சனி, 31 மே, 2025

‘டாக்டர் ராமதாசா, அன்புமணியா?’... எவருடைய சேவை தமிழினத்திற்குத் தேவை?

டாக்டர் ராமதாஸ் ஆகிய தந்தைக்கும் அவரின் மகனான அன்புமணிக்கும் இடையேயான, 'பாமக' கட்சியின் தலைமைப் பதவிக்கான மோதல் நீடிக்கும் நிலையில், நம் முன்னே எழும் கேள்வி.....

“மோதலின் முடிவு எதுவாகவோ இருக்கட்டும், இந்த இருவரில் எவருடைய சேவை தமிழ் மக்களுக்குத் தேவை?”

டாக்டர் ராமதாசு(சாதிப் பற்று உள்ளவர் எனினும்> இல்லாதவர் எவர்?)அளப்பரிய தமிழ் மொழிப் பற்றும் தமிழினப் பற்றும் கொண்டவர்[அவருடையை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் ஒரு பொருட்டல்ல> அவற்றால் பாதிப்புக்குள்ளாவது அவரின் சொந்தபந்தங்கள் மட்டுமே]; தமிழினம் எக்காலத்திலும் எக்காரணத்தைக்கொண்டும் தன் சுயமரியாதையை இழத்தல் கூடாது என்று எண்ணுபவர்.

அன்புமணி[டாக்டர்தான்] சுயநலவாதி; இந்தச் சுயநலம்தான், ஆளுநன் மூலம் அடாத செயல்களில் ஈடுபட்டு, தமிழர்களின் வளர்ச்சியைத் தடுத்து, தமிழினத்தை அடிமைப்படுத்த முயலும் ‘பாஜக’வுடன், பதவிக்காகக் கூட்டணி சேர்ந்து, அதற்குச் சேவகம் செய்ய அவரைத் தூண்டுகிறது.

இருவருக்கும் இடையேயான இந்த மலையளவு வேறுபாடு, நம் இனப் பாதுகாப்புக்குப் பாடுபடுபவர் மருத்துவர் ராமதாசுதான் என்பதை உறுதிப்படுத்துகிறது.

வெல்க தமிழின உணர்வாளர் மருத்துவர் ராமதாசு!

ஆளுநன் என்னும் ‘அரை லூசன்’க்கு எதற்குத் திருக்குறள் ஆராய்ச்சி!?!?!

ல்லாத ‘ஆன்மா’வைப் பற்றியும் அதனுடன் தொடர்புடைய கடவுள் குறித்தும் கதையளப்பதுதான் ஆன்மிகம்.

இதன் பெயரால் மக்கள் மனங்களில் திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளுக்கு அளவே இல்லை.

அவற்றிலிருந்து விடுபட்டு வாழ்வாங்கு வாழ்வதற்குத் தேவையான சிந்திக்கும் அறிவைத் தூண்டுவதே திருக்குறள் என்னும் உலகம் போற்றும் திறனாய்வு நூல்.

அடிக்கல் நாட்ட வந்த ஆளுநன் ஆர்.என்.ரவி திருக்குறள் ‘முக்தி’ பற்றிப் பேசுகிறது என்றும், ஆன்மிகத்திலிருந்து திருக்குறளைப் பிரிக்க முடியாது என்றும் பேசியிருப்பது அடாவடித்தனம்; கடும் கண்டனத்திற்குரியதும் ஆகும். 

மனம்போன போக்கில் உளறிக்கொட்டுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ள இந்த நபர்[தமிழ் தெரியாது], தன் தாய்மொழியான பீகாரியில் உள்ள, சனாதனம் போற்றும் ஆன்மிக நூல்கள் பற்றிக் கதையளக்கலாம். எவரும் கண்டுகொள்ளமாட்டார்கள்.

இனியும் திருக்குறள் போன்ற அரிய நூல்கள் குறித்து, சனாதனிகள்கள் எழுதிக்கொடுப்பதை மேடையேறி ஒப்பித்துத் தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாக வேண்டாம் என்பது இந்த ஆளுக்கான நம் அறிவுறுத்தல்.

விவாதத்திற்குரிய கருத்துகள்[கடவுள், மறுபிறப்பு> சம்பந்தப்பட்டவை] வெகு அரிதாக இடம்பெற்றிருந்தாலும், திருக்குறள் ஆன்மிக நூல் அல்ல; உலக அறிஞர்களால் போற்றப்படும் ஆகச் சிறந்த வாழ்வியல் நூல் என்பதே உண்மை.

வியாழன், 29 மே, 2025

மோடிஜியின் வீதிவலம்[Roadshow]... அடடா, கண்கொள்ளாக் காட்சி!!!

ரசியல் கட்சித் தலைவர்கள் அவ்வப்போது, அல்லது எப்போதாவது[குறிப்பாகத் தேர்தல் நடக்கவிருக்கும் நேரங்களில்], மேற்கூரை இல்லாத வாகனத்தில் நின்றவாறு[குடுகுடு கிழமாக இருந்தால் உயரமான இருக்கையில் உட்கார்ந்தவாறு], சாலையின் இருபுறமும் திரண்டு நின்று கொடியசைத்தும், கையசைத்தும், வாகனத்தின் மீது பூக்களை அள்ளி வீசியும் “தலைவர் வாழ்க” என்று முழக்கமிடும் தொண்டர்களை[கூலிக்குக் கும்மியடிக்கும் கூட்டம்)ப் பார்த்துப் புன்னகை தவழும் வதனத்துடன் கையசைத்துச் செல்வதைத்தான் வீதிவலம் என்பார்கள்.

சற்று முன்னர், நம் பரம்பரை எதிரி பாகிஸ்தான்காரனை மண்டியிட வைத்த நம் பிரதமர் மோடிஜி அவர்கள், பாட்னா நகரில் நடத்திய வீதியுலா[Roadshow] ஒன்றைக் கண்டு  இன்புறும் நல்வாய்ப்புக் கிட்டியது.

அதே நேரத்தில்.....

கறுப்புச் சட்டை உடுத்த பாதுகாப்புக் காவலர்கள், சாலையின் இருபுறமும் குழுமியிருந்த தொண்டர்களைச் சல்லடைப் பார்வையால் உற்று உற்றுப் பார்த்தவாறே கைகளில் துப்பாக்கி ஏந்திவர, காருக்குள் அமர்ந்த(பதுங்கிய?) கோலத்தில் தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்தவாறு மோடிஜி பவனி வந்த காட்சி அடியேனின் அடி நெஞ்சை உறுத்தியது.

“இதற்குப் பெயர் வீதிவலமா? இத்தனை உயிர்ப் பயத்துடன் ஊர்வலம் வருவது[வாக்குக்காக] அவசியமா?” என்று உள்மனதுக்குள் கேள்விகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

எனினும்.....

அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் மோடி கட்சியே வெற்றிபெறுதல் வேண்டும் என்றும், பாகிஸ்தானைச் வைத்துச் செய்தது போலவே சீனாவையும்[நம்முடன் மோதினால்] துவம்சம் செய்ய அவருடைய ஆட்சியே நீடிக்க வேண்டும் என்றும் ராமச்சந்திர மூர்த்தியை வாழ்த்திப் பிரார்த்தனை செய்தேன்!

வெல்க மோடிஜி! வாழ்க பாரத்!!

 

புதன், 28 மே, 2025

புது மாப்பிள்ளை மோடியும் பொறாமையில் புழுங்கும் காங்கிரஸாரும்!!!

ம் இந்தியா வெகு விரைவில் நம்பர் 1 வல்லரசு நாடாகவுள்ளது. 

இந்த நம் நாட்டின் பிரதமரான மோடி அவர்கள், பிரதமருக்குரிய கடமைகளை ஆற்றிமுடித்துப் பன்னாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்காக, அடிக்கடி அயல்நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர் என்பது யாவரும் அறிந்ததே.

அயல்நாட்டவர் பெரிதும் மதிக்கும் வகையில், மிகக் கௌரவமான தோற்றத்துடன் அவர் காட்சியளிப்பது மிக மிக மிக அவசியம்.

அத்தகையதொரு கவர்ச்சியான தோற்றத்தைத் தலைவரொருவர்[சர்வ அலங்காரத்துடன் புது மாப்பிள்ளை போல என்று சொன்னால் அதில் தவறேதுமில்லை] பெறுவதற்கு.....

*விதம் விதமானதும், லட்சக்கணக்கான ரூபாய் விலைமதிப்புள்ளதுமான ஆடைகளை நேரம் தவறாமல் உடுத்துதல்,

*பிஎம்டபிள்யு, மெர்சிடெஸ் போன்ற கார்களில் பயணித்தல்,

*இறக்குமதி செய்யப்பட்ட உயர் ரகக் கைக்கடிகாரங்களை அணிதல்,

*உலகத்தரம் வாய்ந்த அயல்நாட்டு கைப்பேசி[ஃபோன்]யைப் பயன்படுத்துதல்,

*பல லட்சம் மதிப்புள்ள கண் கண்ணாடியை அணிதல்

என்றிப்படியாக, மிகவும் மதிக்கத்தக்க பொருள்களைப் பயன்படுத்துவது தவிர்க்க இயலாதது.

நம் பிரதமர் மோடியும் இந்த நடைமுறையைத்தான் பின்பற்றுகிறார்.

இதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு மனப்பக்குவம் இல்லாத காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஒருவர், மோடி அவர்கள் பயன்படுத்தும் இறக்குமதி செய்யப்பட்ட உயர் ரகப் பொருள்களைப் பட்டியலிட்டு அவரைக் கிண்டலடித்துள்ளார்.

நம் பிரதமரை இழிவுபடுத்தி இவரும் இவரைப் போன்ற காங்கிரஸ்காரர்களும் பதிவுகள் வெளியிடுவதற்கான உண்மைக் காரணம், எப்போதும் மிடுக்காகவும் கவர்ச்சியாகவும் காட்சிதரும் நம் பிரதமர் மீது கொண்ட பொறாமையே என்று உறுதிபடச் சொல்லலாம்.

செவ்வாய், 27 மே, 2025

ஆஸாத் காஷ்மீரை[பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில்] மோடி எப்போது மீட்பார்?!

//பாகிஸ்தான் மக்கள் தங்கள் அரசாங்கமும் ராணுவமும் தங்கள் சொந்த நலனுக்காகப் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, அவர்களின் வாழ்க்கையை அழிக்கும் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் முன்வர வேண்டும். பாகிஸ்தான் மக்கள் அமைதிப் பாதையைத் தேர்வு செய்யாவிட்டால், அவர்கள் இந்திய ராணுவத்தின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்// இது நம் பிரதமர் மோடி பாகிஸ்தான் மக்களுக்கு வழங்கிய அறிவுரை; எச்சரிக்கையும்கூட[https://www.dinakaran.com].

‘இந்தியா-பாகிஸ்தான்’ போர் முடிந்த பிறகு, மோடி தொடர்ந்து செய்யும் வெற்றி முழக்கங்களின் மூலம், பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் முதுகெலும்பை அவர் முறித்துவிட்டார்[மீண்டெழுந்து எப்போதும் போரிடவே முடியாத அளவுக்கு] என்பதை நம் மக்கள் சந்தேகமறப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளையும் அடியோடு அழித்து ஒழித்துக்கட்டிவிட்டார் என்பதையும் நாடு[ஒட்டுமொத்த உலகமும்] அறியும்.

தீவிரவாதிகளே இல்லாத நிலையில் அவர்கள் கையாண்ட பயங்கரவாதமும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்பது அறியத்தக்கது.

“ராணுவத்தின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்” என்று பாக்கிஸ்தான் மக்களை எச்சரித்திருக்கிறார் நம் பிரதமர். தன் நாட்டு மக்களைக் காப்பதற்கான பொறுப்பும் அதற்கான பலமும் பாகிஸ்தானுக்கு இருக்கக்கூடும்[இந்தியாவின் பலத்தில் பத்தில் ஒரு பங்கேனும்] என்பதைப் புறக்கணித்து ஆர்ப்பரித்திருக்கிறார் அவர்.

இந்நிலையில், அஞ்சாநெஞ்சரான நம் பிரதமர் பாகிஸ்தானுடனான போரை மீண்டும் தொடங்கி நடத்தி[‘டிரம்ப்’ தலையிட்டுப் ‘போர் நிறுத்தம்’ செய்தார் என்பது 100% பொய்] நம் நீண்ட காலக் கனவான ஆசாத் காஷ்மீரை[பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ளது] மீட்டு நம் நாட்டுடன் இணைப்பார் என்பது நம் மக்களின் எதிர்பார்ப்பு.

அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்தி வெகு விரைவில் அவர் அதைச் செய்துமுடிப்பார் என்று நம்புவோம்.

வாழ்க நம் பிரதமர்! வெல்க இந்தியா!!

  * * * * *

https://www.dinakaran.com/modi-calls-people-pakistan-eradicate-terrorism/

திங்கள், 26 மே, 2025

சாகும்போதும் அழகு சிதைவதை விரும்பாத அதிசயப் பெண்!!!

வாழ்நாள் முழுதும் அழகாகத் தோன்ற வேண்டும் என்று ஆசைப்படுவது மனித இயல்பு. இந்த ஆசை பெண்களுக்குச் சற்றே[மிகவும்?] அதிகம் எனலாம்.

