திங்கள், 23 பிப்ரவரி, 2026

‘சூட்[கின்னஸ்] சாதனையாளர் மோடியின் அடுத்த சாதனை ‘சுற்றுலா நாயகன்’?!

மேற்கண்ட, பழையதொரு காணொலியில்[20 ஆகஸ்ட் 2016].....

//அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புது தில்லிக்கு வருகை தந்தபோது, நம் பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த சர்ச்சைக்குரியதும் விலையுயர்ந்ததுமான சூட், பின்னர் ரூ.43,131,311 கோடிக்கு ஏலம் விடப்பட்டு, மிகவும் விலையுயர்ந்த சூட் என்று, கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது. இந்தச் சூட்டை சூரத் வைர வியாபாரியும், தனியார் விமான நிறுவன உரிமையாளருமான லால்ஜிபாய் படேல் வாங்கினார்// என்னும், நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கிற அரியதொரு தகவலை அறிந்துகொண்டீர்கள்.

விரைவில்.....

//உலகம் சுற்றுவதில் மாபெரும் சாதனை புரிந்து, ‘கின்னஸ்’ஸில் நம் பிரதமர் இடம்பிடித்தார்// என்னும், நம் செவிகளில் இன்பத் தேன் சொரியும் செய்தி விரைவில் வெளிவர, அயோத்தி ராமச்சந்திர மூர்த்தியை நாளெல்லாம் பிரார்த்திப்போம்.

தொடர்ந்து கின்னஸ் சாதனைகள் பல நிகழ்த்தி, ‘கின்னஸ் நாயகன்’ என்னும் பட்டத்தையும் நம்மவர் பெற்றிட நெஞ்சார வாழ்த்துகிறோம்!

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

மூட்டை மூட்டையாய் மூடநம்பிக்கையைப் புதுப்பிக்கும் ‘தி.மு.க.’ ஸ்டாலின் அரசு!!!

//ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறாத கோயில்களைக் கண்டறிந்து, குடமுழுக்கு நடத்தும் பணியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக, 400 ஆண்டுகளுக்குப் பிறகு[!!!!!], கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலுக்கும், 300 ஆண்டுகளுக்குப் பிறகு[!!!], காஞ்சிபுரம் மாவட்டம் சாத்தனஞ்சேரி கரியமாணிக்க வரதராஜப் பெருமாள் திருக்கோயிலுக்கும், மேலும் பல கோயில்களுக்கும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன.

தொன்மையான திருக்கோயில்களைப் புதுப்பித்துப் பாதுகாத்திடும் வகையில், முதல்வர் ஸ்டாலின் ரூ.425 கோடியை அரசு மானியமாக வழங்கியுள்ளார்.

அரசு மானியம், பொதுநல நிதி, திருக்கோயில் நிதி, உபயதாரர்கள் நிதி என மொத்தம் ரூ.560 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான[!!!!!!!!!!] 352 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

1,000ஆவது[!] குடமுழுக்கு சென்னை, மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயிலுக்கும்,

2,000ஆவது[!!] குடமுழுக்கு மயிலாடுதுறை - கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயிலுக்கும்,

3,000ஆவது[!!!] குடமுழுக்கு நாகை - திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோயிலுக்கும் நடத்தப்பட்டுள்ளன.

4,000ஆவது[!!!!] குடமுழுக்கு இன்று, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோயிலுக்கு நடத்தப்படவுள்ளது.

இதுவரை இப்படி ஒரு சாதனை[மூடநம்பிக்கைப் பாதுகாப்பு] தமிழ்நாட்டின் வரலாற்றில் நிகழ்த்தப்பட்டதில்லை//

மேற்கண்டது அறநிலையத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள[காணொலி*] அறிக்கை.

பெருமளவில் பகுத்தறிவாளர்கள் உள்ள கட்சி என்னும் பாராட்டைப் பெற்றது திராவிட முன்னேற்றக் கழகம்.

இங்கு நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சி என்று, அவ்வப்போது முக்கியப் பொறுப்பு வகிப்பவர்கள் பலரும்[மு.க.ஸ்டாலின் உட்பட] பேசிப் பேசிப் பெருமிதப்படுகிறார்கள்.

தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளைப் பெற்று, ஆட்சியைக் கைப்பற்ற முயலும் எந்தவொரு கட்சியும், எவ்வகையிலும், மக்களின், குறிப்பாகப் பக்தர்களின் மனங்கள் புண்படும் வகையில் செயல்படக் கூடாது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதுதான்.

எனவே, நிகழ்காலத்தில் மக்கள், குறிப்பாகப் பக்தர்கள் விரும்பி மேற்கொள்கிற கோயில் விழாக்களைத்[கொண்டாட்டங்கள், குடமுழுக்கு போன்றவை]தொடர்ந்து நடத்திட அனுமதிக்கலாம்.

ஆனால், நடைமுறையில் இல்லாமல்போனவையும், மக்களால் மறக்கப்பட்டவையுமான பக்தி சார்ந்த நிகழ்வுகளை அவர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், சிதைந்து அழிந்த பழைய கோயில்களைப் புதுப்பிப்பதும், அவற்றிற்குக் குடமுழக்குகள் நடத்துவதும், அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகவேனும் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுவதைத் தடுக்கும் தவறான நடவடிக்கை ஆகும்[இதற்காகச் செலவிடும் தொகையை வேறு நல்ல பணிகளுக்குப் பயன்படுத்தலாம்].

