வெள்ளி, 31 ஜனவரி, 2025

‘லட்சுமி’ சாமிக்கும் கோயில் கட்டுங்க பிரதமரே!!!

#ழைகளுக்குத் தேவையான செல்வங்களை வழங்க லட்சுமி தேவி[கடவுள் ராமச்சந்திர மூர்த்தியின் துணைவியார்]யைப் பிரார்த்தனை செய்வதாகப் பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த PM மோடி கூறினார்#[https://www.kuttramkuttrame.com/2025/01/31/i-want-the-poor-to-get-wealth-modi/].

உலகெங்கும் பக்தி நெறி பரப்புவதற்கென்றே இவ்வுலகுக்கு அனுப்பப்பட்ட, கடவுளின் மறு பிரதியான அருள்மிகு மோடிப் பெருமகனார், நம் நாட்டிலுள்ள கோடானுகோடி எழைகளுக்கு அனைத்துச் செல்வங்களையும் வாரி வாரி வழங்குமாறு லட்சுமி தேவியைப் பிரார்த்தனை செய்திருப்பது நம் நெஞ்சங்களில் குடம் குடமாக அமிழ்தத்தை இட்டு நிரப்பியிருக்கிறது.

வேண்டிக்கொண்டதோடு அமையாமல், கோடி கோடி கோடிகள் செலவில், பாலராமருக்குக் கோயில் கட்டி பெருந்தொண்டு புரிந்தது போல், லட்சுமி தேவிக்கும் அதனினும் பன்மடங்கு கூடுதல் செலவில் கோயில் எழுப்பித் தெய்வத் திருப்பணி ஆற்றிட வேண்டும் என்று அன்னாரின் திருவடி தொழுது வேண்டுகோள் வைக்கிறோம்.

வாழ்க அருளாளர் மோடி! தொடர்க அவரின் தெய்வத் திருப்பணி!!


சீமானின் அடுத்தப் ‘புதிய’ கட்சி ‘நாம் நாடார்’!!!

ரோடு சட்டமன்ற இடைத் தேர்தல் பரப்புரையில், பெரியாரை மிக அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பழிதூற்றும் தமிழினத்தின் எதிரியான நச்சு மனத்தவன்[பெரியாரை அவமரியாதை செய்யும் இவனுக்கு மரியாதை தருவது தவறு] சீமான், கலைஞர் கருணாநிதியின் மகளான கனிமொழி குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், அவரை ‘நாடார்’ சாதியுடன்[இவனின் சாதி] தொடர்புபடுத்தியிருக்கிறான்[https://tamil.oneindia.com]

இவனைக் கூலிக்காரன் என்ற கனிமொழியை, ‘கூலிக்காரி’ என்றோ வேறு அடைமொழி கொடுத்தோ சாடியிருக்கலாம். அதை விடுத்து, அவசியமே இல்லாமல் தன் சாதியை[நாடார்] அவருடன் தொடர்புபடுத்தியிருக்கிறான் இவன்*.

உள்நோக்கத்துடன் இந்த இழிசெயலைச் செய்த இவன், ஈரோடு தேர்தலில் இவன் கட்சி படுதோல்வி அடையுமேயானால், பெரியாரை மிகக் கீழ்த்தரமாக விமர்சித்ததால் தமிழர்கள் இவனுக்குப் பாடம் கற்பித்தார்கள் என்பதைப் புரிந்துகொள்வான்.

இனியும் ‘தமிழ், தமிழர்’ என்று கூவித் திரிவதால் பயன் ஏதும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, ‘நாம் நாடார்’ என்னும் பெயரில் ஒரு புதியக் கட்சி தொடங்கி, அநாகரிக அரசியல் நடத்துவான் இவன் என்று உறுதிபடச் சொல்லலாம்.

இவனை ஏற்கனவே புரிந்துவைத்திருக்கும் நாடார் இன மக்கள் இவனை ஆதரிக்க மாட்டார்கள் என்பதால்.....

அடுத்த முயற்சியாக, ‘நாம் கிறிஸ்தவர்’ என்னும் பெயரில் ஒரு புதிய கட்சியை இவன் தொடங்குவான் சைமன் என்னும் கிறித்தவனாக.

ஒரு கிறித்தவனாக இருந்தும் தேர்தல்களில் ஓட்டுப் பொறுக்குவதற்காக, நெற்றியில் திருநீறு பூசிப் பொட்டு வைத்து மக்களை முட்டாள்கள் ஆக்கும் இவனின் பச்சோந்தித்தனத்தைக் கிறித்தவர்கள் நன்கு அறிந்திருப்பதால் அவர்களிடமும் இவனின் ‘பருப்பு’ வேகாது.

அப்புறம்.....

வேற்று வழியே இல்லாமல், ‘நாம் பைத்தியம்’ என்னும் பெயரில் கட்சி ஆரம்பித்து, தேர்தல் வரும்போதெல்லாம் மேடையேறி, கை தட்டிச் சொடக்குப் போட்டு, முஷ்டி உயர்த்தி, “ஆதரிப்பீர் பைத்தியங்களை” என்று வெறிக் கூச்சல் எழுப்பிக் கூடியிருப்போருக்கு வேடிக்கை காட்டித் திரிவான் இந்தக் கோமாளி என்பதில் கிஞ்சித்தும் சந்தேகத்திற்கு இடமில்லை!

* * * * *

*பெரியார் விவகாரத்தில் சீமானை மறைமுகமாகக் கூலிக்காரர் என்று கனிமொழி எம்.பி., விமர்சித்திருந்தார். இதற்கு, ‛‛உங்க அப்பா தான் பெரிய கூலி. சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு உன் கொள்கை என்றால் நீ ஏன் தூத்துக்குடியில் 2 முறை போட்டியிட்டாய்? கனிமொழி நாடார் என்றால் உதயநிதி ஸ்டாலின், முக தமிழரசு எல்லாரும் நாடார்தானே. ஒரு அப்பாவுக்கு 2 ஜாதி இருக்குமா?'' என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்[https://tamil.oneindia.com/news/erode/what-is-the-caste-of-kanimozhi-seeman-asks-675757.html]


வியாழன், 30 ஜனவரி, 2025

கும்பமேளா... 40[+] பேர் பலி! வருந்த வேண்டாம்... வாழ்த்துங்கள் மோடி!!