மரணத்தைத் தழுவும்போதுகூட தன் ‘மேனி அழகு’ குறைந்துவிடக்கூடாது என்று பெண்ணொருத்தி ஆசைப்பட்ட செய்தி மனதைப் பெரிதும் நெகிழச் செய்தது[இணையத்தில் வாசித்தது].

அந்தப் பெண்.....

ஹிட்லரின் ஆசை நாயகியாக இருந்து, மனைவியாகவும் ஆன[2ஆம் உலகப் போரில் தோல்வியைத் தழுவிய நிலையில் பாதாள அறையில் அவர் பதுங்கியிருந்தபோது] ஈவா பிரவுன்.

மே 2, 1945 அன்று பெர்லின் சரணடைந்த பிறகு, ஹிட்லர் தப்பிச் செல்வார் என்று சோவியத் தரப்பினர் எதிர்பார்த்தார்கள். ஹிட்லரோ தற்கொலை புரிவது என்ற முடிவை மேற்கொண்டார்.

பிடிபட்டதும் தான் மாஸ்கோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ‘மிருகக்காட்சிச் சாலையில் கூண்டில் அடைக்கப்பட்ட விலங்கு போல’ நடத்தப்படுவதை அவர் விரும்பாததே காரணம்.

மனைவி ஈவா பிரவுனுடனும் அவரது பெண் செயலாளர்களுடனும் தற்கொலைக்கான பல்வேறு முறைகள் குறித்து அவர் விவாதித்தார்.

இறுதியில், அவர் இரண்டு உறுதியான முறைகளைப் பயன்படுத்தினார், துப்பாக்கியை அவரது வலப்புற நெற்றிப்பொட்டில் குறிவைத்து, தூண்டுதலை[trigger] இழுத்த அதே நேரத்தில், ஒரு சயனைடுக் குப்பியையும்[காப்ஸ்யூல்] கடித்தார்.

‘திருமதி ஹிட்லர்[ஈவா பிரவுன்], தற்கொலைக்குப் பின் தன் சடலம் அழகு குன்றாமல் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் விஷத்தை மட்டுமே பயன்படுத்தினார்’ என்பது வரலாறு வழங்கும் சோகச் செய்தி.

சனி, 24 மே, 2025

வாழ்க பாரத்! ஒழிக ‘ஸ்ரீ’கிஸ்தான்!!

‘ஸ்ரீ-இந்தியா’ போர் குறித்த சூடான செய்திகள் அடுத்தடுத்து ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் வைஷாலி நகர்ப் பகுதியில் உள்ள இனிப்புக் கடையின் உரிமையாளர் அஞ்சலி ஜெயின், தான் தயாரிக்கும் ‘மைசூர் பாக்’ன் பெயரை, ‘மைசூர் ஸ்ரீ’ என்று மாற்றியிருப்பது[ஊடகங்கள் பலவற்றிலும் வெளியான செய்தி> அரசியல் தலைவர்களோ வேறு எவருமோ இதைக் கண்டித்ததாக அறியப்படவில்லை] நம் பிரதமர் மோடி மட்டுமல்லாமல் இந்தியக் குடிமக்களாகிய நம் அனைவரின் நெஞ்சங்களிலும் தேவாமிர்தத்தைப் பொழிந்துள்ளது.

வாசிப்பின்போது, ‘பாக்’ தட்டுப்பட்டால் அதை ‘ஸ்ரீ’ ஆக்கி வாசிப்பதென்று[எங்கு எதைப் படித்தாலும் பாவி நம் எதிரி ‘பாக்’கிஸ்தானின் ‘ஸ்ரீகிஸ்தான்’ நினைவே வருதல் கூடாது] அடியேனும் முடிவெடுத்துள்ளேன்.

அனைத்து வரலாற்று ஆவணங்களிலும் பாட நூல்களிலும்கூட ‘பாக்’ நீக்கப்பட்டு ‘ஸ்ரீ’ சேர்க்கப்படுதல் வேண்டும்.

சற்று முன்னர், தற்செயலாக விக்கிப்பீடியாவில் வாசித்த ‘ஸ்ரீ’ மாவட்டம்[ஆசாத் காஷ்மீர்] பற்றிய சிறு குறிப்பு பின்வருமாறு:

#ஸ்ரீ மாவட்டம்(Bagh District): இது ‘ஸ்ரீ’இன் ஆக்கிரமிப்பு ஆசாத் காஷ்மீர் பகுதியின் 10 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் ‘ஸ்ரீ’ நகரம் ஆகும். 770[சதுர கிலோ மீட்டர்] பரப்பளவு கொண்ட ‘ஸ்ரீ’ மாவட்டத்தின்[2017ஸ்ரீ’யின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி] மக்கள் தொகை 3,71,919 ஆகும்.

இம்மாவட்டதின் அலுவல் மொழி உருதுவாக இருப்பினும், மக்கள் பகாரி மொழி மற்றும் குஜ்ஜர் மொழிகளைப் பேசுகின்றனர். உருது மொழியில் ‘ஸ்ரீ’ என்பதற்குத் தோட்டம் என்று பொருள். இம்மாவட்டத்தில் ‘ஸ்ரீ’ கோட்டை உள்ளது# -விக்கிப்பீடியா[தமிழ்]

* * * * *

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

வாழ்க பாரத்[இந்தியா]! ஒழிக ஸ்ரீகிஸ்தான்!!

வெள்ளி, 23 மே, 2025

நம் பிரதமருக்குத் தேவை உடனடி மனநல மருத்துவம்!!!

‘இந்தியா-பாகிஸ்தான்’ போர் நிறுத்தத்திற்கான ‘உண்மை’க் காரணம்[‘டிரம்ப்’இன் தலையீடாக இருக்கலாம்] கண்டறியப்படாத நிலையில், அது தன் சாதனையே என்று பறைசாற்ற விரும்பும் மோடி, மனம்போன போக்கில் வார்த்தைகளை அள்ளித் தெளிக்கிறார்.

உதாரணங்கள்:

“சிந்தூர்[குங்குமம்] வெடிமருந்தாக மாறும்”[மாறாது என்பது படிப்பறிவில்லாத பாமரனுக்குக்கூடத் தெரியும்].

"இப்போது என் நரம்புகளில் சூடான சிந்தூர் ஓடுகிறது"[எப்போதும் ஓடுவது எது மோடிஜி?].

மோடி உடனடியாகப் பதவியிலிருந்து விலகுவது நாட்டுக்கு நல்லது; அவருக்கும் நல்லது. மனநலம் காக்கச் சிகிச்சை பெறுவது அவசியம்.