தி.மு.க. அரசு இது விசயத்தில் தன்னைத் திருத்திக்கொள்வது கட்சிக்கும் மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

*https://www.youtube.com/watch?v=_U3Zpo12ZLw&authuser=0

சனி, 21 பிப்ரவரி, 2026

கருந்துளையில் ‘துளை’[துவாரம்]யா? உண்மையா?!

“ஒரு பெரிய நட்சத்திரம் தன் வாழ்நாளின் இறுதியில் எரிபொருளை இழந்து, சிதைந்து(Collapse), அடர்த்தியான புள்ளியாக மாறும்போது கருந்துளை'(Black Hole) உருவாகிறதுஎன்கிறார்கள் விஞ்ஞானிகள்..... சரி.

“இதன் ஈர்ப்பு விசை எவ்வளவு வலிமையானது என்றால், தற்கு மிக அருகில் செல்லும் நட்சத்திரங்கள், கோள்கள், ஏன் ஒளிகூட உள்ளே இழுக்கப்படும்; மீண்டும் வெளியே வர இயலாது” என்று மிரட்டுகிறார்கள் அவர்கள்..... சரிங்க.


“அடிவானம்தான் கருந்துளையைச் சுற்றியுள்ள எல்லை. இந்த எல்லைக்கு அப்பால் சென்றால், எதுவும் திரும்பி வர இயலாது” என்றும் உறுதிபடச் சொல்கிறார்கள்..... ஏற்போம்.

இவர்கள் கருந்துளை... கருந்துளை என்கிறார்களே, இந்தக் ‘கருந்துளை’க்குள் பிரமாண்டமான ‘துளை’[துவாரம்/Hole] இருக்கும்தானே? -இது அறிவியலின் அரிச்சுவடிகூட அறியாத என் நீண்ட நாள் கேள்வி.

சற்று முன்னரான இணையத் தேடலில் கிடைத்தது பதில். அது.....


கருந்துளை, வாயுக்கள் மற்றும் தூசுகளால் ஆன ஒரு சுழலும் வட்டு(Accretion Disk)தானே தவிர, கருந்துளைகளில் உண்மையில் "துளைகள்" இல்லை.


கருந்துளை(Black Hole) என்ற பெயர் 1960-களில் இயற்பியலாளர் ஜான் வீலரால் பிரபலப்படுத்தப்பட்டது. ஒளியைக்கூட வெளியேற விடாத, மிக அதிக ஈர்ப்பு விசை கொண்ட இருண்ட பகுதி என்பதாலும், விண்வெளியில் ஒரு 'கருமையான ஓட்டை'(Black Hole) போலத் தோன்றுவதாலும் இந்தப் பெயர் உருவானது[BBC +4]

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

இஸ்லாமியருக்கு இரக்கக் குணம் இல்லையா? ‘அல்லா’வின் மனம் கல்லா?!

[அறிவிப்பு: இது ‘பார்வை’ எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பதிவு அல்ல; உள்மனப் பரிதவிப்பின் வெளிப்பாடு] 

ற்று முன்னர், தற்செயலாக ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் புதிய ஆணை தொடர்பான ஒரு காணொலி தென்பட்டது{தலிபான்கள் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, தங்கள் நாட்டுப் பெண்களுக்கு[இஸ்லாம்] இழைக்கும் கொடுமைகள் குறித்தக் காணொலிகள் இணையத்தில் அணிவகுத்து நிற்பது பலரும் அறிந்ததே}.

ஒட்டுமொத்த மனித இனத்தையும் நடு நடுங்கச் செய்கிற, பெண்கள் மீதான தாக்குதல் நிகழ்வுகள் அதில் இடம்பெற்றுள்ளன.

பெண்டாட்டிகளை[+பெண் பிள்ளைகள்?] எலும்பு முறியாமல் தாக்கித் தண்டிக்க[எலும்புகள் முறியாமலே தாக்கிக் கொல்லலாம்], புதியதொரு சட்டத்தை இயற்றியிருக்கிறார்களாம் தலிபான்கள்[புதிய கட்டமைப்பின் கீழ், கணவர்கள் தங்கள் மனைவிகளுக்கு த'சீர் என்ற கருத்தின் கீழ் "விருப்பப்படி தண்டனை" வழங்க வெளிப்படையாக அனுமதிக்கப்படுகிறார்கள்].

அதன் விளைவு, அங்கே பெண்களை ஆண்கள் கொடூரமாகத் தண்டிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன{அவை காணொலிகளாகவும் வெளியிடப்படுகின்றன.

இஸ்லாமியரோ அல்லாதவரோ, அவற்றைக் காணுவோர்  மனம் பதறும்; கண்கள் கலங்கும் என்பது உறுதி.

தலிபான்கள் அல்லா மீது அதி தீவிரப் பற்றுள்ளவர்கள்.

கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் இரக்கக் குணம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. இந்தத் தலிபான்களோ அரக்கக் குணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

கல்வி கற்றல், வேலைக்குச் செல்லுதல் போன்ற பெண்களுக்கான அத்தனை உரிமைகளையும் பறித்ததோடு, வீட்டில் அடைத்துவைத்து அவர்களை அடிமைகளாக நடத்துகிறார்கள்.

உலகின் ஒட்டுமொத்த இஸ்லாமியரும் இதை வேடிக்கை பார்ப்பது உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது.

உலகின் பெரும்பான்மை இஸ்லாமியர்கள், இந்தச் சிறுபான்மைத் தலிபான்களைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் தயங்குவது புரியாத புதிராக உள்ளது. பிற நாடுகளிலுள்ள இஸ்லாம் பெண்களும் ஆப்கானிஸ்தான் பெண்களைப் போலவே, 100% அடிமைகளாக நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ!

