நாடு முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற துறவிகள் இந்த மத மஹாகும்பத்தில் பங்கேற்று, பக்தர்களைப் பக்தி & ஆன்மீகப் பாதையில்[அல்ல, போதையில்] வழிநடத்தினர்.
விழாவில் யோகா முகாமை நடத்தும்போது, ‘யோகா குரு’ என்று அழைக்கப்படும் பாபா ராம்தேவ் யோகா ஆசனங்களின் முக்கியத்துவத்தை விரிவாகக் கூறினார்.
சமகாலப் பிரச்சினைகள் குறித்துத் தனது கருத்துக்களை வெளிப்படுத்தும்போது அவர் தெளிவாகக் கூறினார்; "இந்தியா ராமர், கிருஷ்ணர், அனுமன் ஆகியோருக்கான நாடு; இது பாபரின் நாடு அல்ல. பாபரைப் பற்றிப் பேசுபவர்கள் அழிக்கப்படுவார்கள்.”// -ஊடகச் செய்தி
இந்த வெறியனால் எப்படி இபடிப் பேச முடிகிறது? இதற்கான தைரியத்தை இவன் பெற்றது எப்படி?
கற்பனையான புராணக் கதை நாயகர்களுக்கும் ஐந்தறிவுக் குரங்குக்கும்தான் இந்த இந்தியா சொந்தமா? மாற்று மதத்தவராக[வாழ்ந்து மறைந்து வரலாற்றில் மட்டுமே இடம்பெற்றவர்] இந்த நாட்டை ஆண்டவரைப் பற்றிப் பேசுவதுகூடக் குற்றமா? பேசுபவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று பேசும் இந்த அயோக்கியனும் அழிக்கப்படலாம்தானே?
இந்த நாட்டை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆள்கிறதா, வெற்று ஆன்மிகக் கதை பேசித் திரியும் இவனும்[பாபா ராம்தேவ்] இவனைப் போன்ற சல்லாபச் சாமியார்களா?
சாமியார்கள்தான். அரசாங்கம் என்றால், இந்த வெறிப் பேச்சுக்காக மட்டுமே இவனைச் சிறையில் அடைத்திருக்கும்.
தொடரட்டும் ராம்தேவன்களின் அடாவடித்தனங்கள்.