* * * * *

செய்தி[இந்தியன் எக்ஸ்பிரஸ்]:

#இன்று (மே 22) ராஜஸ்தானின் பிகானேரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு வலுவான செய்தியை வெளியிட்டார். தீவிரவாத உள்கட்டமைப்புகள் மீதான சமீபத்திய இந்தியத் தாக்குதல்கள் மூன்று முக்கிய உண்மைகளை உலகிற்குத் தெளிவாக உணர்த்தியுள்ளன என்று அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி தனது உரையில், "இந்திய முப்படைகளும் இணைந்து நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தானை மண்டியிடச் செய்தோம். சிந்தூர்(குங்குமம்) வெடிமருந்தாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை உலகமும், நாட்டின் எதிரிகளும் இப்போது நேரடியாகப் பார்த்துள்ளனர்" என்று குறிப்பிட்டார். மேலும், "இப்போது என் நரம்புகளில் சூடான சிந்தூர் ஓடுகிறது" என்று தெரிவித்தார்#

https://tamil.indianexpress.com/india/pm-narendra-modi-bikaner-visit-operation-sindoor-india-pakistan-9183313

வியாழன், 22 மே, 2025

படு ஆவேசமாகவும் அசட்டுத்தனமாகவும் பேசுவது பிரதமருக்கு அழகல்ல!!!

நம் பிரதமர் மோடியின், ‘பஹல்காம் தாக்குதல்’ குறித்த உணர்ச்சி பொங்கும் அதிரடி ஆவேச உரை கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது[தினத்தந்தி].

உரையினூடே நம் விமர்சனங்களும் இடம்பெற்றுள்ளன.

மிக மிக இக்கட்டான சூழல்களில் ஒரு நாட்டின் பிரதமருக்குத் தேவைகளான பொறுமையும், உணர்ச்சிவசப்படாமல் உரையாற்றும் மனப் பக்குவமும் மோடியிடம் இல்லவே இல்லை என்பதை இவரின் ஆவேசப் பேச்சு அம்பலப்படுத்தியிருக்கிறது.

நம்மைப் போன்ற சராசரிக் குடிமக்களால் இவரின் பேச்சை விமர்சிக்க மட்டுமே முடிகிற சூழலில், ஏறத்தாழ ஒரு சர்வாதியாகவே செயல்படும் இவரைத் திருத்த எவருமே இல்லையா என்பது நம் ஆதங்கம்.

வாசியுங்கள்.

//பஹல்காமில், மதம் என்ன என்று கேட்கப்பட்டு, நம்முடைய சகோதரிகளின் முன்நெற்றியில் இருந்த சிந்தூர் அழிக்கப்பட்டது. 140 கோடி இந்தியர்களும் அதன் வலியை உணர்ந்தனர்[உண்மை... உண்மை... உண்மையே].

அந்தப் பயங்கரவாதிகளுக்கு, கற்பனை செய்துபார்க்க முடியாத தண்டனை[அதென்ன கற்பனை செய்ய முடியாத தண்டனை?!] அளிக்க முடிவு செய்யப்பட்டது. 

முப்படைகளுக்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டது. நம்முடைய படை வீரர்கள் தீர்க்கமுடன் செயல்பட்டார்கள். இதனால், பாகிஸ்தான் மண்டியிட்டது[அது இனி எப்போதும் எழுந்துநின்று இன்னொரு பஹல்காம் தாக்குதலை நடத்தவே நடத்தாதா? பாகிஸ்தானின் முழு முப்படைப் பலமும் மோடிக்குத் தெரியுமா?].

சிந்தூரம் அழிப்பதற்காகப் புறப்பட்டவர்கள்[வேறு காரணங்களே இல்லையா?] மண்ணில் புதைக்கப்பட்டனர்.

இந்தியர்களின் ரத்தத்தை மண்ணில் சிந்த வைத்தவர்களின் கணக்குகள் தீர்க்கப்பட்டுவிட்டன[100%?!].

இந்தியா அமைதியாக இருக்கும் என நினைத்தவர்கள், இன்று வீடுகளுக்குள் முடங்கிவிட்டனர்[இது நிரந்தரம் என்று நம்மவர் முடிவு செய்தது எப்படி?].

தங்களிடமிருந்த ஆயுதங்களை நினைத்துப் பெருமைகொண்டவர்கள், அதன் இடிபாடுகளில் புதைக்கப்பட்டு உள்ளனர்[மிச்சம் மீதி இல்லாமலா?] என ஆவேசத்துடன் பேசியுள்ளார்//.

https://www.dailythanthi.com/news/india/those-who-set-out-to-destroy-sindoor-were-buried-in-the-ground-pm-modis-passionate-speech-1159142 -மே 22, 2025.

* * * * *

#புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் வியாழக்கிழமை பயங்கரவாதிகளுடனான மோதலில் ஒரு வீரர் கொல்லப்பட்டார். "நடந்து வரும் நடவடிக்கையின் போது, ​​கடுமையான துப்பாக்கிச் சண்டை தொடர்கிறது. துப்பாக்கிச் சண்டையில் நமது துணிச்சலான வீரர்களில் ஒருவர் பலத்த காயமடைந்தார், சிறந்த மருத்துவ முயற்சிகள் இருந்தபோதிலும் உயிரிழந்தார்" என்று வைட் நைட் கார்ப்ஸ் X இல் பதிவிட்டுள்ளது# -Soldier killed during encounter with terrorists in J&K's Kishtwar

இயற்கையின் கோர முகம்! இறைவனின் கொடூர நெஞ்சம்!!

ந்த உலகில் வாழ்ந்து மறைந்த ஞானிகள், மகான்கள், அவதாரங்கள், சீரிய சிந்தனையாளர்கள், அரிய உயரிய அறிவியலாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள் என்போர் மிகப் பலர்.

இவர்களில் தப்பிப் பிழைத்தவர் எவருமே இல்லை.

“வெகு வெகு அற்ப மானிடப் பதராகிய  நாமும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல என்னும் நிலையில், இறப்பை எண்ணி அஞ்சுவது அறிவீனம்” என்று சொல்லிச் சொல்லிச் சொல்லி இந்தவொரு அச்சத்திலிருந்து முற்றிலுமாய் விடுபட முயற்சிக்கிறோம்.

ஆனால்.....

ஆண்டுகள் கழிந்து கழிந்து, வயது முதிர்ந்து முதிர்ந்து சாவை நோக்கிய நம் பயணம் தொடரும் நிலையில் மனமும் ஒட்டுமொத்த உடம்பும் கிடந்து தவிக்கிறதே! துடிக்கிறதே!!

வாழப் பணித்துச் சாவையும் பரிசாகக் கொடுத்த இயற்கை இத்தனைக் கோரமானதா? கடவுள் இருந்தால் இத்தனைக் கொடூரக் குணத்தவனா அவன்?!

புதன், 21 மே, 2025

பொல்லாத மரணமும் அல்லாடும் மனித இனமும்!!!

னிதர்களின் தீரவே தீராத கவலைகளில் தலையாயது மரணித்த  பிறகு என்ன ஆகிறோம் என்பதுதான்.

