித்ததுதான் என்று, புடின் தன் பேச்சில் மறைமுகமாகச் சொல்லியிருப்பது நம் மோடியின் மண்டையில் உறைத்திருக்குமா?

‘காந்தியின் பெயர் இருட்டடிப்பு’... செய்தவர்கள் அவரின் கால் தூசுக்கு ஒப்பாகாத கயவர்கள்!!!

சத்திய நெறி பிறழாமல் வாழ முயன்று, அதில் பெருமளவில் வெற்றியும் பெற்ற உலகின் ஒரே அதிசய மனிதர் காந்தியடிகள்; தமக்குள்ள பலவீனங்களை ஒளிவுமறைவில்லாமல் உலகுக்கு அறிவித்த பெருந்தகை அவர்.

எதிரியை வெல்ல ஆயுதம் ஏந்திப் போராடும் வன்முறைக்கு மாற்றாகத் தம்மைத் தாமே துன்புறுத்திக்கொள்வதன் மூலம், அந்த எதிரியைச் சரணடையச் செய்யும் அகிம்சை நெறியை உலகுக்கு அறிமுகப்படுத்தியவரும் அவரே.

அதனால்தான், இன்றளவும் ஒட்டுமொத்த உலகமும் அவரைப் போற்றுகிறது.

அந்த அதிசய மனிதரின் பெருமைகளையும் சாதனைகளையும் வருங்காலச் சந்ததியினரும் அறிந்து, அவரைப் பின்பற்றத் தூண்டும் வகையில் செயல்பட வேண்டியவர்கள், அதற்கு முரணாக, அவரை நினைவுட்டும் வகையிலான திட்டங்கள், மசோதாக்கள், அமைப்புகள் போன்றவற்றிற்குச் சூட்டப்பட்ட அவரின் பெயரை நீக்கி, புரியாத சமஸ்கிருத & இந்திப் பெயர்களைத் திணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சில கணங்களேனும் தாமதிக்காமல், இந்த நாட்டைவிட்டே விரட்டியடிப்பதற்கு உரியவர்கள் அந்த அயோக்கியர்கள்.

அகிம்சையின் நாயகனை மறவாமலிருக்கும் மக்கள் அதைச் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வினோதமானது.

இவர்கள் மக்களா, மானம் ரோஷம் எல்லாம் இல்லாத உயிரற்ற வெறும் பிண்டங்களா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது!

‘தீய சக்தி’ பற்றிப் பேசும் எடப்பாடி ஒரு படு பயங்கரத் தீய சக்தி!!!

//தீய சக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் தமிழகம் இருளில் சிக்கிவிடும்//*[எடப்பாடி பேச்சு]

இவர் தமிழ்நாட்டு முதல்வராக இருந்த ஐந்து ஆண்டுகளும் தமிழ்நாடு இருளில்தான் மூழ்கிக் கிடந்தது. தீய சக்திகளான ஆதிக்க வெறியன்களிடம் தமிழினத்தை அடமானம் வைத்த இவருக்கு இணையான தீய சக்தி உலகில் வேறு எதுவும் இல்லை.

‘திமுக’ தீய சக்தியாகவே இருந்தாலும் அக்கட்சி குறித்து விமர்சிக்கும் யோக்கியதை, சங்கிகளுடன் தேர்தல் கூட்டணி அமைத்திருக்கும் இந்தக் கொத்தடிமைக்கு இல்லவே இல்லை.

இந்த ஆள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் மட்டுமே தமிழ்நாடு நிரந்தரமாக இருளில் மூழ்கும் என்பது 100% உறுதி.

தீய சக்தி என்று ஒன்று இருந்தால், தீய சக்திகளின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் இந்தத் தீய சக்தி, தீய சக்தி பற்றிப் பேசுவதறிந்து அது வாய்விட்டுச் சிரிக்கும்!
                                      
                                            *   *   *   *   *

வியாழன், 18 டிசம்பர், 2025

'தவெக' ‘விஜய்’க்கே நம் வாக்கு[ஓட்டு]!!!

நடிகர் விஜய்... மன்னித்திடுக, தலைவர் விஜய் தன் ஈரோடு பரப்புரையில், ‘திமுக’வைத் ‘தீய சக்தி’ என்று மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். தன்னுடைய ‘தவெக’ கட்சியை ‘நல்ல[தூய] சக்தி’  என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார்[ஊடகச் செய்தி].

நல்ல கட்சி என்றால், மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி என்பது அறியத்தக்கது.

இந்தக் கட்சியால் இந்நாள்வரை மக்களுக்கு நன்மை ஏதும் விளைந்ததில்லை என்பதால், இது[தவெக] நல்ல கட்சியே என்பது உறுதி செய்யப்படவில்லை.

அது 2026ஆம் ஆண்டுத் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றி ஆளத் தொடங்கிய பிறகே அது தெரியவரும்.

ஆனாலும், தேர்தலுக்கு மூன்று மாதங்கள் போல இருக்கும் நிலையில் அவரால் சில நன்மைகளையேனும் செய்து, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்றிட இயலும்.

அந்தச் சில நன்மைகளில் குறிப்பிடத்தக்கவை.....

‘நீட்’ தேர்வைத் திணித்தது, மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியைத் திணித்தது/திணிப்பது, புதிய மசோதா மூலம் அண்ணல் காந்தியடிகளின் பெயரை இருட்டடிப்புச் செய்வது என்று ஒன்றிய அரசு செய்யும் அடாவடித்தனங்களைத் தடுத்து நிறுத்துவது போன்றவை ஆகும்.