உலக அளவிலான இஸ்லாமியருக்குத்தான் இரக்கக் குணம் இல்லையென்றால், அவர்களால் மனப்பூர்வமாக வழிபடப்படுகிற கடவுள் ‘அல்லா’வும் வன்முறைகளுக்கு உள்ளாகும் ஆப்கானிஸ்தான் பெண்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

வியாழன், 19 பிப்ரவரி, 2026

‘பாபா ராம்தேவ்’ என்னும் மத வெறியனின் திமிர்ப் பேச்சு!!!

//காவனில் உள்ள புகழ்பெற்ற ராமன்ரெட்டி ஆசிரமத்தில் 95ஆவது ஆண்டு கர்ஷ்ணி கோபால் ஜெயந்தி விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற துறவிகள் இந்த மத மஹாகும்பத்தில் பங்கேற்று, பக்தர்களைப் பக்தி & ஆன்மீகப் பாதையில்[அல்ல, போதையில்] வழிநடத்தினர்.


விழாவில் யோகா முகாமை நடத்தும்போது, ​‘​யோகா குரு’ என்று அழைக்கப்படும் பாபா ராம்தேவ் யோகா ஆசனங்களின் முக்கியத்துவத்தை விரிவாகக் கூறினார்.


சமகாலப் பிரச்சினைகள் குறித்துத் தனது கருத்துக்களை வெளிப்படுத்தும்போது அவர் தெளிவாகக் கூறினார்; "இந்தியா ராமர், கிருஷ்ணர், அனுமன் ஆகியோருக்கான நாடு; இது பாபரின் நாடு அல்ல. பாபரைப் பற்றிப் பேசுபவர்கள் அழிக்கப்படுவார்கள்.”// -ஊடகச் செய்தி


இந்த வெறியனால் எப்படி இபடிப் பேச முடிகிறது? இதற்கான தைரியத்தை இவன் பெற்றது எப்படி?


கற்பனையான புராணக் கதை நாயகர்களுக்கும் ஐந்தறிவுக் குரங்குக்கும்தான் இந்த இந்தியா சொந்தமா? மாற்று மதத்தவராக[வாழ்ந்து மறைந்து வரலாற்றில் மட்டுமே இடம்பெற்றவர்] இந்த நாட்டை ஆண்டவரைப் பற்றிப் பேசுவதுகூடக் குற்றமா? பேசுபவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று பேசும் இந்த அயோக்கியனும் அழிக்கப்படலாம்தானே?


இந்த நாட்டை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆள்கிறதா, வெற்று ஆன்மிகக் கதை பேசித் திரியும் இவனும்[பாபா ராம்தேவ்] இவனைப் போன்ற சல்லாபச் சாமியார்களா?


சாமியார்கள்தான். அரசாங்கம் என்றால், இந்த வெறிப் பேச்சுக்காக மட்டுமே இவனைச் சிறையில் அடைத்திருக்கும்.


தொடரட்டும் ராம்தேவன்களின் அடாவடித்தனங்கள்.


 https://www.msn.com/en-in/news/india/those-who-talk-about-babar-will-be-destroyed-baba-ramdev-at-ramanreti-ashram/ar-AA1WBkJv?ocid=msedgdhp&pc=NMTS&cvid=6996eab054e24a769c8e267aa4fe41ec&ei=63

புதன், 18 பிப்ரவரி, 2026

அக்கா அக்கா... தமிழிசை அக்கா! நீங்க மட்டுமே அக்கா![ஹி... ஹி... ஹி!!! பதிவு]

ஆமாங்க அக்கா. ஜெயலலிதாதான் எல்லாருக்கும் அம்மா அக்கா. நீங்க சொன்னது 100% உண்மைதானுங்க அக்கா. ரொம்ப நல்லா பேசுறீங்க அக்கா. நீங்க நல்லா இருப்பீங்க அக்கா. உங்களுக்கு ஆயுசு நூறு அக்கா.

அக்கா... அக்கா, நீங்க எனக்கு மட்டுமல்ல, என் அப்பாவுக்கு, என் அம்மாவுக்கு என் அக்காவுக்கு, என் தங்கச்சி தம்பிகளுக்கு, என் பெண்டாட்டிக்கு, என் பிள்ளைகளுக்குன்னு எல்லாருக்குமே ‘நீங்கதான் அக்கா’ அக்கா.

அக்கான்னா அது தமிழிசை அக்கா மட்டும்தான்! ஹி... ஹி... ஹி!!!

‘தமிழன்’ சீமானுக்குப் பாராட்டும் புத்திமதியும்!!!

சீமானைத் ‘தமிழன்’ என்றழைப்பதை அவரை வெறுப்பவர்கள் உட்பட, எதிர்ப்பவர் எவரும் இல்லை என்று உறுதிபடச் சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் அப்பழுக்கற்ற இனவுணர்வு கொண்டவர்.

தமிழினத்தின் மேம்பாட்டுக்கு என்றே ‘நாம் தமிழர்’ என்னும் பெயரில் கட்சி நடத்துகிறார், சிறிதும் தன்னலம் கருதாமல்.