இந்த மரண பயமே மனிதர்களை ஆட்டிப்படைக்கும் மூடநம்பிக்கைகளின் விளைநிலமாக உள்ளது.

மதங்களின் தோற்றத்திற்கும் இதுவே முக்கியக் காரணமாகும். உலக அளவில் 4000க்கும் மேற்பட்ட மதங்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள்.

அவற்றுள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றவற்றின் எண்ணிக்கை 20 என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை.

இவற்றுள் அதிக அளவில் மக்களால் பின்பற்றப்படும்  மதங்களின் கொள்கைகள் குறித்த சிறு தொகுப்புக் கட்டுரை இதுவாகும்.

கிறிஸ்தவம் மதம்: மரணம் என்பது முடிந்த முடிவு அல்ல. ஆன்மா என்று ஒன்று உண்டு. செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப அவற்றைச் சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ அனுப்புவதைக் கடவுள்[கர்த்தர்] முடிவு செய்கிறார்.

இஸ்லாம் மதம்: மரணம் பற்றிய அச்சம் தேவையற்றது. ஆன்மா உண்டு. மனிதர்கள் இறந்த பிறகு ஆன்மாக்களைச் சேகரிக்க அல்லா[ஹ்] தேவதைகளை அனுப்புகிறார். செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவை செல்லும் இடம் குறித்து அல்லா நியாயத் தீர்ப்பு வழங்குவார்.

இந்து மதம்: மரணத்திற்குப் பின்னர் மறுபிறப்புகள் உண்டு. மனிதர்கள் மீண்டும் வேறொரு உடலில், விலங்கு வடிவில்கூடப் பிறப்பார்கள். ஞானிகள், மகான்கள் போன்றோர் மோட்சம் பெற்று முடிவில்லாத மறுபிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற முடியும். சொர்க்கமும் நரகமும் உள்ளன. கடவுள்களுக்குப் பஞ்சமில்லை.

பௌத்த மதம்: வாழ்க்கையும் மரணமும் ஒரு தொடர்ச்சி என்று பௌத்தம் சொல்கிறது. ஆன்மா உண்டு. மறுபிறப்பு எப்போது, ​​எங்கே, எப்படி நிகழ்கிறது என்பது ஒரு நபரின் திரட்டப்பட்ட கர்மாவால் தீர்மானிக்கப்படுகிறது. கடவுள் குறித்த கேள்விக்குப் புத்தர் மௌனம் சாதித்ததாகச் சொல்லப்படுகிறது.

சீக்கிய மதம்: ஆன்மா ஒருவரின் நல்வினை தீவினைகளுக்கேற்ப மறுபிறவி எடுக்கிறது. மறுபிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவது கடவுளைத் தியானிப்பதன் மூலம் சாத்தியமாகும்.

ஜைன மதம்: ஆன்மா நித்தியமானது. மறுபிறப்பு உண்டு. இறுதி இலக்கு ஆன்மாவைக் கர்மாவிலிருந்து விடுவிப்பதே. பாவம் செய்யாமல் வாழ்வது அதைச் சாத்தியப்படுத்தும்.

சீன மதம்[கன்பூசியனிஸ்]: இறந்த பிறகு நமக்கு என்ன நடக்கிறது என்பதைவிடவும், மனத்தூய்மையுடன் வாழ்வதையே வற்புறுத்துகிறது சீன மதம். ஆன்மா, மறுபிறப்பு போன்றவற்றை அது பொருட்படுத்தவில்லை. 

கடவுள் மறுப்பு மதங்கள்[இவற்றை மதங்களாகக் கருதுதல் கூடாது  என்பாரும் உளர்]: கடவுள் இல்லை; ஆன்மா, மறுபிறப்பு போன்றவையும் இல்லை[நாத்திகம்>atheism அஞ்ஞானவாதம்>agnosticism, மனிதநேயம்>humanism) போன்ற பிரிவுகள் உள்ளன].

***மிகச் சுருக்கமான பதிவு என்பதால், முக்கியமான கருத்தாக்கங்கள் விடுபட்டிருக்கலாம் என்பதை நினைவில் கொள்க.

திங்கள், 19 மே, 2025

உடம்புக்குள் ‘உயிர்’ இருப்பது உண்மையா?

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகி, உயிர்வாயு[ஆக்சிஜன்] கலந்து, வேதியியல் மாற்றங்களைப் பெறுவதன் மூலம் சக்தியாக மாறுகிறது. அச்சக்தி செல்களிலும் ஊடுருவுகிறது. செல்கள் உரிய சக்தியைப் பெற்ற நிலையில் உடம்பு இயங்குகிறது. இந்தச் சக்தியை நம் உடம்பானது முற்றிலுமாக இழக்கும்போது அதன் இயக்கம் நின்றுபோகிறது; பின்னர் அழிந்துபோகிறது.

இவ்வகையில், உடம்பின் இயக்கத்திற்கு ஆதாரமாக அமைவது ‘சக்தியே’ என்பது அறியப்படுகிறது. இந்தச் சக்தியே ‘உயிர்’ என்று அழைக்கப்படுகிறது.

ஆக, உடம்புக்குள் பரவிக்கிடப்பது ‘சக்தி’ மட்டுமே; உயிர் என்று கூடுதலாக ஒன்று இல்லை[இந்தச் சக்தியை, ‘உயிர்ச் சக்தி’ என்றும் அழைத்துக்கொள்ளலாம்]. 

இது, இன்றைய அறிவியல் வழங்குகிற உடம்பின் இயக்கம் பற்றிய செய்தியாகும்.

எனவே, இனியேனும்..... 

நம் உடம்புக்குள் ஏதோ[உயிர், மனம்(ஆய்வுக்குரியது), ஆன்மா, ஆவி] “இருக்கு... இருக்கு... இருக்கு” என்று கிறுக்குத்தனமாய் உளறிக்கொண்டிருக்காமல், இருக்கும்வரை பிற மனிதர்கள் மீதும் ஏனைய உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்தி அமைதியாக வாழ்ந்திட முயற்சி செய்வோம்.

*   *   *   *   *
***எங்கோ எப்போதோ படித்ததை நினைவுகூர்ந்து பதிவு செய்ததன் மறுபதிப்பு இது.

சனி, 17 மே, 2025

அப்பா விடு தூது[‘கல கல’ காதல் கதை]!

ழைப்பு மணி இடைவிடாமல் ஙணஙணத்தது.

எரிச்சலுடன் ஓடிப்போய்க் கதவைத் திறந்த கேசவன், எதிர்த்த வீட்டு வேலப்பன் உருவத்தில் வேட்டியும் தொளதொள பனியனுமாய், இரணியனைச் சம்ஹாரம் செய்த நரசிங்கமூர்த்தியே நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்.