தலைவர் ‘விஜய்’யைக் காணக் கோடிக்கணக்கில் மக்கள் திரள்கிறார்கள். இந்த மாபெரும் சக்தியை ஒன்று திரட்டி, தானே தலைமை வகித்து, மாபெரும் போராட்டத்தை நடத்தி, ஒன்றிய அரசைப் பணியச் செய்து மேற்கண்டவை தொடர்பான ஆணைகளை[+மசோதா] அவர் திரும்பப் பெறச் செய்யலாம்.

இதன் மூலம் ‘தவெக’ கட்சியை மிக மிக நல்ல கட்சி[சக்தி] என்று நிரூபித்துவிடலாம். 2026இல் தமிழ்நாட்டில் ஆட்சியையும் கைப்பற்றிவிடலாம்.

நல்லது செய்து தமிழர்களுக்கு நல்லாட்சி வழங்கவிருக்கும், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் ‘விஜய்’ அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறோம்!

வாழ்க விஜய்! வெல்க ‘தவெக’ கட்சி!!

மோடியின் வயது எழுபத்தைந்தா[17 செப்டம்பர், 1950] பதினைந்தா?!

//பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின், தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா என்ற உயரிய விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. எத்தியோப்பிய பிரதமர் இந்த விருதை மோடிக்கு அளித்தார். இந்த விருது பெறும் முதல் உலகத் தலைவர் மோடியே ஆவார்//[மாலைமலர்].
ஓட்டப் பந்தயத்திலோ பேச்சுப் போட்டியிலோ பதக்கம்[பரிசு] பெறும் ஒரு பதினைந்து வயதுப் பாலகனாக மாறியிருக்கிறார் நம் பிரதமர் மோடி. பரிசாகப் பெற்ற விருதைத் தூக்கிக் காட்டி, அதை ஆசை ஆசையாய்ப் படமெடுத்துக் காட்டியிருப்பதே அந்த மாற்றத்திற்கான அடையாளம்.

நம் மதிப்பிற்குரிய பிரதமரைப் போலவே, அவர் பெற்றதை இந்தியக் குடிமக்களாகிய நாம் அனைவரும் பெற்றப் பேறாகக் கருதிப் பெருமிதப்படுவோம்[விருது எதற்காக வழங்கப்பட்டது என்பது ஒரு பொருட்டல்ல].

தினம் தினம் ஒரு மில்லியன் ‘பார்வை’களைப் பெறும் முதல் தர[ஹி... ஹி... ஹி!!!] வலைப்பதிவாளனாகிய நான் நம்மவரின் இந்தப் படத்தைப் பகிர்ந்துகொண்டதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

நீங்களும் பகிருங்கள்.

                               *   *   *   *   *

https://www.maalaimalar.com/news/world/prime-minister-modi-receives-ethiopias-highest-award-801690

புதன், 17 டிசம்பர், 2025

‘ஹிஜாப்'ஐ இழுத்த நிதிஷ்குமார்! இஸ்லாமியர்கள்[+எதிர்க்கட்சிகள்] கோழைகளா?!

//ஆயுஷ் மருத்துவர்களுக்குப் பணி ஆணை வழங்கும் நிகழ்வில், இஸ்லாமியப் பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்துகொண்டு, தனது பணி ஆணையைப் பெறுவதற்கு வந்தார். அப்போது அந்த பெண்ணின் ஹிஜாபை நிதிஷ் குமார் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து ஹிஜாபை அவர் விலக்க முயன்றார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது[2 நாட்களுக்கு முன்பு]//.

இந்தச் சம்பவத்தின்போது நிதிஷ்குமாருடன் இருந்த பிஹார் துணை முதல்வர் சம்ரத் சவுத்ரி, நிதிஷைத் தடுக்க முயன்றார். இருந்தபோதும், அதற்குள் ஹிஜாபைப் பிடித்த நிதிஷ், அதை விலக்க முயன்றார். அப்போது மேடையில் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே, முதல்வரின் முதன்மைச் செயலர் தீபக் குமார் ஆகியோர் சிரித்தபடி நின்றனர்.

“நிதிஷ் குமாருக்கு என்ன ஆனது? அவரது மனநிலை மோசமடைந்துள்ளதா, அல்லது இப்போது அவர் நூறு சதவீதச் சங்கி ஆகிவிட்டாரா?” என ராஷ்ட்டிரிய ஜனதா தளம் எக்ஸ் தளத்தில் வீடியோவைப் பகிர்ந்து விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி அவரின் இழி செயலுக்குக் கண்டனம் தெரிவித்து, அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொன்னதோடு நிறுத்திக்கொண்டது.

தமிழ்நாட்டின் இஸ்லாமிய அமைப்பு ஒன்றும் கண்டனம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

“பெண்ணின் ஹிஜாபை விலக்கியதன் மூலம் இஸ்லாமிய சமூகத்தின் மீது ‘என்டிஏ’ கூட்டணி கொண்டுள்ள மனப்பான்மை வெளிப்படுகிறது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை வெளிப்படுத்தும் வகையில் நிதிஷின் அரசியல் அமைந்துள்ளது...” என ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் இஜாஸ் அகமது தெரிவித்துள்ளார்.

ஆக,

அரைலூசன் ‘நிதிஷ்’இன் அசிங்கமான இந்தச் செயல் சமூக ஊடகங்களில் ஓரளவிற்கே பகிரப்பட்ட நிலையில், அடங்கியும்விட்டது. இது நமக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. கொஞ்சமே கொஞ்சம் நேரமேனும் இந்தக் கிறுக்கனின் ஆடைகளை உருவியெடுத்து நிர்வாணப்படுத்தியிருந்தால், இது மாதக்கணக்கில் பகிரப்படும் பெரும் பரபரப்பூட்டும் சுவாரசியமான நிகழ்வாக அமைந்திருந்திருக்கும்; மீண்டும் மீண்டும் வாசித்து மகிழலாம்.