1954 கும்பமேளாவில்[உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில்] புனித நீரில் மூழ்கிப் புண்ணியம் சம்பாதிப்பதற்குப் பதிலாக, கங்காதேவிக்குத் தங்களின் அரிய உயிரைப் பலிகொடுத்தவர்கள் 800 பேர்!

ஒரு பட்டியல்:

1954இல்..... 800 பேர்.

1986இல்..... 200 பேர்; 

2003இல்..... 100 பேர்; 

2013இல்..... 42 பேர்; 

2025இல்..... 40[எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது].

காயமடைந்தோர்[படுகாயம் உட்பட] இதனினும் மிக அதிகம் என்பது உறுதி.

ஒவ்வொரு கும்பமேளா[விழா]விலும் இந்த அவலம்[உயிரிழப்பு கூடவோ குறைவாகவோ] நேர்கிறது என்பது தெரிந்திருந்தும்.....

பக்தர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதோடு, புனித நீராடலுக்கு அனுமதி வழங்குவதில் மிகக் கடுமையான நெறிமுறைகளைச் செயல்படுத்துவதற்கு மாறாக.....

புனித நீராடுவதால் புண்ணியம் கிடைக்கும், சொர்க்கம் கிட்டும் என்றெல்லாம் பரப்புரை செய்தார்கள் இன்றைய ஆட்சியாளர்கள்; பிரயாக்ராஜ் செல்லும்  வழியெங்கும் பக்தர்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் செய்து தந்ததோடு,[650 கிலோமீட்டர்(403 மைல்களுக்குத் தற்காலிகச் சாலைகள் போடப்பட்டன; பல்லாயிரக்கணக்கான கூடாரங்கள் மற்றும் கழிப்பறைகளை அமைக்கப்பட்டுள்ளன> உ.பி.அமைச்சர்]இலவச ரயில் பயணத்துக்கும்[தென்னிந்தியாவில் சில வழித்தடங்களில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, ரயில்கள் அங்கு அனுப்பப்பட்டன] ஏற்பாடு செய்தார்கள். விளைவு, கோடிக்கணக்கில்[10 கோடிக்கும் மேல்] கும்பமேளாவில் பக்தர்கள் கலந்துகொள்வது தவிர்க்க இயலாததாயிற்று.

விளைவு, பக்தர்கள் பலரின் உயிரிழப்பு. உ.பி.மாநில அமைச்சர் ஒருவர் இதை, ‘சிறிய சம்பவங்கள்’ என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 

நாட்டை ஆளுகிற நரேந்திர மோடியும் அமித்ஷா உள்ளிட்ட அவரின் சகாக்களும் இம்மாதிரி நிகழ்வுகளின் மூலம், சிறிதளவும் சிந்திக்கத் தெரியாத மூடப் பக்தர்களின் எண்ணிக்கையைப் பெருமளவில் அதிகரித்துத் தங்களுக்கான ஆதரவாளர்கள் கூட்டத்தைப் பன்மடங்காக்குகிறார்கள்.

‘பிணங்கள் மிதக்கிற கங்கை நீர் எப்படிப் புனிதமானதாகும்? அதில் குளித்தால் பாவம் நீங்கிப் புண்ணியம் சேர்வது உண்மையா?’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டு மக்களைச் சிந்திக்கத் தூண்டும் உயர் குணம் இவர்களுக்கு இல்லை.

வானத்திலிருந்து அமிர்தத் துளிகள் சிந்தின; அவை கங்கா தீர்த்தத்தில் கலந்துள்ளன; அதில் நீராடினால் பாவங்கள் தீரும்[புராணப் புளுகு] என்றிப்படிக் அயோக்கியர் கட்டிவிட்ட கதைகளை நம்புகிறவர்களைத் திருத்தும் நல்லெண்ணம்  மோடி, அமித்ஷா வகையறாக்களுக்கு இல்லவே இல்லை.

இறந்தவர்களுக்காக இவர்கள் இரங்கல் தெரிவிக்கிறார்களாம்.

இரங்கல் எதற்கு? இறந்தவர்கள் எல்லாம் புண்ணியம் சம்பாதித்துச் சொர்க்கம் சேர்ந்திருப்பார்கள். அதற்காக மகிழ்ச்சி அல்லவா தெரிவிக்க வேண்டும்.

இறந்தவர்கள் பெருமளவில் பாவம் செய்தவர்கள். அதனால்தான் பரிதாபமாக உயிரிழந்தார்கள் என்றுகூடச் சொல்வார்களோ?

கீழே உள்ள நகல் பதிவின் உள்ளடக்கதை வாசியுங்கள். கும்பமேளாவில் புனித நீரில் குளிக்கப்போகிறவர்கள் எத்தனைக் கல் நெஞ்சர்கள் என்பது புரியும்.

இம்மாதிரிப் பதிவுகளை மிகுந்த தயக்கத்துடன்தான் எழுதவேண்டியள்ளது. காரணம்.....

பக்தியின் பெயரால் பாதுகாத்து வளர்க்கப்படும் மூடத்தனங்களை விமர்சிப்பவர்களை அதிகார வர்க்கம்  கண்டிக்கவோ தண்டிக்கவோ தயங்குவதில்லை.

புதன், 29 ஜனவரி, 2025

‘வெடிகுண்டன்’ சீமானின் வெறிப் பேச்சு! ஈரோட்டிலிருந்து வெளியேறும் பெரியார் சீடர்கள்!!