தமிழ்நாட்டில் தேர்தல்[சட்டமன்றம்> 2026] நடக்கவுள்ள நிலையில், கட்சிகள் பலவும் ஏதாவது ஒரு கூட்டணியில் இடம்பிடித்து, பதவிக்காகவும் வருமானத்திற்காகவும் பேரம் பேசித் திரிந்துகொண்டிருக்க, ‘தமிழனைத் தமிழனே ஆள வேண்டும்’ என்னும் உன்னத லட்சியத்துடன் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள சீமானின் மனவுறுதியை நெஞ்சாரப் பாராட்டலாம்.

கடுமையாக உழைக்கிறார். இந்த உழைப்பு 2026இல் இல்லையென்றாலும், அடுத்துவரும் தேர்தலிலேனும் உரிய பலனை நல்கக்கூடும்.

ஆனால்.....

ஆழ்ந்து சிந்திக்காமல் அதிரடியாய் இவர் பேசும், தமிழர் அல்லாத பிற இனத்தவர் குறித்த பேச்சுகள் அதற்குத் தடைக்கற்களாக அமையும் என்று உறுதிபடச் சொல்லலாம்.

குறிப்பாகக் கன்னடர், தெலுங்கர் மீதான வெறுப்புரை.

தாம் நடத்திய ‘குடியரசு’ இதழின் முதல் பக்கதில்[தலைப்புப் பகுதி], ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்னும் வாசகத்தை, தமிழ்நாடு தமிழருக்கே’ என்று மாற்றியமைத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. 

பிறப்பால் கன்னடராயினும், மூடநம்பிக்கை ஒழிப்பிற்காகவும், தமிழரின் முன்னேற்றத்திற்காவும்[தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றது அதன் வளர்ச்சியின்மையைச் சுட்டிக்காட்டிச் ‘சொரணை’ ஊட்டுவதற்காகவே] அரும்பாடு பட்டவர். அவர் கட்சி நடத்தியது கன்னடர்களுக்காக அல்ல[எல்லாம் தெரிந்திருந்தும், தேர்தலில் பக்தர்களின் வாக்குகளை அள்ளுவதற்காகவே சீமான் பெரியாரைக் கடுமையாகச் சாடுகிறார்].

‘வைகோ’ பிறப்பால் தெலுங்கர் எனினும் தமிழினத்திற்கென்றே தன்னை அர்ப்பணித்தவர்.

விதிவிலக்காகச் சிலரோ[முன்னாள் காமாட்சி நாயுடு; இந்நாள் பாக்கியராஜ்> கம்மா பாக்கியராஜுலு> தெலுங்குப் பேச்சு; ராதா ரவி] கணிசமானோரோ இருப்பினும், மிகப் பெரும்பாலான தெலுங்கு மரபினர் இங்குத் தமிழராகவே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.

வீட்டிற்குள் தெலுங்கு[ஆந்திர மாநிலத் தெலுங்குக்கும் இவர்கள் பேசும் தெலுங்கிற்கு நிறைய வேற்பாடு உண்டு] பேசுவதைத் தவிர, வெளியிடங்களில் அவர்கள் தங்களுக்குள்ளேகூடத் தெலுங்கில் பேசுவதில்லை.

‘பிஎஸ்ஜி’[கோவை> தெலுங்கு நாயுடுகள் கல்லூரி] கலை அறிவியல் கல்லூரிதான், ‘கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுமொழி’ வகுப்புகளை முதலில் நடத்தியது என்பதெல்லாம் தமிழின் மீதான தெலுங்கரின் பற்றுதலை அடையாளப்படுத்துகிறது.

அறிவியல் அறிஞர் ஜி.டி.நாயுடு எப்போதுமே தன்னை ஒரு தெலுங்கராக அடையாளப்படுத்தியதில்லை.

ஆக, இங்குள்ள தெலுங்கர், கன்னடர் மீதான தேவையற்ற சீமானின் தொடர் தாக்குதல் பேச்சு, அவர்களைத் தங்களின் பாதுகாப்புக்காக, இன அமைப்புகளை வலுப்படுத்தி, தமிழருக்கு எதிராக இணைந்து செயல்படத் தூண்டும்.

எனவே, போகிறபோக்கில் வாரி இறைக்கிற இன வெறுப்பை வளர்க்கும் ஆவேசப் பேச்சை, இனியேனும் தவிர்ப்பது சீமானுக்கு மட்டுமல்ல, தமிழினத்திற்கும் நன்மை பயப்பதாக அமையும்.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

போலி உலக ஞானி ஜக்கியும் புரிந்துகொள்ள இயலாத அடிமை மோடியும்!!!

முகம் முழுக்க அடர் தாடி மீசையுடன், உயர்தர பக்திமான் வேடம் புனைந்து, புரியாமல்... ஆனால், வெகு கவர்ச்சிகரமாகக் கடவுள் தத்துவம் பேசிப் பேசி, தன்னைக் கடவுளின் அவதாரமாக[சத்குரு: சத்> பரம்பொருள்> கடவுள்> கடவுளின் குரு] மக்களை நம்பச் செய்து, கோடி கோடியாகப் பணம் சம்பாதித்துவிட்ட ஒரு குபேர மோசடிச் சாமியார் ஜக்கி வாசுதேவன்.

இந்த நபரின் 100% கற்பனையில் உருவாக்கப்பட்ட ‘ஆதியோகி’ சிலையை, ஒரு மதச் சார்பற்ற நாட்டின் பிரதமரான மோடி திறந்து வைத்து, ஓர் அடிமை போல் கைகட்டி உபதேசம் பெற்றுப்போனது கடந்த காலக் கசப்பான சம்பவம்[இருவருக்கும் இடையேயான மிக நெருக்கமான தொடர்பின் பின்னணியில் ஏதோ மர்மம் புதைந்திருக்கிறது].