“வாருமய்யா..... இப்பத்தான் முதல் தடவையா அழைப்பு மணி அடிச்சிப் பார்க்குறீரா?”

”ஆமா. அதோட முதல் தடவையா ஒரு கொலையும் செய்யப் போறேன்.”

வெலவெலத்துப் பின்வாங்கினார் கேசவன்; “என்னய்யா சொல்றீர்? என்றார்.

“உம்ம மகன் என் பொண்ணுக்கு உயிரையே தர்றதா காதல் கடிதம் எழுதியிருக்கான். அந்த உயிரைத்தான் வாங்கிப்போக வந்தேன்” -உரமேறிய வார்த்தைகளை உதிர்த்தார் வேலப்பன்.

“ஏய்யா கத்துகிறீர்?” -அவரை இழுத்துப்போய் இருக்கையில் அமர்த்திவிட்டுக் கதவையும் அடைத்துவிட்டுச் சொன்னார் கேசவன், ’உம்ம பையன் என் மகளைக் கணக்குப் பண்றான். இனியும் நாவல் கீவல்னு இரவல் கேட்டு என் வாசல்படி மிதிச்சான்னா நான் பொல்லாதவன் ஆயிடுவேன்’னு நீர் எச்சரிக்கை பண்ணினதிலேயிருந்து என் மகனோட பார்வைகூட உம் வீட்டு மேல படியறதில்ல. அதோ பாரும், மூடிய எங்க வீட்டு ஜன்னல் கதவைத் திறந்து ஆறு மாசம் ஆச்சு. பூச்சி கூடு கட்டியிருக்கு பாரும். என் மகன் கண்டிப்பா காதல் கடிதம் கொடுத்திருக்க மாட்டான்.”

“கொடுத்திருக்கான். இதோ பாரும் அவன் நேத்து கொடுத்த கடிதம்.”

“தபாலில் அனுப்பியிருப்பானோ?”

“தபாலில் அனுப்பிப் பிடிபட உம்மை மாதிரி உன் மகன் கூமுட்டையா என்ன? அவன் புத்திசாலி. நீர் என்கிட்டே ஒசி வாங்கிப் படிச்சிட்டுத் திருப்பித் தர்ற புராண இதிகாசப் புத்தகங்களில் உன் புத்திரசிகாமணி கடிதம் வெச்சி அனுப்பியிருக்கான். நேத்து என் மகள்கிட்டே கொண்டு வந்து கொடுத்தீரே வியாசர் பாரதம், அதை நான் வாங்கிப் புரட்டினப்போ இந்த ரகசியம் அம்பலமாச்சு. மிரட்டி விசாரிச்சதில் என் மகள் உண்மையை ஒத்துக்கிட்டா.”

அவமானத்தால் தொங்கிப் போனது கேசவன் முகம். “மன்னிச்சுடுப்பா. இனிமே இது மாதிரி நடக்காம பார்த்துக்கிறேன்” என்றார்.

“உம்ம வாக்குறுதியில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஒரு வாரம் அவகாசம் தர்றேன். உம்ம மகனை எங்காவது அனுப்பி வெச்சிடணும். அது ஆகாத காரியம்னா, ஒரு மாசம் டைம் தர்றேன். மரியாதையா நீரே வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிடும். உன் மகன் எழுதின அத்தனைக் கடிதங்களும் என்கிட்டே இருக்கு. அவனையும் அவனுக்கு உடந்தையா இருந்ததா உம்மையும் கம்பி எண்ண வெச்சிடுவேன்.” -கையிலிருந்த கடிதக் கற்றையை விசிறி போல விரித்துக் காட்டிவிட்டுப் புயலாய் வெளியேறினார் வேலப்பன்.

நாட்கள் சில கழிந்தன.

ன்னலருகே அமர்ந்து பராக்குப் பார்த்துக்கொண்டிருந்த, சியாமளாவின் தந்தை வேலப்பன், கேசவன் தன்னைத் தேடி வருவதைக் கண்டார். அவர் பின்னால் அவர் மகன் பாலன் ஒரு தோல்பையுடன் வந்துகொண்டிருந்தான்.

‘பயல் வெளியூர் கிளம்பிட்டான் போல’ என நினைத்தார் வேலப்பன்.

அவரை அணுகிய கேசவன்,  “நீர் சொன்னபடியே இவனைச் சேலத்தில் இருக்கும் என் தங்கை வீட்டுக்கு அனுப்பறதா முடிவு பண்ணிட்டேன். போறதுக்கு முந்தி உம்மகிட்டே பாலன் எதோ பேசணும்னு சொன்னான். அதான் அழைச்சுட்டு வந்தேன். பேசுங்க. முக்கியமான வேலை இருக்கு. நான் வர்றேன்” என்று சொல்லி நகர்ந்தார்.

“சொல்லுப்பா” என்றார் வேலப்பன் பாலனைப் பார்த்து.

பாலன் சொன்னான்:

“நீங்க அடிக்கடி, பாட்டுக் கேட்க எங்க வீட்டிலேயிருந்து ‘பென்டிரைவ்’ இரவல் வாங்கி வருவீங்க இல்லியா? நீங்க திருப்பித் தர்ற ‘பென்டிரைவ்’ களில் பாடலை அழிச்சிட்டு யாரோ புதுக்கவிதை பதிவு பண்ணியிருக்காங்க. போட்டுக் காட்டுறேன். குரலை வைத்து அது யாருன்னு கண்டுபிடிக்க முடியுதா பாருங்க” என்று சொல்லிக்கொண்டே, தோல்பையிலிருந்து ஒரு மடிக்கணினியை எடுத்து வைத்து இயக்கினான்.

பார்த்துத் திகைத்த வேலப்பன் திராவகத்தில் விழுந்துவிட்டவர் போல் துடித்தார்.

பாலன் மீது கொண்டிருந்த அதீத காதலால், பென்டிரைவில் கவிதைச் சரம் தொடுத்திருந்தாள் அவர் மகள் சியாமளா!

“நான் போறேங்க” என்ற பாலனின் குரல்தான் அவரைத் திகைப்பிலிருந்து விடுவித்தது. அவன் தோல்பையுடன் வெளியேறிக்கொண்டிருந்தான்.

“மாப்பிள்ளை..... போகாதிங்க..... நில்லுங்க.....” என்று கூவிக்கொண்டே அவனைப் பின்தொடர்ந்தார் வேலப்பன்.

                                   *   *   *   *   *

***முன்னணி வார இதழில்[ராணி> பல ஆண்டுகளுக்கு முன்பு] வெளியானது. கதாசிரியன்: ‘கதைக் குரிசில்’ முனைவர் ப.பரமசிவம்[ஹி... ஹி... ஹி!!!]

வெள்ளி, 16 மே, 2025

மோடி இனி.....!?!?!