ரோடு கிழக்குச் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நேற்று சீமான் பின்வருமாறு பேசினார்:

“நீ வைத்திருப்பது வெறும் பெரியார் எனும் வெங்காயம். என் தலைவன் பிரபாகரன் கையில் வைத்திருப்பது வெடிகுண்டு. நீ பெரியாரின் வெங்காயத்தை என் மீது வீசு. நான் பிரபாகரன் தந்த வெடிகுண்டை உன் மீது வீசுகிறேன். என்ன நடக்கிறது என்று பார்.

ஏய்..... வெச்சிருக்கேன்..... இன்னும் வீசவில்லை. வெடிகுண்டுகளை வீசினேன் என்றால் என்ன ஆவாய் என்று யோசித்துப்பார். புதைச்ச இடத்தில் புல்கூட முளைக்காது என்பதைத் தெரிந்துகொள். Be Carefull... சேட்டையை வேறு எங்காவது வைத்துக் கொள்.”[https://tamil.oneindia.com/].

சீமானின் இந்த ஆக்ரோசப் பேச்சால், பெரியார் தொண்டர்கள் தங்களுக்குப் பாதுகாப்புத் தராத ஸ்டாலின் மீது வசைமாரி பொழிந்துகொண்டே , அலை அலையாக ஈரோட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

இது ஈரோட்டு நண்பர் ஒருவர் அடியேனுக்குச் சற்று முன்னர் அனுப்பிய தகவல்!

* * * * *


கும்பமேளா குளியலில் சொர்க்கம் சேர்ந்தோர் 40 பேர்! சேர்வோருக்காகத் திறந்தே இருக்கிறதாம் சொர்க்கத்தின் கதவு!!

//புனித நாளான தை அமாவாசையில் கும்பமேளா புனித நீராட்டத்தில் 40 புனிதர்கள்[பக்திமான்கள்] சொர்க்கம் சேர்ந்தார்கள்; மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட புண்ணியவான்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில்[அவர்களின் வரவை எதிர்பார்த்து 24 மணி நேரமும் சொர்க்கவாசல் திறந்தே இருக்கிறதாம்] இருக்கிறார்கள்// என்பது, சற்று முன்னரான [காலை 06.45] ‘சன்’ தொ.கா.செய்தி.

உலகெங்கும் பக்தி நெறி பரப்பக் கடவுளால் இம்மண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நம் வழிபாட்டிற்குரிய அருளாளர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உ.பி.முதல்வர் யோகி ஆதியானந்துக்கு உத்தரவிட்டிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.
[அம்மணக்குண்டிக் காட்டுமிராண்டிகள்]

கும்பமேளா கொண்டாட்டத்தின் நோக்கமே புனித நீராடிப் புண்ணியம் சேர்த்துச் சொர்க்கம் சேர வேண்டும் என்பதுதான்.

நோக்கம் இதுவாக இருக்க, 40[+?] பேர் மட்டுமே சொர்க்கபுரி சென்றடைந்த நிலையில் எஞ்சியிருப்போரும் அங்கு செல்லவிருப்பதைத் தடுக்கும் முயற்சிதான் ‘மீட்பு நடவடிக்கை’ என்பதை நம் பிரதமர் அவர்கள் மறந்தது ஏன் என்று தெரியவில்லை.

புனித நீராடினால் புண்ணியத்தை அள்ளிக் குவிக்கலாம்; சொர்க்கத்தில் இடம் பிடித்து என்றென்றும் சுகித்திருக்கலாம் என்றெல்லாம் தொடர் பரப்புரைகள் செய்ததோடு, கோடிக்கணக்கில் செலவு செய்து, பக்தர்கள் கும்பமேளாவுக்குச் செல்வதற்கான அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்ததே நம் மோடி & யோகி ஆதியானந்த் அரசுகள்தான்.

செய்வதெல்லாம்[செய்யக்கூடாதவை எல்லாம்?] செய்து 50 உயிர்கள்[சரியான கணக்கு?] பலியான நிலையில்[தீ விபத்தில் பலர் இறந்தார்கள்].....

மீட்பு நடவடிக்கை எடுக்கிறார்களாம்.

இவர்களின் இறுக்கமான பிடியில் சிக்கித் தவிக்கும் அப்பாவிப் பக்தர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்போவது யார்? எவரெல்லாம்?

அந்த ராமச்சந்திர மூர்த்தி மட்டுமே அறிவார்?!

செவ்வாய், 28 ஜனவரி, 2025

இஸ்லாம் பெண்ணுக்கு இந்துப் பெண்ணின் இதயம்! இனி எதற்கு மதங்கள்?

ந்தியாவின் முதல் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செய்யப்பட்டது. அப்போது உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கான சட்டம் ஏதும் இந்தியாவில் இல்லை. சிறப்பு அனுமதிகளைப் பெற்று அந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

1994இல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கென்று சட்டம் வந்த பிறகு, முதல் இருதய மாற்று அறுவைச் சிகிச்சையைச் செய்தவர் மறைந்த டாக்டர் கே.எம். செரியன்தான்.

1995ஆம் ஆண்டில் நடந்த இந்த அறுவைச் சிகிச்சையில் ஹேமா என்ற பெண் சாலை விபத்தால் உயிரிழந்தபோது, அவரது இதயம் மைமூன் பீவி என்ற பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது.


இது குறித்துப் பேசும்போதெல்லாம், "இந்த அறுவைச் சிகிச்சையில் இருதயத்தைப் பெற்றவர் ஓர் இஸ்லாமியப் பெண். அவருக்கு இருதயம் கொடுத்தவர் ஓர் இந்து. இஸ்லாமியப் பெண்ணுக்கு, இந்துவின் இதயத்தை எடுத்துக் கிறிஸ்தவரான நான் பொருத்தியிருக்கிறேன்” என்று சொல்லிச் சிரிப்பாராம் மருத்துவர் செரியன்[இருதயத்தைப் பெற்ற அந்தப் பெண் அதற்குப் பிறகு நீண்ட காலம் உயிரோடு இருந்தார் என்பது அறியத்தக்கது].


