//ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறாத கோயில்களைக் கண்டறிந்து, குடமுழுக்கு நடத்தும் பணியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக, 400 ஆண்டுகளுக்குப் பிறகு[!!!!!], கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலுக்கும், 300 ஆண்டுகளுக்குப் பிறகு[!!!], காஞ்சிபுரம் மாவட்டம் சாத்தனஞ்சேரி கரியமாணிக்க வரதராஜப் பெருமாள் திருக்கோயிலுக்கும், மேலும் பல கோயில்களுக்கும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன.
தொன்மையான திருக்கோயில்களைப் புதுப்பித்துப் பாதுகாத்திடும் வகையில், முதல்வர் ஸ்டாலின் ரூ.425 கோடியை அரசு மானியமாக வழங்கியுள்ளார்.
அரசு மானியம், பொதுநல நிதி, திருக்கோயில் நிதி, உபயதாரர்கள் நிதி என மொத்தம் ரூ.560 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான[!!!!!!!!!!] 352 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
1,000ஆவது[!] குடமுழுக்கு சென்னை, மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயிலுக்கும்,
2,000ஆவது[!!] குடமுழுக்கு மயிலாடுதுறை - கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயிலுக்கும்,
3,000ஆவது[!!!] குடமுழுக்கு நாகை - திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோயிலுக்கும் நடத்தப்பட்டுள்ளன.
4,000ஆவது[!!!!] குடமுழுக்கு இன்று, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோயிலுக்கு நடத்தப்படவுள்ளது.
இதுவரை இப்படி ஒரு சாதனை[மூடநம்பிக்கைப் பாதுகாப்பு] தமிழ்நாட்டின் வரலாற்றில் நிகழ்த்தப்பட்டதில்லை//
மேற்கண்டது அறநிலையத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள[காணொலி*] அறிக்கை.
பெருமளவில் பகுத்தறிவாளர்கள் உள்ள கட்சி என்னும் பாராட்டைப் பெற்றது திராவிட முன்னேற்றக் கழகம்.
இங்கு நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சி என்று, அவ்வப்போது முக்கியப் பொறுப்பு வகிப்பவர்கள் பலரும்[மு.க.ஸ்டாலின் உட்பட] பேசிப் பேசிப் பெருமிதப்படுகிறார்கள்.
தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளைப் பெற்று, ஆட்சியைக் கைப்பற்ற முயலும் எந்தவொரு கட்சியும், எவ்வகையிலும், மக்களின், குறிப்பாகப் பக்தர்களின் மனங்கள் புண்படும் வகையில் செயல்படக் கூடாது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதுதான்.
எனவே, நிகழ்காலத்தில் மக்கள், குறிப்பாகப் பக்தர்கள் விரும்பி மேற்கொள்கிற கோயில் விழாக்களைத்[கொண்டாட்டங்கள், குடமுழுக்கு போன்றவை]தொடர்ந்து நடத்திட அனுமதிக்கலாம்.
ஆனால், நடைமுறையில் இல்லாமல்போனவையும், மக்களால் மறக்கப்பட்டவையுமான பக்தி சார்ந்த நிகழ்வுகளை அவர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், சிதைந்து அழிந்த பழைய கோயில்களைப் புதுப்பிப்பதும், அவற்றிற்குக் குடமுழக்குகள் நடத்துவதும், அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகவேனும் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுவதைத் தடுக்கும் தவறான நடவடிக்கை ஆகும்[இதற்காகச் செலவிடும் தொகையை வேறு நல்ல பணிகளுக்குப் பயன்படுத்தலாம்].
தி.மு.க. அரசு இது விசயத்தில் தன்னைத் திருத்திக்கொள்வது கட்சிக்கும் மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.
*https://www.youtube.com/watch?v=_U3Zpo12ZLw&authuser=0