ஹூம்... இனி வருந்துவதால் பயனேதும் இல்லை.

https://www.hindutamil.in/news/india/bihar-cm-nitish-kumar-removed-muslim-woman-s-hijab-rjd-criticized-as-sanghi

திங்கள், 15 டிசம்பர், 2025

“குன்றில் தீபம் ஏற்றுவோம்”... சங்கிகளின் ‘டி-ஷர்ட்’க்கு ஒரு மாற்று!!!

//திருக்கார்த்திகைத் தீபத் திருவிழாவை ஒட்டி, மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில்[தர்கா அருகே> நில அளவைக் கல்] கார்த்திகைத் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினர் நடத்திவரும் போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. அவர்கள் 'குன்றில் தீபம் ஏற்றுவோம்' என்ற வாசகத்துடன் டி-ஷர்ட் அணிந்தும், சமூக வலைதளங்களில் தீவிரப் பிரச்சாரம் செய்தும் வருவது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது//[https://tamil.indianexpress.com/tamilnadu/kunril-deepam-yetruvom-campaign-intensifies-protest-demands-deepam-lighting-on-thiruparankundram-hill-10909377].

குன்றில் தீபம் ஏற்றுவதற்கு, ’டி-ஷர்ட்’ களில் வாசகம்[“குன்றில் தீபம் ஏற்றுவோம்”] எழுதி மக்களிடையே வலம் வருவது மிக மிக மிக அற்புதமான வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.

இதன் விளைவாக, மதுரை மக்கள் அனைவருமே மேற்கண்ட வாசகம் பொறித்த டி-ஷர்ட்டுகளை அணிந்து, மலையில் தீபம் ஏற்ற வருவார்கள் என்பதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை.

மதுரை மக்கள் மட்டுமல்ல, உலக மக்களில் பலரையும் தீபம் ஏற்ற வரவழைப்பதற்கான ஆகச் சிறந்த வழி ஒன்றும் உள்ளது. அது.....

‘டி-ஷர்ட்’ என்றில்லை, ஆடையே இல்லாமல் உடம்பு முழுக்க, “குன்றில் தீபம் ஏற்றுவோம்” என்ற வாசகத்தை அழுத்தம் திருத்தமாக எழுதி, காணொலியில் பிறந்தமேனியாய்க் காட்சியளித்துப் பரப்புரை செய்வது!

ஹி... ஹி... ஹி!!! 

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

அமித்ஷா... அமைச்சனா அடாவடிச் சங்கிக் கும்பலின் தலைவனா?!

"நீதிபதி தீர்ப்புக் கொடுத்தார் என்பதற்காகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவந்தனர். இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பு நடந்தது இல்லை”[https://x.com/ThanthiTV/status/1998758732935893216].

மேற்கண்டவாறு கொந்தளிந்திருப்பவன் ஒரு தனி மனிதன் அல்ல; பொறுப்புணர்வும், அனைத்துத் தரப்பு மக்களையும் சமமாக மதிக்கும் மனப்பக்குவமும், நிதானப் புத்தியும் இல்லாத, இந்த பரந்த பெரிய நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

போகிறபோக்கில், “இது போன்ற சம்பவம் இதற்கு முன்பு நடந்ததில்லை” என்று பேசியிருக்கிற இவருக்குக் கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கும் அறிவு இருந்திருந்தால்.....

திருப்பரங்குன்றத்தில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்ட அனைத்து மரபுகளையும் அலட்சியப்படுத்தி, அரசுத் தரப்பையும், கோயில் நிர்வாகத்தையும் விசாரிக்காமல், சங்கிகளுக்குச் சாதகமானதும் மனசாட்சிக்குப் புறம்பானதுமான ஒரு தீர்ப்பை இதற்கு முன்பு எந்தவொரு நீதிபதியும்[அநீதிபதி?]  வழங்கியதில்லை என்பதை இந்த நபர் அமைச்சர் புரிந்துகொண்டிருப்பார்; மேற்கண்டவாறு பேசியிருக்கமாட்டார்.

நீதிபதி சாமிநாதன் மட்டுமல்ல, அமித்ஷாவைப் போல் தான்தோன்றித்தனமாய், ஒரு நடுவணரசின் அமைச்சர் இதற்கு முன்பு இப்படி நடந்துகொண்டதில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

பல்வேறு இனங்களை உள்ளடக்கிய இந்த இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்குக்குக் கேடு விளைவிக்கும் அடாத செயலை, இந்தச் சங்கிகளின் தலைவன் அமித்ஷா தொடங்கி வைத்திருக்கிறார் என்று தயங்காமல் சொல்லலாம்.

இனியொரு சுதந்திரத்தைப் பெற்றிட, சங்கிகள் அல்லாத தன்மானத் தலைவர்கள், உடனடியாக ஒருங்கிணைந்து போராட வேண்டிய நேரம் இதுவோ என்றும் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

சனி, 13 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றம்... இன்று ‘ஒரு நாள்’ உண்ணாவிரதம்! அடுத்து? அடுத்து? அடுத்து?

//திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உள்ளூர் மக்களில் ஒரு தரப்பினர்[50 பேர்] சார்பாக உண்ணாவிரதம்//*[செய்தி] 

உண்ணாவிரதத்திற்கு நீதிமன்றமே அனுமதி அளித்திருக்கிறது; ஆதரவாகவும் இருக்கிறது.