‘மனிதர்களுக்குத் தேவை ‘மனிதம்’தான்; மதம் அல்ல’ என்று தம் செயல்பாட்டின் மூலம் உலகுக்கு உணர்த்தினார் மருத்துவர் செரியன் அவர்கள். அதை உணர்ந்து போற்றி மதங்களைப் புறக்கணிக்கும் மனப் பக்குவம் இன்றளவும் மதவாதிகளுக்கு இல்லை என்பது வெட்கக்கேடு!


https://www.bbc.com/tamil/articles/clynq27q6ndo


                                       *   *   *   *   *

திங்கள், 27 ஜனவரி, 2025

பெரியார் நேரில் வந்தால் கடித்துக் குதறமோ சீமான் என்னும் வெறி நாய்!!!

[பெரியார் இப்படிச் சொன்னார் என்பது அப்பட்டமான பொய்; இது, சீமான் கடைந்தெடுத்த பொய்யன் என்பதற்கான ஆதாரம்]

வாக்குச் சேகரிப்பில்[ஈரோடு இடைத் தேர்தல்], ஆளும் ‘தி.மு.க.’வைச் சாடுவதைவிட,  தன் கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட, பெரியாருக்குள்ள மரியாதையை மிச்சம் மீதியில்லாமல் சிதைத்து அழிப்பதே சீமானின் முக்கிய நோக்கம் என்பதை, வெறித்தனமான இவனின் பேச்சால் அறிய முடிகிறது.

ஒட்டுமொத்த உடம்பையும் முறுக்கேற்றிக்கொண்டு குதிக்கிறான்; துள்ளுகிறான்; முஷ்டியை உயர்த்தி, “என் எதிரில் வா. உன்னை அடித்தே கொன்றுபோடுகிறேன்” என்பதுபோல் குஸ்தி கட்டுகிறான்; கன்னத்தில் தட்டுகிறான்; உள்ளங்கையில் தட்டித் தட்டிச் ‘சொடக்கு’ப் போடுகிறான்; நெஞ்சில் அடித்துக்கொள்கிறான்; ‘கண்ணில் பட்டால் கடித்துக் குதறுவேன்’ என்பது போல் கர்ஜிக்கிறான். கண்களில் தீப்பொறி பறக்கிறது; அவயவங்களின் ஒவ்வோர் அசைவிலும் கட்டுக்கடங்காத கோபம் கொந்தளிக்கிறது[இன்னும் இப்படி நிறையச் சொல்லலாம்].

ஆக்கபூர்வமான கருத்துகளைச் சொல்லாமல் ஆக்ரோசப் பேச்சின் மூலம் மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கிறான், பல ஆண்டுகளாக ‘நாம் தமிழர்’ என்று சொல்லித் தமிழர்களை முட்டாள்கள் ஆக்கிய இவன்[பல கட்சி மாறிய வேடதாரி]; இப்போது பெரியாரை அவமதித்துச் சங்கிகளோடு சங்கமித்து, தமிழர்களின் இன உணர்வை மழுங்கடிப்பதில் அதி தீவிரம் காட்டுகிறான்.

இவன் அளவுக்கு பெரியாரை மிகக் கடுமையாக வேறு எவரும்[‘அவர்கள்’ உட்பட] இழிவுபடுத்தியதில்லை.

மனதைப் பதற வைக்கும்... உடம்பெங்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பை உண்டுபண்ணும் இவனுடைய செயல்பாடுகளுக்காகத் தமிழ்நாடு அரசு குற்றவியல் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

காரணம்.....

எடுத்தால், இவன் மக்களின் அனுதாபத்தைப் பெறுவான்; வெற்றி பெறுகிறானோ அல்லவோ, இவனின் வேட்பாளர் பெறும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அரசு அஞ்சுவதாக இருக்கக்கூடும்.

தமிழ்நாடு அரசின் நிலைதான் இதுவென்றால், இவனின் அடாவடித்தனங்களைக் கண்கூடாய்க் காண நேர்ந்தும் தமிழ் மக்கள் அமைதி காப்பது ஏன் என்று புரியவில்லை.

பெரியாரால் தங்களுக்கு எந்தவொரு நன்மையும் விளையவில்லை என்று இவர்கள் எண்ணுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

சந்தேகிப்பதில் தவறே இல்லை என்றால், ‘தமிழன்’ வேடம் புனைந்து தமிழினத்தைச் சங்கிகளிடம் சரணடைய வைக்கும் போலித் தமிழன் சீமான் போன்றவர்களிடம் சிக்கித் தமிழினம் சீரழியும் என்பது உறுதி!

                                           *   *   *   *   *
****** அன்று பெரியாரைப் பாராட்டியதும் இதே நாய்தான்! காணொலி:

***‘பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி’ என்று சொன்னது ஏன்?

பின்வரும் முகவரியைச் சொடுக்கிப் பதிவை வாசியுங்கள்.


                        *   *   *   *   *
“ஆடவன் தாயையும் மகளையும் சகோதரியையும் புணரலாம்” என்று சொன்னவன் பிரம்மா[புராணக் கதை > பதிவு முகவரி கீழே].

இது போன்ற கதைகளைச் சுட்டிக்காட்டித்தான் புராணங்களை எரிக்க வேண்டும் என்றார் பெரியார். கதையில் இடம்பெற்றுள்ள வாசகத்தைப் பெரியார் சொன்னதாகக் குரைத்திருக்கிறது இந்தச் சீமான என்னும் சொறி நாய்.

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

சீமானுக்குள்... அடடா இத்தனைச் சீமான்களா!?!?!

“சீமானைப் பற்றி ஒரே வரியில் கூறவேண்டும் என்றால் என்ன கூறுவீர்கள்?”[Quora]

1.ஒரு வார்த்தையில் சொல்வதானால் கழிசடை…🤭😆

2.எண் வடிவில் சொல்வதானால் 420…🤭🤭😆🤣

3.ஒரு வரியில் சொல்வதானால்…

தமிழகத்தைப் பிடித்த பீடை.., 🤮🤮

4. சுருக்கமாகச் சண்டாளன்.. 🤭🤭🤭😆🤣😂

5.ஓசிச் சோத்துக்கு வாயை வாடகைக்கு விட்டுக் குலைக்கிறவன்.

