கள்ள உடலுறவுக்கு இடையூறாக உள்ளது என்று தான் பெற்ற குழந்தையைத் தாயே கொன்றுவிடுவதும், கள்ளத்தனமாய்க் காம சுகம் தருபவன் மூலம் அதைச் செய்துமுடிப்பதும் நம் புனித மண்ணில் அடிக்கடி நிகழ்ந்துகொண்டிருப்பதை ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. இதற்கு மேற்கண்ட அண்மை நிகழ்வும் ஒரு சான்றாகும்.
ஒத்த மனமும், ஒத்த உடலமைப்பும் ஒத்த புரிந்துணர்வும் இருபாலருக்கும் ஏற்ற வகையில் அமையாதபோது, கணவன் மனைவி என்னும் இருவரில் ஒருவரோ இருவருமோ திருட்டுத்தனமாகப் புணர்ச்சி சுகத்தை நாடுவது உலக வழக்கமாக உள்ளது.
இந்த ஒழுக்கக்கேட்டைத்[?] தவிர்ப்பதற்காக அறிஞர்கள் வகுத்துத்தந்த எந்தவொரு நெறிமுறையும் உரிய அளவில் பலன் தந்ததாகத் தெரியவில்லை.
இம்மாதிரி நிகழ்வுகளை அறிய நேரும்போது என்னை வியப்பில் ஆழ்த்தும் மிகப் பெரிய ஐயம் என்னவென்றால்.....
கள்ளத்தனமாய்க் காம இன்பம் அனுபவிப்பவர்கள், உண்ணும் நேரம் உறங்கும் நேரம் நீங்கலாக நாள்முழுக்கக் கட்டிப் பிடித்துக்கொண்டே படுத்திருப்பார்களா? குழந்தை அழுகிற கொஞ்ச நேரம்கூட அந்த ஆசையைக் கட்டுப்படுத்த இயலாதா?
கார்காலம் வந்தால் உண்ணுதலைக்கூடப் புறக்கணித்துப் புணர்ச்சி வெறியுடன் அலையும் கடுவன் நாய்களுக்கும் இவர்களுக்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லையே!
=======================================================================















![à®à®¾à®®à®®à¯ பà¯à®²à¯à®²à®¾à®¤à®¤à¯: பாலà¯à®£à®°à¯à®µà¯à®à¯ à®à®¿à®±à¯à®à®¤à¯à®à®³à¯ (Tamil Edition) by ['பà®à®¿'பரமà®à®¿à®µà®®à¯]](https://images-eu.ssl-images-amazon.com/images/I/41OYKcLdzEL.jpg)