த.நா.அரசு அனுமதிக்காவிட்டால், அடுத்தடுத்தடுத்து, ஐயாயிரம் பேர், ஐம்பதாயிரம் பேர், ஐந்து லட்சம் பேர் என்று பெரும் எண்ணிக்கையிலான பக்தக்கோடிகள் உண்ணாவிரதம் இருப்பார்கள். பயந்தும் பணிந்தும் தர்க்காவுக்கு அருகே உள்ள தூணில்[தீபத் தூணோ அல்லவோ] தீபம் ஏற்ற அரசு அனுமதிக்கும்.

அடுத்து.....

தீபத் தூணுக்கு அருகே உயரமான இடத்தில் இஸ்லாமியர்களின் தர்கா இருக்கக் கூடாது. அதை அகற்ற வேண்டும் என்று, இந்தியா எங்கும் உள்ள பக்திமான்கள் திரண்டுவந்து, நீதிமன்ற அனுமதியுடன் ‘சாகும்வரை’ உண்ணாவிரதம் இருப்பார்கள்.

தர்கா அகற்றப்பட்டு அங்கு ராமச்சந்திர மூர்த்திக்கு மாளிகை எழுப்பப்படும்; திருப்பரங்குன்றத்திற்குப் பாலராமர் குன்றம் என்று புதிய நாமகரணம் சூட்டப்படும்[இதற்கும் உண்ணாவிரதம் இருப்பார்கள்].

அடுத்து.....

அவ்வப்போது இந்த நாட்டில் ஏற்படும் மதக் கலவரங்களுக்குக் காரணமாக இருக்கும் இஸ்லாமியரின் தர்காக்களோ மசூதிகளோ[+கிறித்தவர்களின் தேவாலயங்கள்?] இருத்தல் கூடாது என்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும். விளைவு.....

அனைத்துப் பிற மதத்தவர் வழிபாட்டுத் தலங்களும் அகற்றப்பட்டு, முழுக்க முழுக்க ஒரு ‘இந்து’ நாடாக இந்தியா காட்சியளிக்கும்; ஜொலிக்கும்.

அடுத்து.....

வேறென்ன, இந்தப் புண்ணிய ராமஜென்மப் பூமி மதக் கலவரங்களே இல்லாத அமைதிப் பூங்காவாகத் திகழும். கலவரங்களுக்கே இடம் தராமல் இந்து மக்கள்[அனைத்து இனத்தவரும் இந்துக்களாக மாறியிருப்பார்கள், அல்லது மாற்றப்பட்டிருப்பார்கள்] ஒற்றுமையுடன் சுபிட்சமாக வாழ்வார்கள்.
போற்றி போற்றி ராமச்சந்திர மூர்த்தி போற்றி!

வாழ்க... வளர்க... ராமஜென்மப் பூமி[‘இந்தியா’]! வெல்க ராமப்பிரானின் பக்தர்கள்!!
                                           
                                       *   *   *   *   *

வெள்ளி, 12 டிசம்பர், 2025

வீழ்கிறதா தமிழினம்? ஆளவிருக்கிறார்களா ஆதிக்க வெறியர்கள், அடிமைகளின் ஆதரவுடன்?!

//டிச13இல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு சங்கிகள் அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், மனுதாரர் கோரும் இடத்திற்குப் பதிலாக மாற்று இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்; உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.//

திருப்பரங்குன்றம் பிரச்சினை குறித்து உயர் நீதிமன்றத்தில்[மதுரைக் கிளை] விசாரணை நடப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன[விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது].

விசாரணை முற்றுப்பெற்றுத் தீர்ப்பு வெளியாகாத நிலையில், மேற்கண்ட செய்தி[டிசம்பர் 13இல் உண்ணாவிரதம்> மனு> அனுமதி] வெளியாகியிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

சட்டம், ஒழுங்கு, கட்டுப்பாடு எல்லாம் பொதுமக்களுக்கு[சங்கிகள் & நீதிபதிகள் விதிவிலக்கு] மட்டும்தானா என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

அதற்கான பதில் என்னவாக இருந்தபோதிலும், சங்கித் தலைவர்களின் சூழ்ச்சி இதில் சம்பந்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது.

அது.....

கார்த்திகைத் தீபத்தின் பெயரால், தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்கி, தமிழ்நாட்டில் ‘திமுக.’ ஆட்சியைக் கலைத்து, மீண்டும் ஆட்சிக்குவராமல் தடுத்து, தமிழினத்தை அடிமைப்படுத்துவதுதான், இங்குள்ள அடிமைகளின் ஆதரவோடு.

அத்தனை அதிகாரங்களும் ‘அவர்கள்’ கையில் இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

* * * * *

https://www.hindutamil.in/news/tamilnadu/fast-unto-death-on-december-13th-demanding-the-lighting-of-the-lamp-at-the-lamp-post-in-thiruparankundram-high-court-grants-permission

வியாழன், 11 டிசம்பர், 2025

பாரதியின் ‘பகற்கனவு’ பலிக்குமா? எப்போது?

“தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி.

கோடிக்கணக்கில் மனிதர்கள் வாழும் உலகில் ஒரே ஒருவனுக்கு உணவில்லை என்பதற்காக, ஒட்டுமொத்த உலகையும் அழிப்பதென்பது அறிவுடைமை ஆகுமா?

அறிவுடைமை ஆகாது என்பது பாரதிக்கும் தெரிந்திருக்கும்.

பட்டினிச் சாவின் கொடூரத்தை முழுமையாக அனுமானித்ததன் விளைவாகவே இப்படிப் பொங்கியிருக்கிறார்.

ஒரு தனி மனிதன் முதுமை காரணமாகவோ, தீராத நோய்களின் தாக்குதல் காரணமாகவோ மரணிப்பதை எவராலும் தடுக்க இயலாது. ஆனால், பட்டினியால் சாவதைத் தடுப்பது சாத்தியம்.