6.பைத்தியக்காரக் காமெடியன்.

7.தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களை அழிக்க பிஜேபியால் இறக்கி விடப்பட்டிருக்கும் பிரிவினைவாதி.

8.அவனோட அரசியல் பிச்சைப் பாதை இதோ :

9.ஆங்கிலம் படிக்காதே, காலேஜ் போகாதே, மாடு மேய்க்கப் போ.. என்று இளைஞர்களைக் குழப்பி, அவர்களைத் தண்டச்சோறு, சோம்பேறி, பிச்சைக்காரன்கள் மற்றும் பொறுக்கிகள் ஆக்குகிற ஆபத்தானவன் சைமான்.


10.சுயநலமான சந்தர்ப்ப வாத ஏமாற்றுக்கார வாய்ஜாலக்காரன்.


11.பணம் கொடுப்பவர்களுக்கு விசுவாசமாகப் பேசும் நல்ல நடிகன்; இளைஞர்களின் உணர்ச்சிவசப்படும் தன்மையைத் தனக்குச் சாதகமாக மாற்றி நல்ல காசு பார்க்கும் புத்திசாலித்தனமான தொழிலதிபன்.


12.வன் ஒரு முழுப் பைத்தியம்… பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பது என்பது தேவையுள்ளவர்களைக் கண்டறியும் ஒரு வழி ஆகும். அதற்குப்போய்த் “தகுதி பார்க்கிறாய்” என அரசைக் கொச்சைப்படுத்துவதோடு, செருப்பால் அடிப்பேன் என்றெல்லாம் பேசும் ஆணவக்காரன்; மோசமான மன நோயாளி என்றும் சொல்லலாம்.


13.இன்னமும் முதிர்ச்சி அடையாத, சபை நாகரீகம் தெரியாத தேசிய/ மாநிலக் கட்சியின் பினாமி.


14.ஆற்றில் தொலைந்ததைக் கடலில் தேடுவதாகச் சொல்லிக்கொண்டிருப்பவன்.


15.சூழ்நிலையைச் சரியாக அரசியலில் பயன்படுத்திக்கொள்பவன்.


16.காரியப் பைத்தியம்.


17.எட்டாக்கனிக்கு ஆசைப்படும் ஏமாந்த குள்ளநரி.


18.இவனது ஆசை எக்காலமும் நிறைவேற வாய்ப்பே இல்லை.


19.இந்த ஆளை மனநலம் குன்றிய காப்பகத்தில் அப்போதே சேர்த்திருக்க வேண்டும். இப்போது... விட்டால் வாயாலேயே தமிழ் நாட்டை நாசமாக்கிவிடுவான்.

சனி, 25 ஜனவரி, 2025

சீறிப் பாயும் சிங்கம் சீமான்! சிதறி ஓடும் எதிரிகள்!!

பெரியாரைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியதிலிருந்து இந்நாள் தேர்தல்[ஈரோடு] பரப்புரைவரை, செந்தமிழன் சீமான் சீறும் சிங்கமெனக் கர்ஜிக்கும்போதெல்லாம், அவரின் ஆக்ரோசமான அங்க அசைவுகள் காண்போரைக்[அடியேன் உட்பட. ஹி... ஹி... ஹி!!!] கதிகலங்க வைக்கின்றன.

அவை அவரின் தம்பிகளை வீறுகொண்டு எழுந்து மாற்றாருடன் சமர் புரியத் தூண்டுவனவாகவும், அரசியல் எதிரிகளை அலறியடித்துப் புறமுதுகிட்டு ஓடச் செய்வனவாகவும் உள்ளன.

எடுத்துக்காட்டாகக் கொஞ்சம் படங்கள்:

இன்றையத் தினத்தில் எதிரணியினருக்கு நாம் செய்யும் எச்சரிக்கை:

தேர்தலில்[ஈரோடு] சிறுத்தை சீமானை எதிர்த்துப் போட்டியிட்டு நீங்கள் வெற்றிபெற நினைத்தால் அது வெறும் பகற்கனவாகவே முடியும்.
 
அவரின் வெற்றி 100% உறுதி.

2026 தமிழ்நாடு சட்டமன்றைத் தேர்தலிலும் வெற்றிக்கனி பறித்து ஆட்சிபீடத்தைக் கைப்பற்றுவார்.

எனவே, அவர் மீதான பகை உணர்வை முற்றிலுமாய்த் துடைத்தெறிந்து, 2026இல் முதல்வர் சீமானை வாழ்த்திட உங்கள் மனங்களைப் பக்குவப்படுத்துவீர்!

வாழ்க தமிழ்நாடு முதல்வர்[2026] சிங்கத் தமிழன் சீமான்!!

வெள்ளி, 24 ஜனவரி, 2025

‘நல்ல நேரம்’ பார்க்கும் நல்லவர்களுக்கு ஒரு கேள்வி!

எந்தவொரு செயலைத் தொடங்குவதற்கும் ‘நல்ல நேரம்’ பார்ப்பவர் நீங்கள் என்றால், கீழ்க்காணும்  ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நன்கு சிந்தித்துப் பதில் சொல்லுங்கள்.

ஒவ்வொரு நாளிலும், நல்ல நேரங்களைத் தொடர்ந்து நல்லவை அல்லாத, அல்லது ‘கெட்ட நேரம்’களும்[ராகு காலம் 10.30 - 12.00; எமகண்டம்: 03.00 - 04.30 என்றிப்படி] இடம்பெறுவது நீங்கள் அறிந்ததே.