மோடியின் ஆதரவில்தான், பல குற்ற வழக்குகளிலிருந்து தப்பி[மனைவியை மகா சமாதியாக்கியது, வெள்ளியங்கிரிக் காடுகளைத் தன்வசப்படுத்தியது, யோகா கற்பிப்பதாகச் சொல்லி, அனுமதி ஏதுமின்றி வயசுக் குமரிகளை ஆசிரமத்தில் இரவுபகலாய்த் தங்க வைப்பது, அவர்களில் சிலர் காணாமல்போனது என்றிப்படி], மனித இனத்தை உய்விக்க வந்த அவதாரி போல் உலகை வலம்வந்துகொண்டிருக்க இயலுகிறது இவனால்.

ஆண்டுதோறும் தான் நடத்தும் சிவராத்திரி விழாவில் பிரபலங்களை[படு கவர்ச்சி நடிகைகள் உட்பட]க் கலந்துகொள்ளச் செய்வதுபோல்[கடந்தமுறை குடியரசுத் தலைவர் முர்மு], நடந்து முடிந்த விழாவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் கலந்துகொண்டது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இதனினும் நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவது, சீருடையுடன் முப்படை அதிகாரிகள் கலந்துகொண்டதுதான்.

இந்த ஆசாமியால் விளைவது பெரும் தீங்குகளே தவிர, கடுகளவு நன்மைகூட இந்த நாட்டுக்கு விளைந்ததில்லை.

உண்மை இதுவாக இருக்க, தொடர்ந்து இந்த ஆளின் ‘உலக ஆன்மிகக் குரு’ என்னும் மாய பிம்பம் நிலை மாறாமலிருக்க, மோடி அயராது பாடுபடுவதன் உண்மை நோக்கம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது.

மட்டுமல்ல, ஒரு போலிச் சாமியாருக்கு மரியாதை செலுத்த முப்படை அதிகாரிகளை மோடி அனுப்பியது மன்னிக்கக் கூடாத குற்றம்.

இந்தக் குற்றத்தைச் செய்தது குறித்து மோடிக்கு எள்ளளவும் கவலையில்லை.

ஏனென்றால், இதுபோல எத்தனைக் குற்றங்கள் செய்தாலும் அவற்றைக் கண்டுகொள்ளாத மக்கள்தான் இங்கே அதிகம். அறியாமையிலிருந்து அவர்கள் மீண்டுவிடாதிருக்க பல போலிச் சாமியார்கள் மோடியின் ஆதரவுடன் பாடுபடுகிறார்கள். அவர்களில் முதல் இடம் பெறுகிற ஆள்தான் இந்த ஜக்கி. பிரதமர் மோடி இந்த நபரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் காரணம் இதுவாக[வும்] இருக்கக்கூடும்.

இதன் மூலம் மோடி பயன்பெறுவது தொடருமா தடைப்படுமா என்பது அனுமானிக்க முடியாதது என்றாலும், இந்த மோசடிச் சாமியாரால்[+பிற சாமியார்கள்] இந்த நாட்டிற்குப் பெரும் பெரும் கேடுகள் விளையும் என்பது உறுதி... உறுதி... உறுதி.

கில்லாடி ஜக்கியின் சிவராத்திரிக் கூத்தில், பாதுகாப்பு அமைச்சரும் முப்படை அதிகாரிகளும் கலந்துகொண்டது குறித்த மு.வீரபாண்டியன் அவர்களின் கண்டன அறிக்கை பின்வருமாறு:

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

//கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் மற்றும் பல்வேறு மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டது நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும். இந்நிலையில், இந்தியாவின் முப்படைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் சிவராத்திரி விழாவில் ராணுவ சீருடையுடன் கலந்து கொண்டுள்ளனர். ஒன்றிய பாஜ அரசின் அழுத்தத்தின் காரணமாக, முப்படை உயரதிகாரிகள் விழாவில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும், இந்தியாவின் ராணுவம் மதச்சார்பற்ற ராணுவமாகும். அவ்வாறு இருக்கின்றபோது முப்படை உயர் அதிகாரிகள் ஈஷா யோகா மையம் நடத்திய சிவராத்திரி விழாவில் சீருடையுடன் கலந்து கொண்டது கடும் கண்டனத்திற்குரியது//.

https://www.dinakaran.com/news/politics_news/coimbatore_ishacenter_shivaratrifestival_tri-servicesofficers_opposition_m-veerapandian_condemnation/

திங்கள், 16 பிப்ரவரி, 2026

நயினார் நாகேந்திரரே, திரிஷாவின் பாதம் தொட்டு மன்னிப்புக் கேளும்!

//நயினார் நாகேந்திரன், ‘விஜய்’யை “அரசியல் அனுபவமில்லாதவர்” என்று கூறி, “நீ முதலில் திரிஷா வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். குடும்பத்துடன் நல்லுறவு வைத்திருக்க வேண்டும்” என்று தனிப்பட்ட வாழ்க்கையை இழித்துப் பேசினார்//*


நடிகை திரிஷாவை மேற்கண்டவாறு கொச்சைப்படுத்திப் பேசியதற்காகக் கடும் கண்டனங்களுக்கு உள்ளான நயினார் நாகேந்திரன், அது குறித்துக் கீழ்க்காணும் வகையில் வருத்தம் தெரிவித்ததாக ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டுள்ளன.