மனித இனம் அதைத் தன் தலையாய கடமையாகக் கருதிச் செயல்படுதல் வேண்டும்.  செயல்படத் தவறினால், அது இருந்துகொண்டிருப்பதைக் காட்டிலும் அழிவதே மேல் என்பது பாரதியின் எண்ணம். எனவேதான்.....

“ஜகத்தினை அழித்திடுவோம்” என்று கொந்தளித்துக் குமுறியிருக்கிறார்.

அந்தப் பாரதி இன்று இல்லை.

ஆனாலும், அவர் விட்டுச்சென்ற அக்கினி வார்த்தைகள் உயிர்ப்புடன் இருப்பதால், காலப்போக்கில் புரட்சி மனம் படைத்தப் புதியப் புதியப் பாரதிகள் தோன்றுவார்கள்; “பட்டினிச் சாவு இல்லாத புதியதோர் உலகம் செய்வோம்” என்று விண்ணதிர முழக்கமிடுவார்கள்.

இது மக்கள் அனைவரின் மனங்களிலும் எதிரொலிக்கும்.

ஆதிக்க வெறி, மத வெறி, பக்தி வெறி, இன வெறி என்று மனித இனத்தைச் சீரழிக்கும் வெறித்தனங்கள் அழிந்தொழிய, மனித நேயமும், உயர் பண்புகளும், நற்குணங்களும் செழித்து வளரும்.

இதன் விளைவாக, உண்ண உணவில்லை என்று எவரும் வருந்தும் அவலம் இல்லாமல்போகும். ‘பட்டினிச் சாவு’ என்பது மனித இனம் அறிந்திராத  ஒன்றாக ஆகும்.

மனிதாபிமானக் கவிஞன் பாரதியின் நினைவு மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருப்பதாக!
                                   *   *   *   *   *
***சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882[பிறந்த நாள்] – 11 செப்டம்பர் 1921[விக்கிப்பீடியா].

புதன், 10 டிசம்பர், 2025

வாக்குத் திருடர்களை விரட்டியடிக்க ஒருங்கிணைந்து முழங்குவீர் “வந்தேமாதரம்”!

‘வந்தேமாதரம்’{தாயே[இந்தியா] வணங்குகிறோம்} தொடர்பான விவாதம் ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெறுகிறது.*

விவாதத்தின் முடிவு எதுவாயினும், நம்மை அடக்கி ஆண்ட ஆங்கிலேயரை விரட்டியடிக்க வந்தேமாதரமும் பயன்பட்டது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால்,

ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றுச் சுதந்திர நாடாக ஆன இந்தியாவை, பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக வாக்குத் திருடர்கள்[நிரூபணம்: ராகுல்காந்தி] கைப்பற்றி ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.

தங்களின் ஆதிக்கம் தொடர்வதற்காக, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவற்றைத் தம் வசப்படுத்தி, தங்களின் அடாவடித்தனங்களைக் கண்டிக்கும் எதிர்க்கட்சியினரைப் பலவீனப்படுத்துதல் மட்டுமல்லாமல், மாநிலங்களின் உரிமைகளைப் பறித்தல், இந்தியைத் திணித்து மாநில மொழிகளை அழித்தல் போன்ற அட்டூழியங்களைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

அவர்களை இந்த மண்ணைவிட்டே விரட்டியடிக்க, ஆங்கிலேயரை விரட்டியடிக்கப் பயன்பட்ட அதே ‘வந்தேமாதரம்’ முழக்கம் இனியும் தேவைப்படுகிறது.

எனவே முழங்குவீர், “வந்தேமாதரம்... வந்தேமாதரம்... வந்தேமாதரம்”! 

*https://www.msn.com/en-in/news/india/amit-shah-hits-back-at-priyanka-gandhi-for-tying-vande-mataram-debate-to-bengal-polls-nobody-is-scared-of/ar-AA1RZJEu?ocid=msedgdhp&pc=NMTS&cvid=a32bfe8cf6f04524b8bb99410889bd3e&ei=14

செவ்வாய், 9 டிசம்பர், 2025

பொல்லாத வெறிநாய்க் கடி நோய்(Rabies) இல்லாத நாள் வருமா?

இன்றளவும் 'வெறிநாய்'க் கடிக்கு ஆளாகி இறப்போர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஆயினும், இது குறித்த விழிப்புணர்வு நம் மக்களிடம் போதுமான அளவு இல்லை என்றே சொல்லலாம்.

எனவே, வெறிநாயிடம் தென்படும் அற்குறிகளை அனைவரும் அறிந்துகொண்டிருப்பது மிக மிக அவசியம்.

அறிகுறிகள்:

*ரேபிஸ்(Rabies) கிருமிகளால் தாக்கப்பட்ட நாய் காரணம் இல்லாமலே குரைக்கும். அது ஊளையிடுவதுபோல் இருக்கும்.

*ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும்.

*காண்போரையெல்லாம் துரத்திக் கடிக்கவரும்.

*அதன் நாக்கு வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் தொங்கிக்கொண்டிருக்கும்.

*அதன் வாயிலிருந்து எந்நேரமும் எச்சில் ஒழுகியவாறிருக்கும்.

*சில வெறிநாய்கள் தெருமுனைகளில் தனியாகவும் அமைதியாகவும் இருப்பதுண்டு.

*உணவு உண்ணாது; இந்நாய் பெரும்பாலும் 10 நாட்களில் இறந்துவிடும்.

இந்த அறிகுறிகளைக் கண்டிப்பாகச் சிறுவர் சிறுமியரிடம் சொல்லி எச்சரிக்கை செய்வது பெற்றோரின் தலையாய கடமை ஆகும்.