ஒரு செயலை நல்ல நேரத்தில் தொடங்கிச் செய்துகொண்டிருக்கிற நீங்கள், அடுத்தடுத்து வரும் ‘கெட்ட’ நேரங்களில் உங்களின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதில்லைதானே?(உதாரணங்கள்: 1. மாப்பிள்ளை பெண்ணுக்குத் தாலி கட்டுவது காலையில் ஒரு நல்ல நேரத்தில் நிகழ்ந்தாலும் மற்ற நிகழ்வுகள் நாள் முழுக்கத் தொடர்ந்து நடக்கின்றன. 2. சாந்திமுகூர்த்தத்தில், நல்ல நேரம் பார்த்து அறைக்குள் அனுப்பப்படும் புது மாப்பிள்ளையும் பெண்ணும் நல்ல நேரம் முடிந்த பிறகும் உடலுறவை நீடிக்கக்கூடும்). 

“ஆம்” என்றால்....

கெட்ட நேரங்கள் உங்களுக்குத் தீங்கு விளைவிக்கும், அல்லது உங்களின் செயலை நினைத்தபடி செய்துமுடிப்பதைத் தடுக்கும் அல்லவா?

‘தொடங்குவதற்கு மட்டும் நல்ல நேரம். அப்புறம் அது தேவையில்லை’..... என்றிப்படிச் சொல்கிறவர்களா[ஜோதிடர்கள்], அவர்கள் சொல்வதை நம்புகிறவர்களா, ஆகச் சிறந்த முட்டாள்கள் எவரெல்லாம்?!

வியாழன், 23 ஜனவரி, 2025

கல் ‘இடி’யும் மண்டை ‘அடி’யும் கருணைக் கடவுளும்!!!

விபத்தில் சிக்கி மண்டையில் அடிபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் ஒருவர் சேர்க்கப்படுவது போன்ற நிகழ்வுகளின்போது, அவர் தங்களின் உறவினராக இருந்தால் காப்பாற்றும்படி கடவுளிடம் வேண்டுகோள் வைக்கிறார்கள் நம் மக்கள்.

பெரிய அளவிலான மனநலப் பாதிப்புகளுக்கும்[மணவிலக்கு, தீராத கடன் தொல்லை, அடங்காத நோய்களின் தாக்குதல் போன்றவை] கடவுளை நேர்ந்துகொள்கிறார்கள்.

கடவுள் காப்பாற்றுகிறாரோ அல்லவோ உடல் மனம் தொடர்பான தாங்கொணாத துன்பங்களுக்கு முன்பு செய்த பாவங்களே காரணம் என்று நம்புகிறார்கள்.

மனிதர்கள் செய்யும் பாவங்கள் அனைத்தும் கடவுளின் ஆணைக்கேற்ப எங்கோ பதிவு செய்யப்படுவது உண்மையானால்.....

அந்த அனைத்துப் பாவங்களில்.....  

நடந்துசெல்லும்போது கட்டை விரல் கல்லில் இடித்ததால் உண்டாகும் சிறு வலி, கடைகளில் பேரம் பேசும்போது உருவாகும் சச்சரவால் ஏற்படும் கொஞ்சம் மன வலி போன்றவற்றிற்குக் காரணங்களான சிறு சிறு பாவங்களும்[முற்பிறப்பில் அல்லது இப்பிறப்பில் செய்தவை] அடங்கும். 

முன்னவை பெரிய பாவங்கள்; பின்னவை சிறிய பாவச் செயல்கள்.

‘அளவு’ வேறுபடுகிறதே தவிர மேற்கண்ட இரு வகைத் துன்பங்களுக்கும் மேற்கண்ட பாவங்கள்தான் காரணங்கள் ஆகின்றன.

எனினும், அனுபவிக்கும் சிறு சிறு உடல் வலிகளுக்கும் மன வலிகளுக்கும்கூட முன்பு செய்த பாவங்கள்தான் காரணம் என்று எவரும் எண்ணுவதில்லை; கடவுளிடம் வேண்டுதல் வைப்பதும் இல்லை.

ஆனால், அதிக அளவிலான உடல் & மனத் துன்பங்களுக்கு முன்பு  செய்த பாவங்களே காரணம் என்று நம்பி, அவற்றைப் போக்கியருளும்படிக் கடவுளிடம் கோரிக்கை வைக்கிறார்கள் மக்கள்.

கடவுளைப் பொருத்தவரை பெரிய, சிறிய என்னும் வேறுபாடெல்லாம் இல்லை[பாவம் பாவம்தான். புண்ணியம் புண்ணியம்தான்].

சிறிய அளவிலான துன்பங்களை நம் உடம்பும் மனமும் தாமாகவே போக்கிக்கொள்வது போலவே, போதிய உடல் உரமும் மன வலிமையும்[பெறுவது அத்தனை எளிதல்ல] இருந்தால் அதிக அளவிலான துன்பங்களையும் நம்மால் தாங்கிக்கொள்ள, அல்லது போக்கிக்கொள்ள இயலும்[இயலாதபோது ஏற்று வாழ்ந்துமுடிப்பதைத் தவிர வேறு வழியில்லை].

கோரிக்கைகளைச் சுமந்து கோயில் கோயிலாய் அலைந்து திரிதல் வீணான செயல் என்பது புரியும்!

புதன், 22 ஜனவரி, 2025

10.00 கோடி முட்டாள்களைக் குளிப்பாட்டிக் குதூகளிக்கச் செய்த கும்பமேளா!!!

சுமார் 10.00 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். ஒரே நாளில் அதிகபட்சமாக 54.96 கோடிப் பக்தர்கள் புனித நீராடினர்..... [செய்தி]

கங்கையில் ஓடும் அசுத்த நீரைப் புனித நீர் என்றும், நீராடினால் பாவங்கள் நீங்கிப் பரமன் பதம் சேரலாம் என்றும் நம்ப வைத்தவர்கள் அயோக்கியர்கள். 

அயராமல் அதைப் பரப்புரை செய்தவர்கள்/செய்பவர்கள் குற்றவாளிகள்; இவர்கள் எல்லாம் கடும் தண்டனைக்கு உரியவர்கள்.