“அன்றைக்கு அது தவறி வந்த ஒரு வார்த்தை. உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்படுவார்களேயானால், என்னுடைய வருத்தத்தை நான் மனப்பூர்மாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என நடிகை திரிஷா குறித்த பேச்சுக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மன்னிப்புக் கோரினார்[இது ‘இந்து தமிழ்’ச் செய்தி].

அதென்ன ‘யாரேனும்’? செய்யக்கூடாத மாபெரும் குற்றத்தைச் செய்துவிட்டு, ‘திரிஷா[+விஜய்]வின் பெயர் சொல்லி வருத்தம் தெரிவிக்காத அளவுக்கு அத்தனை மண்டைக் கொழுப்பா இந்தப் ‘பாஜக’காரனுக்கு?!


குடும்பப் பெண்ணோ, நடிகையோ, விலைமகளோ[அவளும் ஒரு குடும்பத்துப் பெண்தான்> வயிற்றுப்பாட்டுக்காக இந்தத் தொழிலில் தள்ளப்பட்டிருக்கலாம்] ஒரு பெண் எப்படிப்பட்டவளாக இருந்தாலும், அவளை இந்த அளவுக்கு இழிவுபடுத்தியிருப்பது, மன்னிக்கவே கூடாத இழி செயல் ஆகும்; கடும் தண்டனைக்குரியதும்கூட.


திரிஷா ஆக்ரோஷக் குணமுள்ள ஆடவர்களின் பாதுகாப்பில் இருந்திருந்தால், இந்த ஆளைத் துண்டு துண்டாக வெட்டிப் புதைத்திருப்பார்கள்.


மேலும், வெறுமனே வருத்தம் தெரிவித்து மறந்துவிடச் சொல்லுகிற குற்றம் அல்ல இது. திரிஷாவை, அவரின் அனுமதியுடன் நேரில் சந்தித்து, அவரின் பாதம் தொட்டு[அதற்கான தகுதிகூட இந்த நபருக்கு இல்லை] மன்னிப்புப் கேட்க வேண்டும்.


இந்த ஆள் அதைச் செய்யும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

                                             *   *   *   *   *

https://minnambalam.com/nainar-nagendran-clarifies-his-statement-on-vijay-trisha/[copy&paste]


https://www.hindutamil.in/news/tamilnadu/word-that-was-missed-nayinar-nagendran-regrets-his-speech-on-trisha

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

மரணம் கொடியது! அதனினும் கொடியவை அதன் அந்திமக்கால அறிகுறிகள்!!

றப்பு(Death) எல்லோருக்கும் பொதுவான நிகழ்வுதான். ஆனால், அது நிகழ்வதைப் பார்த்து[நினைத்தும்தான்] நாம் பெரிதும் அஞ்சுகிறோம். அதைப் பற்றிப் பேசுவதற்குகூடத் தயங்குகிறோம்.

வயதான நிலையில் இயற்கையான மரணம் நிகழும்போது, மரணிப்பவர்கள் அதிக அளவில் வலிகளை உணரமாட்டார்கள் என்று சொல்லப்பட்டாலும், அவர்களின் உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகள் நம்மை அச்சுறுத்துவனவாகவே உள்ளன.

அவற்றில் குறிப்பிடத்தக்கவை:

1.இறந்துகொண்டிருப்பவர்கள் மூச்சு இயல்பாக இருக்காது; பெரிதும் சிரமப்படுவார்கள்.

2.மிகவும் சோர்வாகக் காணப்படுவார்கள். அதிகமாகக் கொட்டாவி விடுவார்கள். 

3.அவர்கள் மூச்சு விடும்போது சத்தம் கேட்கும். அதை Rattling noise என்று சொல்வார்கள்.

4.இறக்கும் நிலையில் இருக்கக்கூடியவர்கள் அதிகம் தூங்குவார்கள். சில சமயம் பேசிக்கொண்டிருக்கும்போதே தூங்கிவிடுவார்கள்.  


5.செயல்பாட்டை இழக்கும் உறுப்புகளில் கடைசியில் இடம்பெறுவது செவிப்புலன் ஆகும். இறக்கப்போகிறவர்கள் கண்களை மூடிப் படுத்திருந்தாலும் அருகில் இருப்பவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.


6.மரணம் நிகழ்கையில் அவர்களால் சிறுநீர், மலம் போன்றவை வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயலாது. தசைகள் தளர்வடைவது அதற்கான முக்கியக் காரணம்.


7.பசி உணர்வு சிறிதுகூட இருக்காது. உணவை விழுங்குவதும் சாத்தியப்படாது.


8.சில நேரங்களில் அவர்களின் உடலில் இருந்து Nail polish removerஇன் வாசனை வெளிப்படும்[நெய்ல் பாலிஷ் ரிமூவர் கொண்டு நகத்தில் உரிந்த பாலிஷை அகற்றலாம்].


9.அவர்களின் கைகள், கால்கள், காதுகள் போன்றவற்றைத் தொடும்போது அவை ஜில்லென்று இருக்கும். சிலசமயம் கைகளில் வீக்கம் தென்படலாம். உடலில் ரத்த ஓட்டம் குறைவது இதற்கான காரணம்.


10.சிலருக்கு இறப்பதற்கு முன்பு மனக் குழப்பம் ஏற்படும். தாங்கள் யார் என்பதை மறந்துவிடுவார்கள். தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் நினைவுகூர்தல் இயலாது.


11.அவர்கள் எதிர்பாராத மன உறுதியுடன் எழுந்து உட்காருவார்கள். ஆனால் அது தற்காலிகமானதே. மறுபடியும் அவர்களின் நிலை மோசமாகி இறப்பு நிலைக்குச் செல்வார்கள்.