டாவடித்தனத்தில் ஈடுபட்ட நம் எதிரியை இரும்புக் கரம் கொண்டு அடக்கிய  நம் பிரதமர் மோடி[நெருப்பு]யின் அதிரடி நடவடிக்கை கண்டு ஒட்டுமொத்த உலகமும் வியப்பில் ஆழ்ந்துகிடக்கிறது.

சுட்டுவிரல் அசைவில் பகைவன் பாகிஸ்தானியனின் கொட்டத்தை அடக்கிய பிரதமரின் சாதனை நம் குடிமக்களையும் பெரு மகிழ்ச்சியில் திளைக்கச் செய்துள்ளது. 

ஆனால்.....

மாநிலங்களின்[குறிப்பாகத் தமிழ்நாடு] அதிகாரங்களை முற்றிலுமாய்ப் பறித்து அவற்றை முடக்கிவிடும் தீவிர நடவடிக்கையைப் பிரதமர் மேற்கொண்டிருப்பது மக்களைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

அந்த நடவடிக்கை.....

மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களைக் கிடப்பில் போட்டு, அவை தம் மக்களுக்கு நற்பணிகள் செய்யவிடாமல் தடுக்கும் ஆளுநர்களின் அடாவடித்தனங்களைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதல்லவா, அந்தத் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்திட, குடியரசுத் தலைவரைத் தூண்டி உச்ச நீதிமன்றத்திடம் விளக்கங்கள் கேட்டிருப்பதுதான்.

இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டங்களைத் தவிர்ப்பதை[பெரும்பாலும்] வழக்கமாக்கிகொண்டிருந்த மோடி, பாகிஸ்தானுடனான மோதலின்போது அனைத்துக் கட்சிக் கூட்டங்களைப் புறக்கணித்ததும், மாநில உரிமைகளை முற்றிலுமாய்ப் பறிக்க முயல்வதும் அவர் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக ஆகிக்கொண்டிருக்கிறாரோ என்னும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது.

மோடி நம் பிரதமராகவே நீடிக்க வேண்டும் என்பது மக்களின் ஆசை. 

இப்படி ஆசைப்படுவது அசட்டுத்தனமானதா அறிவுப்பூர்வமானதா என்பதை இந்த மண்ணில் இனி அடுத்தடுத்து இடம்பெறும் நிகழ்வுகளால் அறியலாம்.

வியாழன், 15 மே, 2025

போர் வெற்றி[‘இந்.-பாக்.’]... வேண்டாமே வெற்று ஆரவாரம்!!!

டுத்தடுத்து வெளியான ஊடகச் செய்திகள், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரில் நம் இந்தியா வெற்றிபெற்றது என்பதை உறுதிப்படுத்துகின்றன. 

ஆனால்.....

பகைவன் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்பில் பத்தில்[உண்மை நிலவரம் மோடி அரசுக்கே தெரியும்] ஒரு பங்கேனும் நமக்கும் நேர்ந்திருக்கும் என்பதை மறுக்க இயலாது.

ஒரே ஒரு உதாரணம் மட்டும்:

//Urba and Zain were among the 27 fatalities, including security personnel, resulting from the intense shelling in Jammu and Kashmir. Their father, Rameez, a teacher, sustained grave injuries in the same incident>ஜம்மு காஷ்மீரில் நடந்த கடுமையான ஷெல் தாக்குதலில் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் உர்பா மற்றும் ஜைனும்[குழந்தைகள்] அடங்குவர். ஆசிரியரான அவர்களின் தந்தை ரமீஸ் அதே சம்பவத்தில் படுகாயமடைந்தார்> https://www.msn.com/en-in/news/world/born-together-died-together-poonch-twins-killed-in-pakistan-shelling/ar-AA1EJJ0F?ocid=winp2fptaskbarhover&cvid=d520312c1f6443598138a0480fe8c86d&ei=41//

உயிரிழந்தோரையும் அவர்தம் குடும்பங்கள்[+பகைவன் தரப்பில்] அனுபவிக்கும் தீராத துயரங்களையும்[+நமக்கு ஏற்பட்ட பிற இழப்புகள்] மறந்து ஆனந்தக் கூத்தாடுவது சரியல்ல.

வெற்றிச் செய்திகளை மக்களிடம் கொண்டுசேர்ப்பதும், அதன் மூலம் அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதும் தேவைதான். அதே நேரத்தில், நமக்குள்ள பலவீனங்களையும் நம் மக்கள் அறிந்திருந்தால்தான், தோல்விகளைச் சந்திக்கும்போது அவற்றை ஏற்கும் மனப் பக்குவத்தை அவர்கள் பெற முடியும் என்பதை மறத்தல் கூடாது. 

தோற்றவன்[பாகிஸ்தான்] பலவான் ஆகி, தக்க சமயத்தில் நம்மைப் பழிவாங்க முயல்வான் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

எனவே.....

பாகிஸ்தானின் தோல்விகளை மட்டுமே பட்டியலிட்டு அறிக்கைகள் வெளியிட்டு ஆர்ப்பரிப்பதால் பயன் ஏதுமில்லை.

காணொலி ஒன்றில்[இங்கே பதிவு செய்திருந்த காணொலி நீக்கப்பட்டுள்ளது!] குலை நடுங்கும் உலக நாடுகள்’ என்று கூச்சல் எழுப்பியிருக்கிறார்கள்.

உலக நாடுகள் ஏன் குலை நடுங்க வேண்டும்? உலகில் உள்ள அத்தனை நாடுகள் மீதும் இந்தியா போர் தொடுத்திருக்கிறதா?

நம்மவர்களுக்குச் சிந்திக்கும் அறிவே இல்லை என்பதை உலகறிய இப்படிப் பறைசாற்றலாமா?

இன்னும் சொல்ல எவ்வளவோ உள்ளன; சொல்ல விரும்பவில்லை; சொல்லவும் கூடாது.

புதன், 14 மே, 2025

மராட்டியரின் ‘மொழி வெறி’ வளர்க! வெல்க!!!

//‘பீட்ஸா’ என்னும் உணவுப் பொருளை வினியோகித்த ஊழியரிடம் ‘மராத்தி’ மொழியில் பேசுமாறு வற்புறுத்தியதோடு, பேசாத[இயலாத?] அவருக்குத் தரவேண்டிய தொகையைத் தர மறுத்தார்கள் ஒரு மராத்தியத் தம்பதியர்// என்பது இன்று[14.05.2025] காலை 06.30 மணியளவில் ‘சன்’ தொலைக்காட்சியில் வெளியான செய்தி.

இது கண்டிக்கத்தக்கதல்ல, கை குலுக்கிப் பாராட்டி மகிழ்வதற்குரிய செயல் ஆகும்.