பக்தியின் பெயரால் இம்மாதிரிக் குற்றங்களைச் செய்யும்[மக்கள் மனங்களில் மூடநம்பிக்கைகளைத் திணிப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள்] ஆன்மிகப் பித்தர்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

வழங்குபவர்கள் ஒன்றிய ஆட்சியாளர்கள்; மூடத்தனங்களைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் கோடி கோடி கோடியாகச் செலவு செய்கிறார்கள்.

மக்களால்தான் இவர்களைத் திருத்த முடியும்.

முன்னதாக இவர்கள் திருந்த வேண்டும். 

திருந்துவார்களா?

செவ்வாய், 21 ஜனவரி, 2025

ஒரு கள் குடியனா ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவன்!?!?!

னைமரத்தில், பாளை சீவி அதன் வடிநீரை, சுண்ணாம்பு தடவிய மட்பாண்டத்தில் சேமித்தால் அது பதநீர்;  இனிப்புச் சுவை கொண்டது; இது போதை தராது; மருத்துவக் குணம் உள்ளது.

வெறுமனே மண்பாண்டத்தில் புளிக்கவைத்தால்[சுண்ணாம்பு கலக்காமல்] அது கள். அதிக அளவில் போதை தராமல் ஓரளவுக்குப் போதை தரும்[அதிகம் குடித்தால் போதை அதிகமாகும்] என்பதால் இதுவும் போதைப் பொருள்தான் என்பதில் சிறிதளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

அதிக அளவோ குறைந்த அளவோ ஆரம்ப காலப் போதைப் பழக்கம் குடிப்பவனைப் பின்னர் போதைக்கு அடிமையாக்க, அதிக அளவில் போதை தரும் மது போன்றவற்றிற்குக் அவன் ஆயுட்கால அடிமை ஆவான்[கணிசமான அளவில் நன்மை பயக்கக்கூடும்] என்பதால்தான் தமிழ்நாடு அரசு கள்ளுக்குத் தடை விதித்துள்ளது.

தடை நீடிக்கும் நிலையில்.....

தன்னைத் தமிழினத்தின் தலைவன் என்னும் பிம்பத்தைக் கட்டமைத்திட, அடாத செயல்களில் ஈடுபடும் சீமான்[’நாம் தமிழர்’] கள் குடிப்பதைக் காட்சிப்படுத்தும் ஒரு காணொலி ‘யூடியூப்’இல் வெளியாகியுள்ளது.

கள் அருந்தத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ள நிலையில், இப்படியொரு காணொலியை இவன் வெளியிட்டிருப்பது இவனின் ஆணவப் போக்கின்...  அடங்காத திமிர்த்தனத்தின் அடையாளம் ஆகும்.

இதன் மூலம் இவன் தன் கட்சித் தொண்டர்களையும் குடிக்கத் தூண்டுகிறான் என்பது அறியத்தக்கது.

எனவே, சற்றும் தயங்காமல் இவன் மீது உரிய நடவடிக்கை எடுப்பது மிக அவசியம் என்பதை தமிழ்நாடு அரசுக்கு நினைவூட்டுகிறோம்.

***இவன் பிறவிக் குடிகாரன் என்பதை உறுதிப்படுத்தும் பதிவு:

#கள் குடித்துவிட்டுத்தான் கல்லூரிக்கே போவேன் - சீமான்

https://x.com/tamiltalkies/status/1881649533266063494?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet#


கள் குடியன் சீமான்[காணொலி]:

திங்கள், 20 ஜனவரி, 2025

கும்பமேளா தீ விபத்து... கங்கா தேவிக்கு ரொம்பத்தான் குறும்பு!!

த்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் சிலிண்டர் வெடித்ததால், கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்ட கூடாரங்களில் 20க்கும் மேற்பட்டவை தீப் பற்றி எரிந்தன என்பது செய்தி.

கா கும்பமேளா எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “மகா கும்பமேளாவில் தீ விபத்து ஏற்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசு நிர்வாகம் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. அனைவரின் பாதுகாப்புக்காகவும் கங்கா தேவியிடம் பிரார்த்தனை செய்கிறோம்” என கூறப்பட்டுள்ளது[hindutamil.in].

கங்கா தேவி ஒரு பெண் தெய்வம் என்பதால் தீ விபத்து ஏற்படாமலே தடுத்திருக்க முடியும். தடுக்காததால், இந்த விபத்துக்கான காரணக்கர்த்தாவே அந்தத் தேவியாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

புண்ணியம் சேர்த்துச் சுவர்க்கம் புகும் ஆசையில் கங்கையில் புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்களை, பதறித் துடித்து ஓடவிட்டவரே அவர்தான் என்று சொல்லத் தோன்றுகிறது[காணொலியில் இடம்பெற்றுள்ள ‘தீ விபத்தால் அலறி ஓடிய லட்சக்கணக்கான பக்தர்கள்’ என்னும் வாசகம் கவனிக்கத்தக்கது].

உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படாததால், பக்தக்கோடிகள் அஞ்சி அலறி ஓடுகிற அசாதாரணக் காட்சியைக் கண்டு ரசிப்பதற்காகவே அம்மை இந்தத் தீ விபத்தை நிகழ்த்தினார் என்று உறுதிபடச் சொல்லலாம்.

கங்கா தேவிக்கு ரொம்பத்தான் குறும்பு!

கும்பமேளா நிகழும் இடத்தில், சிவபெருமான், விஷ்ணு பகவான், லட்சுமி தேவி ஆகிய கடவுள்களுக்கும் கோயில்கள் உள்ளனவாம்.

தீ விபத்து நிகழ்ந்தபோது அவர்களெல்லாம் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்னும் கேள்வி எழுகிறது.

வேறென்ன, பக்தர்கள் அடித்துப்பிடித்து ஓடும் அலங்கோலக் காட்சியை அவர்களும் பார்த்து ரசித்துக் குதூகளித்திருப்பார்கள். ஹி... ஹி... ஹி!!!