12.பொதுவாக இறப்பு வரும்போது தசைகள் தளர்வடைவதன் காரணமாக வாய் திறந்த மாதிரி இருக்கும்; கண்கள் விட்டத்தை[மேல்நோக்கி]ப் பார்ப்பதுபோல் தோன்றும். இறுதியில் மூச்சும், இதய துடிப்பும் நின்று இறப்பைத் தழுவுவார்கள் அவர்கள்.

====================


நன்றி:

https://kalkionline.com/wellness/12-mysterious-signs-of-approaching-deathwarning-body-changes


சனி, 14 பிப்ரவரி, 2026

இவர்கள் நீதியின் பதி[தலைவன்]களா அநீதியின் அதிபதிகளா!?!?!

//2016 முதல் 2025 வரையிலான கடந்த 10 ஆண்டுகளில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்திற்கு நீதிபதிகளுக்கு எதிராக ஊழல், பாலியல் அத்துமீறல்கள் அல்லது மற்ற கடுமையான ஒழுங்கீனங்கள் தொடர்பாக மொத்தம் 8,630 புகார்கள் வந்துள்ளன. அதிகபட்சமாக, 2024 ஆம் ஆண்டில் 1,170 புகார்கள் வந்துள்ளன எனவும், 2025 ஆம் ஆண்டில் 1,102 புகார்கள் வந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது// -இது அண்மைச் செய்தி[https://www.puthiyathalaimurai.com/india/over-8000-complaints-filed-against-sitting-judges-in-10-years].

கொஞ்சநஞ்சமல்ல, 8630 புகார்கள். பாதிக்கப்பட்டும் புகார் தராதவர்களின் எண்ணிக்கை இதைவிடவும் அதிகம் இருக்கலாம்.

லஞ்சம் வாங்குவது போன்ற ஊழல்களுக்கிடையே, பாலியல் குற்றங்களில்[+ஒழுங்கீனங்கள்] ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் இது.

அரசாங்கத்தின் ஏனையத் துறைகளில் போலவே, நீதித் துறையிலும் நச்சுக் கிருமிகள் ஊடுருவியிருப்பதை உறுதிப்படுத்துகிறது மேற்கண்ட தகவல்.

நேர்மையும் நல்லொழுக்கமும் உள்ள நீதிபதிகளுக்கிடையே கணிசமான அளவில் இவர்கள் இருப்பது ஆபத்தானது.

இவர்கள் மிகக் கடுமையான தண்டனைக்குரியவர்கள்.

இப்படிப்பட்டவர்களை விமர்சனம் செய்தால், செய்பவர்கள் மீது இவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கிறார்கள். அலையவிட்டு அவமானப்படுத்துகிறார்கள்; தண்டனை பெற்றுத்தரவும் தவறுவதில்லை.

எனவே,

இம்மாதிரி அவமதிப்பு வழக்குகளை[உண்மையில் அவமதித்திருந்தால்], ஒழுக்கங்கெட்ட நீதிபதிகள் விசாரிப்பதற்குத் தடை விதித்து, மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய நீதிபதிகளிடம் வழக்கை ஒப்படைத்தல் வரவேற்கத்தக்கதாகும்.

மேலும், நெற்றி நிறையப் பட்டை தீட்டுதல் போன்ற மதச் சின்னங்களுடன்[எந்தவொரு மதத்தவராயினும்> நீதி கேட்டு நிற்பவர்களுக்கு இவர்கள் மீது நம்பிக்கை பிறக்காது] நீதிமன்றத்திற்கு வருவது தடுக்கப்படுதல் வேண்டும்.

நீதிபதிகளும் மனிதர்கள்தான்; அவர்கள் அவதாரங்களோ அபூர்வப் பிறவிகளோ அல்ல என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

உச்ச நீதிமன்றமும் அரசு நிர்வாகமும் இணைந்து இதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புவோம்.

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

கல் கட்டடத்திற்குப் பெயர் சூட்டுவது ஒரு சாதனையா? அடக் கடவுளே!!

 

பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் பிப்ரவரி 13, 2026 அன்று புதிய பிரதமர் அலுவலக வளாகமான சேவா தீர்த்தத்தை(Seva Teerth) அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்[ஊடகச் செய்தி]. 

அதென்ன ‘சேவா தீர்த்தம்’?

கல்லால் ஆனதோ, மண்ணால் ஆனதோ, வெறும் அட்டை வேய்ந்ததோ கட்டடம் எதுவாயினும், அதில் தங்கியிருந்து சிறப்பாகப் பணியாற்றுவதுதான் முக்கியமே தவிர, அதற்குச் ‘சேவா தீர்த்தம்’ என்பது போல் பெயர் சூட்டுவதெல்லாம் தேவையற்ற செயல்.

சேவை என்றால் மக்களுக்குப் பிரதிப்பலன் கருதாமல் தொண்டாற்றுதல். 

தீர்த்தம்... புனித நீர்> புனித நீர் நிலை என்றும் பொருள் கொள்ளலாம்[மோடிக்காக].

அதாவது, தான் திறக்கவிருக்கும் கட்டடத்திற்கு[இவர் தங்கியிருந்து சேவை புரியும் இடம்]ப் ‘புனிதமான நிலையம்’ என்று பொருள்பட, ‘சேவா தீர்த்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார் புனிதர் மோடி.

அதை, ‘நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் மைல்கல்’ என்றும் தற்பெருமை பேசியிருக்கிறார்.