இது அரிதான ஒரு நிகழ்வாக இருத்தல் கூடாது.

இந்த ‘மொழிப் பற்று’... அல்ல, ‘மொழி வெறி’ மராட்டிய மாநிலத்திலுள்ள அத்தனைத் தம்பதியருக்கும் மட்டுமல்ல, அத்தனைக் குடிமக்களுக்குமான அவசியத் தேவை ஆகும்.

இந்தியைத் தாய்மொழியாகக்கொண்டவர்களில் மிகப் பெரும்பாலோர்[அத்தனைப்பேரும்?] இந்தி வெறியர்களாக இருக்கிறார்கள். இருப்பதால்தான் இந்தியாவெங்கும் அந்த அரைவேக்காட்டு மொழி ஆதிக்கம் செலுத்துகிறது.

மோடி, அமித்ஷா கூட்டத்தார் அதை வளர்த்து[+மதவெறி, மூடநம்பிக்கைகள்]த் தங்களையும் வளர்த்துக்கொள்கிறார்கள்; ஆட்சியில் நீடிக்கிறார்கள்.

எனவே, ‘இந்தி’யர் அல்லாத அனைவருக்குமான நம் வலியுறுத்தல்:

“உங்களின் தாய்மொழிப் பற்றைத் ‘தாய்மொழி வெறி’யாக மாற்றுவீர்! இந்தி ஆதிக்கம் தகர்க்கப்பட்டு, அனைத்து மாநில மொழிகளையும்[ஆட்சி மொழி & அலுவல் மொழி]அரியணையில் ஏற்றப் பாடுபடுவீர்!!

செவ்வாய், 13 மே, 2025

பதுங்கிப் பதுங்கிப் பாய்கிறானா நம் எதிரி பாகிஸ்தானி?!

பாகிஸ்தானின் முதுகெலும்பை முறித்துவிட்டதாக நம் பெருமதிப்பிற்குரிய நரேந்திர மோடி அவர்கள், நேற்று இரவு[08.00 மணி] நம் நாட்டு மக்களுக்காக உரையாற்றியபோது பெருமிதப்பட்டார்.

பஞ்சாபிலுள்ள ஆதாம்பூர் விமானப்படைத் தளத்திற்குச் சென்று வீரர்களிடையே மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்; "இனி ஒரு முறை பாகிஸ்தான் வாலாட்டினால் அதை ஒட்ட நறுக்குவேன்” என்பது போல் எச்சரித்தார்.

பதற்றத்திலிருந்த நம் மக்களும் நிம்மதிப் பெருமூச்செறிந்தார்கள்.

‘யூடியூப்’ தளத்தில் உலா வந்தபோது கீழ்க்காணும் காணொலி கண்ணில் பட்டு அடியேனைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 


***செய்தி[பாகிஸ்தானின் அத்துமீறல்] பொய்யானதாக இருந்தால் நல்லது என்பது நம் உள்மன ஆசை.

'இரண்டு மூளைகள்'..... கொடுத்துவைத்த கரப்பான் பூச்சிகள்!![பகிர்வு]

கரப்பான் பூச்சிகளுக்கு இரண்டு மூளைகள் உள்ளன.

ஒன்று தலையிலும் மற்றொன்று வயிற்றுக்கு அருகிலும் உள்ளன[one inside their skulls, and a second, more primitive brain that is back near their abdomen].

இந்த உள்ளமைவு, அவை தலையை இழந்தாலும்கூட, தொடர்ந்து நகர உதவுகிறது.

கரப்பான் பூச்சிகள் இந்த அமைப்பைப் பயன்படுத்தி வேகமாக நகர்கின்றன; பொருள்கள், முகங்கள், இடங்கள் போன்றவற்றை நினைவில் கொள்கின்றன.

அவற்றின் மூளை மனிதர்களின் மூளையை விட மிக மிக மிகச் சிறியது. ஆனால், அவற்றில் இரண்டு மடங்கு ‘சினாப்ஸ்கள்’ [நரம்பணுக்களின்(neurons) இடையே தகவல்களைக் கடத்துபவை] உள்ளன. இதனால் அவை தகவல்களைச் சிறப்பாகச் சேமித்துச் செயல்படுகின்றன.

2 மூளை உள்ள 10 உயிரினங்கள்:


திங்கள், 12 மே, 2025

இந்தக் கேள்வியைக் கேட்பது தேசத் துரோகமா?

‘ஆபரேஷன் சிந்தூர்: ஐசி-814, புல்வாமா குற்றவாளிகள் உட்பட 100 பயங்கரவாதிகள் பலி' என்னும் தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது நம் ராணுவம்[மோடி அரசின் அனுமதியுடன்][https://tamil.indianexpress.com/india/]

பலியான 100 தீவிரவாதிகளில், லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த முடாஸர் காடியன்காஸ் & காலித் என்ற அபு அகாஷா; ஜெய்ஷ்-இ-முகமதுவைச் சேர்ந்த முகமது யூசுப் அசார், ஹபீஸ் முகமது ஜலீல் & முகமது ஹசன் கான் ஆகியோர் கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியில், புல்வாமா குற்றவாளிகள் உட்பட’[இது பழைய[2019] நிகழ்வு. இது பற்றி இப்போது குறிப்பிடத் தேவையில்லை> 19 குற்றவாளிகளை அடையாளம் கானப்பட்டனர். ஆகஸ்ட் 2021 வாக்கில், முக்கிய குற்றவாளியும் ஆறு பேரும் கொல்லப்பட்டனர்> விக்கிப்பீடியா] என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, பஹல்காமில் 26 பேரைப் படுகொலை செய்த நான்கு தீவிரவாதிகள் பற்றிய தகவல்கள் இடம்பெறாதது ஏன் என்பது நம் கேள்வி.

[நன்றி: https://suvanappiriyan.blogspot.com/2025/05/blog-post_11.html]

போர் முடிவடைந்துவிட்ட நிலையில் அரசின் இயலாமையை மறைத்து.....

100 பேர்களில் அவர்களும் அடக்கம் என்பது போல் செய்தி வெளியிட்டு, மோடி தான் மேற்கொண்ட சபதத்தை[“அவர்கள் பிடிக்கப்பட்டு நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்குத் தண்டனை வழங்கப்படும்”> மோடி] நிறைவேற்றப்பட்டுவிட்டதாக மக்களை நம்பச் செய்வதன் உள்நோக்கம் என்ன?

உள்நோக்கத்தை அனுமானித்துச் சொல்ல நாம் விரும்பவில்லை.

சொல்வது தேசத் துரோகமாகக் கருதப்படக்கூடும்!

* * * * *

அந்த நான்கு பேர்.....

* * * * *

https://tamil.indianexpress.com/india/ic-814-and-pulwama-perpetrators-among-100-terrorists-killed-on-day-1-of-op-sindoor-9058845