* * * * *

https://www.hindutamil.in/news/india/1347586-fire-breaks-out-at-maha-kumbh-mela-1.html


அப்பாவிப் பக்தர்களைத் திருந்த விடுங்கடா படுபாவிகளா!!!

திரு​வூடல் - மறுவூடல்’ திரு​விழாவையொட்டி திருவண்ணாமலையில் சாமி அண்ணா​மலை​யார் கிரிவலம் சென்​றாராம்[செய்தி]

பக்தக்கோடிகள் கிரிவலம் போவதுதான் வழக்கம். “கடவுள் அண்ணாமலையாரை[மலை வடிவில் காட்சி தருகிறார்] அண்ணாமலையாரே வலம்[கிரிவலம்] வருகிறாரா, இதென்ன கூத்து?” என்று எவரும் மனம் குழம்ப வேண்டாம். கீழ்வரும் சம்பவத்தை[கதை என்று சொன்னால் பக்தர்கள் மனம் புண்படும்] அறிவதன் மூலம் தெளிவு பெறலாம்.

சிவபெரு​மானை[அண்ணாமலையாரேதான்] மட்டும் பிருங்கி மகரிஷி[இவருக்குக் கால்கள் மூன்று!] வணங்​கிய​தால் பார்வதி தேவி சினம் கொண்​டார்; ஊடல்[காதலர் & கணவன் மனைவி இடையேயான தற்காலிகப் பிணக்கு. இச்சையைக் கட்டுப்படுத்த இயலாதபோது அது தணிந்துவிடும். ஹி... ஹி... ஹி!!!] கொண்டார். கோயி​லின் 2-ஆம் பிரகாரத்​தில் உள்ள தனது சந்நி​திக்குச் சென்று தாழிட்டுக் கொள்​கிறார்[இரட்டைத் தாழ்ப்பாள்?!].

அம்மையின் பிரகாரத்தைச் சுற்றிவருவது மட்டுமே அவரின் ஊடல் தணிப்பதற்கான வழி என்பதை அறிந்திருந்த அப்பன் அண்ணாமலையார் பக்தச் சிகாமணிகள் பின்தொடர 14 கி.மீ. தொலைவிலான கிரிவலத்தைத் தொடங்கினார்.

சுவாமிக்கு மண்டகப்படி செய்து, கற்பூரத் தீபாராதனை காண்​பித்து பக்தர்கள் வழிபட்​டார்கள்.

கிரிவலம் நிறைவு பெற்றதும், திட்டி வாசல் வழியாக அம்மை இருக்கும் இடத்தை அடைந்தார் திருவண்ணாமலை அப்பன்.

அப்போது அம்மையும் ஊடல் தணிந்த நிலையில் இருந்தார்.

அண்ணாமலையாருக்கும் அம்பாளுக்​கும் மறுவூடல்[கூடல்?] நிகழ்ச்சி நடைபெற்​றது. பின்னர், இருவரும் இணைந்து பக்தர்​களுக்கு அருள்​பாலித்​தார்கள்.

அடடா, இந்துமதப் புராணங்களில் எப்படியெல்லாம் கதை எழுதியிருக்கிறார்கள்! எந்தவொரு மதத்திலும் இம்மாதிரியான அபத்தக் கதை இல்லை என்றே சொல்லலாம்.

இந்தத் திருவண்ணாமலை நிகழ்ச்சி ஓர் உதாரணம் மட்டுமே.

இப்படியெல்லாம் படு பாவிகள் எழுதிவைத்த கதைகளை நிகழ்ச்சியாக்கி, பக்தர்களைப் பரவசத்திற்கு உள்ளாக்கினால்தான் பக்தி வளருமா?

அக்காலத்தில் ஆட்சி புரிந்த மன்னர்கள் மட்டுமல்ல, பின்னர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்களும்கூட, இந்த அயோக்கியர்களின் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்தவோ, இவர்களைத் திருத்தவோ முயலவில்லை என்பது வெட்கக்கேடு[சாபக்கேடு?].

ஆண்டுதோறும், அலங்கரிக்கப்பட்ட சாமி சிலைகளை வைத்து, எவனோ எவன்களோ கட்டிவிட்ட இம்மாதிரிக் கதைகளை அவன்களின் பரம்பரையினர் நிகழ்ச்சிகளாக்கி, அப்பாவி மக்களை மூடத்தனத்திலிருந்து விடுபடவிடாமல் தடுத்து, கடவுள்களுக்கு அடுத்த இடத்திலான தங்களின் இருப்பைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அத்தனை இந்துக் கோயில்களிலும், சிற்பிகள் வடித்தெடுத்த சிலைகளை வைத்துக்கொண்டு, விதம் விதமான தங்க வைர நகைகளை அணிவித்து, ஆறு காலப் பூஜை, அர்த்த ஜாமப் பூஜை, அமாவாசைப் பூஜை, பௌர்ணமிப் பூஜை என்று நாள்தோறும் வகை வகையாய்ப் பூஜைகள் செய்வது, ஆண் பெண் சாமிகளுக்கு ஆண்டு தவறாமல் கல்யாணம் கட்டி வைத்து சாந்திமுகூர்த்தம் நடத்துவது என்று இந்த அநாகரிகள் செய்யும் அழும்புக்கு அளவே இல்லை.

சுட்டிக் காட்டிக் கண்டித்தால், ‘இந்துமத எதிரிகள்’, ‘நாத்திக நாதாரிகள்’ என்பன போன்ற அவதூறு வசைமொழிகளை அள்ளித் தெளிக்கிறார்கள்.

இவர்களை அடக்கி ஒடுக்கும் சக்தி ஆட்சியாளர்களுக்கு மட்டுமே உள்ளது. அவர்கள் முதலில் திருந்த வேண்டும். இப்போதைக்குத் திருந்தமாட்டார்கள்.

பாவம் நம் மக்கள்!

* * * * *

https://www.hindutamil.in/news/spirituals/1347238-annamalaiyar-girivalam-in-tiruvannamalai.html