'வெறிநாய்'க் கடி குறித்த சில செய்திகள்:

*வெறிநாய் கடித்தால், ரேபிஸ்(Rabies) நோயின் அறிகுறிகள் 5 நாட்களுக்குப் பின்னர் தெரியவரும்; 90 நாட்களுக்குப் பிறகும்கூடத் தென்படலாம்.

*இதன் முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி உண்டாகும்; காய்ச்சல் அடிக்கும்; வந்தி வரும்; உணவு உண்ண இயலாது.

*நோய் தாக்கியவர்களுக்கு ‘விழுங்கு தசை’கள்[தொண்டையில்] இறுக்கமடைவதால், சுவாசம் நிற்கிற உணர்வு ஏற்படும். உயிர்போகுமோ என்னும் அச்சத்தில் நோய் பாதித்தவர்கள் தண்ணீர் குடிக்கமாட்டார்கள்[இதற்கு ‘ஹைட்ரோபோபியா’ என்று பெயர்].

நோய் வரும் வழி:

வெறிநாயின் உமிழ்நீரில் ரேபிஸ்(Rabies) வைரஸ்கள் இருக்கும். அது மனிதரைக் கடிக்கும்போது, காயத்தின் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் புகுந்துவிடும். 

சிகிச்சை:

முன்பெல்லாம் தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போடுவார்கள். இப்போதெல்லாம் நவீனத் தடுப்பூசிகள் வந்துவிட்டன. ஐந்தே ஊசிகளில்[தவணைகளில்] ரேபிஸ்(Rabies) நோய் தாக்காமல் தடுத்துவிடுகிறார்கள்.

                             *   *   *   *   *

***மேற்கண்ட குறிப்புகள் மருத்துவ இதழொன்றில் இடம்பெற்றவை.

திங்கள், 8 டிசம்பர், 2025

இப் பகிர்வு ‘நீதிப்பேரரசர்’ ஜி.ஆர்.சாமிநாதன் பார்வைக்குப் பணிந்தனுப்பப்படுகிறது!

மிகப் பெரும்பான்மை மக்களை[மெத்தப் படித்துச் சட்டத்திட்டங்களை அறிந்தவர்கள் உட்பட] எவ்வாறெல்லாமோ ஆட்டிப்படைத்துப் பெரும் தீங்கு விளைவிக்கும் மூடநம்பிக்கைகளை, சாமானியர்கள் சாடி எழுதினால் கண்டுகொள்வாரில்லை.

ஏதேனும் ஒரு வகையில் பிரபலமாகிப் பலராலும் அறியப்பட்டவர்கள் அவற்றைக் கண்டித்தால், அது மிக எளிதாக மக்களைச் சென்றடையும்.

நாளிதழில் வெளியான, மிகு மதிப்பிற்குரிய ஒரு முன்னாள் நீதிபதியின் இது குறித்த உரை[நகல் பதிவு] இங்கே பகிரப்படுகிறது, கணிசமான அளவிலேனும் இது முட்டாள்களைத் திருத்தும் என்னும் நம்பிக்கையுடன்.


ஞாயிறு, 7 டிசம்பர், 2025

தேனாறும் பாலாறும் ஓட 11,000 ஆண்டுகள் அயோத்தியை ஆண்டானா ராமன்!?!?!

//தமிழகத்தில் ராமர் ஆட்சி மலரும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் நிறையக் கட்சிகள் சேரும். நிச்சயம் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்//[இந்து தமிழ்*]

நாகேந்திரனாரிடம், ராமன் குறித்த பல சந்தேகங்களில் சிலவற்றை மட்டும் பட்டியலிடுகிறோம்.

*ராமன் திரேதா யுகத்தில் 12,00,000[பன்னிரண்டு லட்சம்] ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தான் என்கிறார்கள் அயோத்தி ராமனின் அடிமைகள். சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான வரலாற்று நிகழ்வுகளுக்கே போதிய ஆதாரம் இல்லாத நிலையில் 12,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இவன் பிறந்தான் என்பதற்கு உரிய ஆதாரங்களைப் பட்டியலிடுங்கள் நயினாரே. இவன் எப்படி ஆட்சி புரிந்தான் என்பதை ஆராய்வது அப்புறம்.

*வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8, சுலோகம் 12ஐ ஆதாரமாகக் காட்டி, ராமன் பல பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருந்தான் என்னும் செய்தி ஏற்கனவே சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது[http://www.ttamil.com/2020/03/blog-post_3.html]. இதை மறுப்பதற்கான ஆதாரம் ஏதும் உம்மிடம் உள்ளதா?

*11,000[பதினோராயிரம்] ஆண்டுகள் அவன் ஆண்டதாகவும் கதைத்திருக்கிறார்கள் புளுகர்கள். 12,00,000 ஆண்டுகளுக்கு முன்பாகட்டும் பின்னராகட்டும் ஒரு மனிதன்[கடவுள் அவதாரம் என்னும் கதையெல்லாம் வேண்டாம்] இத்தனை ஆண்டுகள் வாழ்வது சாத்தியமா என்பது பற்றியும் சிந்தியும். ஆழ்ந்து சிந்திக்கத் தெரியாதென்றால் ராம ராஜ்ஜியம், லட்சுமணன் ராஜ்ஜியம் என்று இனியும் உளறாதீர்.

*உம்முடைய ஆறு அறிவுகளையும் பயன்படுத்தி மேற்கண்ட கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் பதிலளிக்க இயலுமா என்று யோசியும் நயினாரே.