உல்க அளவில் பிரதமர்[நாட்டின் தலைவர்] எவரேனும், தான் வேலை பார்க்கும் கட்டடத்திற்கு இப்படியெல்லாம் பெயர் வைத்து, தன் நாட்டு மக்களையே முட்டாள்கள் ஆக்கியதாக வரலாறு இல்லை என்பது நம் நம்பிக்கை... அல்ல, வருத்தம்.

ந்த முட்டாளாக்கும் கில்லாடி வேலையைச் சில மாதங்களுக்கு முன்பே செய்திருக்கிறார் அவதாரியால் ஆசீர்வதிக்கப்பட்ட அமித்ஷா.

கீழ்க்காண்பது மோடிக்கு அவர் சூட்டிய புகழ்மாலை:

//கடந்த 11 ஆண்டுகளாக, மோடி அரசாங்கம் வெறும் அதிகாரத்தின் அடையாளமாக இல்லாமல், சேவையின் அடையாளமாகவே திகழ்கிறது. இதில், ஆட்சியின் உச்சியில் உள்ள பிரதமர் தன்னைப் 'பிரதம சேவகராக'க் கருதி, மக்களுக்காக வாரத்தில் ஏழு நாட்களும்[!!!!!], 24 மணி நேரமும்(!!!!!!!!!!)உழைக்கிறார் என்று மத்திய உள்துறை அமைசசர் திரு. அமித் ஷா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் பிரதமரின் அலுவலகத்திற்குச் 'சேவா தீர்த்தம்' என்று பெயரிட்டு, சேவைக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும், 'ராஜ் பவன்' மற்றும் 'ராஜ் நிவாஸ்' ஆகிய பெயர்கள் இப்போது 'மக்கள் பவன்' மற்றும் 'மக்கள் இல்லம்' என்று பெயர்மாற்றம் செய்யப்படுகின்றன.

சேவை மற்றும் நல்லாட்சியே முதன்மையானது என்ற கொள்கையின் அடிப்படையில், ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியடைந்த மற்றும் சிறப்பான இந்தியாவை உருவாக்கும் இந்தப் பொற்காலப் பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்//

வியாழன், 12 பிப்ரவரி, 2026

“ஜனகணமன...” -இது தேசத்தைப் போற்றும் கீதமா, தெய்வத்தைத் துதி பாடும் பாடலா?

//ரவீந்திரநாத் தாகூர் எழுதிய "ஜன கண மன... " இந்தியாவின் தேசியக் கீதமாகும். இது மக்களின் மனதில் ஆட்சி செய்பவரும், பாரதத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பவருமான இறைவனைப் போற்றுகிறது. 1950-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட இது, பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம், திராவிடம் (தென்னிந்தியா), ஒரிசா மற்றும் வங்காளம் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு, இந்தியாவின் பன்முகத்தன்மையை வலியுறுத்துகிறது// -விக்கிப்பீடியா.

//ஜன கண மன - தேசிய கீதத்தின் தமிழ் அர்த்தம் (பொருள்):

ஜன-கன-மன-அதிநாயக ஜய ஹே: இந்திய மக்களின் மனதை ஆட்சி செய்யும் தலைவா உனக்கு வெற்றி!

பாரத-பாக்ய-விதாதா: பாரதத்தின் (இந்தியாவின்) நல்விதியை நிர்ணயிப்பவனே!

பஞ்சாப-சிந்து-குஜராத-மராட்டா-திராவிட-உத்கல-வங்க: பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம், தென்னிந்தியப் பகுதிகள், ஒரிசா மற்றும் வங்காளம்[உன்னைப் போற்றுகின்றன]. 

விந்திய-ஹிமாசல-யமுனா-கங்கா: விந்திய மலைகள், இமயமலைகள், யமுனை & கங்கை நதிகள்(உன்னைப் போற்றுகின்றன).

உச்சல-ஜலதி-தரங்கா: அலைகளை எழுப்பும் இந்தியப் பெருங்கடல் (உன்னைப் போற்றுகிறது).

தவ சுப நாமே ஜாகே: உனது மங்களகரமான பெயரைக் கேட்டு, அனைவரும் விழித்தெழுகின்றனர்.

தவ சுப ஆசிஷ மாகே: உனது மங்களகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றனர்.

காஹே தவ ஜய காதா: உனது வெற்றியைப் பாடுகின்றனர்.

ஜன-கன-மங்கலதாயக ஜய ஹே: மக்களின் நல்வாழ்வை அருள்பவனே, உனக்கு வெற்றி!

பாரத-பாக்ய-விதாதா: பாரதத்தின் விதியை நிர்ணயிப்பவனே, உனக்கு வெற்றி!

ஜய ஹே, ஜய ஹே, ஜய ஹே: வெற்றி! வெற்றி! வெற்றி!
  • ஜய ஜய ஜய, ஜய ஹே: வெற்றி, வெற்றி, வெற்றி, உனக்கு வெற்றி!// -விக்கிப்பீடியா.
***சிவப்பு வண்ணத்தில் உள்ள அத்தனைச் சொற்களும் சொற்றொடர்களும் கடவுளைக் குறிக்கின்றன. இந்நிலையில், நம் தேசிக் கீதம் போற்றுவது நம் தேசத்தை அல்ல, அவரை[கடவுள்] மட்டுமே என்று சொல்லலாமா?என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

பதில்:
“மொழியாக்கம் செய்த கூகுளாருக்கு நன்றி!”[ஹி... ஹி... ஹி!!!]