தேவைப்பட்டால் ராமன் ஆட்சிபுரிந்து சாதித்துக் கிழித்தவை பற்றிப் பின்னர் ஆராய்வோம்.

* * * * *

*https://www.hindutamil.in/news/tamilnadu/nainar-nagenthran-slams-dmk?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCb3pQLMJCpqgMwjObsBA&utm_content=rundown

அன்று நிகழ்ந்த ‘அந்த’த் தவறுதான் இன்று சங்கிகளின் ஆதிக்கத்திற்கு வழிகோலியது!

ங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுக்கப் பாடுபட்ட தலைவர்களில் பலரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகவே இருந்தார்கள்.

காந்தி தீவிர ராமபக்தர். ராஜாஜியும் கடவுள் பக்தரே.

சர்தார் வல்லபாய்ப் படேல் பகுத்தறிவாளர் & மதச்சார்பற்றவர் என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்து மதத்தின் மீது ஆழ்ந்த பற்றுக்கொண்டவர்.

ஜவகர்லால் நேரு மட்டுமே வாழ்நாளெல்லாம் கடவுள் நம்பிக்கை அற்றவராக, அதாவது நாத்திகராக வாழ்ந்தவர்.

மேற்கண்டவர்களும் பிற தலைவர்களும் முழுக் கவனத்தையும் நாடு சுதந்திரம் பெறுவதில் செலுத்தினார்களே தவிர, இந்த நாட்டு மக்களை ஆட்டிப்படைத்த மூடநம்பிக்கைகளை ஒழிப்பதில் எள்ளளவும் முயற்சி மேற்கொள்ளவில்லை.

ஆகச் சிறந்த பகுத்தறிவாளரான நேரு, நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் மூடநம்பிக்கை ஒழிப்பில் கவனம் செலுத்தாத நிலையில், போராட்டங்களில் பங்கு பெற்ற பெரியார் மட்டுமே மூடநம்பிக்கை ஒழிப்பில் அதி தீவிரமாக ஈடுபட்டார்.

இடைக்காலத்தில் புற்றீசலாகப் பெருகிய புராணங்களாலும் இதிகாசங்களாலும், மக்கள் மனங்களில் வேரூன்றிவிட்ட மூடத்தனங்களை ஒழிப்பதில் பெரியாரால் ஓரளவுக்கு மட்டுமே வெற்றிபெற முடிந்தது.

‘ஈவெரா’ பெரியாரைப் போல இன்னும் சில பெரியார்களேனும் இந்த நாட்டில் உருவாகியிருந்திருந்தால், மக்களில் பெரும்பான்மையோரை மூடநம்பிக்கைகளின் அழுத்தமான பிடியிலிருந்து விடுவித்திருப்பார்கள்.

இந்தியாவிற்கான கேடுகாலமோ என்னவோ அது நிகழவில்லை.

அது நிகழாததால், புராணக் கதைகளில் இடம்பெற்றுள்ள மாந்தர்களையே கடவுள்கள் ஆக்கி, அவர்களுக்குக் கோயில்கள் எழுப்பியும் விழாக்கள் நடத்தியும், மதவெறியைத் தூண்டியும் பெரும்பான்மை மக்களைக் கவர்ந்து, சங்கிகள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்; இன்றளவும் அதைத் தக்கவைத்திருக்கிறார்கள்.

மக்கள் பகுத்தறிவாளர்களாக ஆக்கம்பெற்றால், அல்லது ஆக்கப்பட்டால் மட்டுமே சுயநலச் சங்கிகளின் பிடியிலிருந்து இந்த நாட்டை விடுவிப்பது சாத்தியமாகும். 

மோடி காட்டில் மழை! அது 2047வரை தொடர்ந்து பெய்யும்?

சனி, 6 டிசம்பர், 2025

”சாமியே சரணம் ஐயப்பா”... அவனின் ஆபாசக் கதை அறியாத அப்பாவிப் பக்தர்களுக்கு...

லை அலையாய்ச் சபரிமலை நோக்கிப் பக்தர்கள் பயணிப்பதும், அவ்வப்போது[அடிக்கடி?] வாகனங்கள் விபத்துக்குள்ளாகி, சிலரோ பலரோ மரணத்தைத் தழுவுவதும் வழக்கமாகிவிட்ட நிகழ்வாகும்.

காரணம், அவர்கள் ஐயப்பனின் பிறப்பு குறித்து அறிந்துகொள்ளாமலோ, அது குறித்துச் சிந்திக்காமலோ இருப்பதுதான். 

கதை தெரிந்தால் அவர்களில் சிலரேனும் திருந்துவார்கள் என்னும் நப்பாசையில் அது இங்குப் பதிவு செய்யப்படுகிறது[கதை தெரிந்தும் சிந்தித்துத் திருந்தாத செம்மறிக் கூட்டம் நமக்கு ஒரு பொருட்டல்ல].

கதை:

ரக்கன் ஒருவன்[பஸ்மாசுரன்] சிவபெருமானை வழிபட்டு ஆண்டுக்கணக்கில் தவம் இருந்தான்.

தவத்தை மெச்சிய அப்பாவிப் பரமசிவன், “நீ விரும்பும் வரத்தைக் கேள்” என்று சொல்ல, “நான் யார் தலையில் கை வைத்தாலும் அது வெடித்துச் சிதற வேண்டும்” என்று அவன் கோரிக்கை வைக்க, இந்தச் சாமியும் அந்த வரத்தைக் கொடுக்க, சோதித்துப் பார்க்கிறேன்” என்று சொல்லி, இவரின் தலையில் கைவைக்க முயன்றான் அரக்கன்.

தன் தவற்றைத் தாமதமாகப் புரிந்துகொண்ட இவர் தன் உயிரைக் காத்துக்கொள்ள அண்டவெளியில் ஓடுகிறார். அரக்கன் விரட்டுகிறான். அவர் அயராமல் ஓடுகிறார். அரக்கன் விடாமல் துரத்துகிறான்.

இந்த இருவரின் ஓட்டத்தால் அண்டவெளியே அதிருகிறது.

இந்த அவல நிகழ்வைத் தேவலோகத்திலிருந்து வேடிக்கை பார்த்த முப்பத்து முக்கோடித் தேவர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் விஷ்ணு பகவானைத்  தேடிப்போய் சிவனைக் காப்பாற்றுமாறு முறையிடுகிறார்கள்.

காக்கும் கடவுளான விஷ்ணுக் கடவுள் பேரழகியாக[மோகினி] வடிவெடுத்து, சிவனை விரட்டிச் செல்லும் அரக்கன் முன் தோன்றி, கவர்ச்சி காட்டி நடனமாடினார்[ள்]

மோகினியை மோகித்த அரக்கன் கட்டுக்கடங்காத காம வெறியுடன் அவளைத் தழுவிச் சுகம் காண முற்பட்டபோது, “உன் உடம்பு நாறுகிறது, அழுக்குப்போக நீராடிவிட்டு என்னுடன் சல்லாபிக்க வா” என்று மோகினி சொல்ல, புத்தி கெட்ட அந்தப் பொல்லாத அரக்கன் நீர்நிலையைத் தேடுகிறான்; எதுவும் தென்படவில்லை[மாயவன் விஷ்ணு நிகழ்த்திய மாயாஜாலம் அது].

அரக்கன் அது குறித்து மோகினியிடம் முறையிட, அவளு[ரு]ம், “குளிக்காவிட்டால் பரவாயில்லை. கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால் தலையில் தடவி வா என்று சொன்னதோடு, சிறிது தொலைவில் கையளவுக் குழியில் கொஞ்சமே கொஞ்சம் தண்ணீரைத் தேக்கிவைத்தாள்[ர்]. 

மாயவன் செய்த சூது அறியாத அந்தக் காமுகன் கையளவு நீரை அள்ளித் தன் தலையில் தேய்க்க அவன் தலை வெடித்துச் சிதறியது[மாறுபட்ட நிகழ்வுகளுடனான கதைகளும் உள்ளன].

இதற்குப் பிறகுதான் அந்த அசிங்கம் அரங்கேறியது.

விஷ்ணு நடத்திய லீலையை, மறைந்திருந்து மனம் பதறப் பார்த்துக்கொண்டிருந்த பரமேஸ்வரக் கடவுள், அழகி மோகினி உருவில் இருப்பவர் சக கடவுளான விஷ்ணு என்பதை மறந்து அவரைக் கட்டித்தழுவி உடலுறவு கொண்டார்[ஆனானப்பட்ட முழுமுதல் கடவுளாலேயே காமத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அடக்கடவுளே!]; அய்யப்பன் பிறந்தார்[//மோகினி அவதாரத்தினை விஷ்ணு மீண்டும் எடுத்தார். அத்துடன் ஒரு வனத்தில் சென்று மறைந்தார். மோகினியைக் காணச் சென்ற சிவபெருமான் வனத்தின் ஒரு மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்த மோகினியைக் கண்டார். அவருக்கு மோகம் வந்தது. உடனிருக்கும் பார்வதியை மறந்து மோகினியை அடைய எண்ணினார்; மோகினியுடன் அவர்[சிவன்] உடலுறவு கொண்டார். அவர்களுக்குப் பிறந்தவரே ஐயப்பன் ஆவார்//[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF]

வெள்ளி, 5 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றம்... தீர்ப்பளித்த சுவாமிநாதனும் தமிமுன் அன்சாரியின் 'அடடா' விமர்சனமும்!

//திருப்பரங்குன்றத்தில் கார்த்திகைத் தீபம் ஏற்றும் பிரச்சினையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பைக் கண்டிக்கும் வகையில், ‘விசிக எம்எல்ஏ’ தமிமுன் அன்சாரி, மாதவி நீதிபதியாக இருக்கும் இடத்தில் கண்ணகிக்கு நீதி கிடைக்காது என்றும், எழுதுகோலில் நீல நிற மை இருக்கலாம்; காவி இருக்கக் கூடாது என்றும் ‘கடுமையாக’ விமர்சித்துள்ளார்// என்கிறது ஊடகச் செய்தி*

இந்தக் கடுமையான விமர்சனத்திற்கு 'நீதிப் பேரரசர்' ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆற்றவுள்ள எதிர்வினை என்னவாக இருக்கும்?

என்னவாகவோ இருக்கட்டும். அதை அறியும் ஆர்வம் அடியேனுக்கு உள்ளது எனினும், தமிமுன் அன்சாரியின் அற்புதமான கவிநயம் மிளிரும் அந்தக் கற்கண்டு நடைத் தமிழை வெகுவாக ரசித்தேன்; மகிழ்ந்தேன்.


மீண்டும் மீண்டும் வாசித்து மகிழத் தூண்டும் அந்த வாசகம்;


“மாதவி நீதிபதியாக இருக்கும் இடத்தில் கண்ணகிக்கு நீதி கிடைக்காது. எழுதுகோலில் நீல நிற மை இருக்கலாம்! காவி இருக்கக் கூடாது.”

                                         *   *   *   *   *

*https://tamil.oneindia.com/news/madurai/tamimun-ansari-attacks-judge-gr-swaminathan-over-lamp-at-the-thiruparankundram-temple-755755.html?ref_source=OI-TA&ref_medium=Article-Page&ref_campaign=Deep-Links