பக்கங்கள்

செவ்வாய், 28 நவம்பர், 2023

சிறுமியரை வன்புணர்தலும் தடுப்பதற்கான மிகக் கடும் தண்டனையும்!!![0% பொழுதுபோக்கு]

வடக்குக் கொலம்பியாவில், பள்ளிக்குச் சென்ற எம்பெரா பழங்குடியினத்தை சேர்ந்த 13 வயதுச் சிறுமி வீடு திரும்பவில்லை. 

அந்தக் குழந்தையை அவளின் பெற்றோரும், ஊர் மக்களும் தேடினார்கள். அவள் பள்ளியிலிருந்து வெளியேறவில்லை என்பதை அறிந்து அங்கே சென்றார்கள்.


அவளின் அந்தரங்க உறுப்பிலிருந்து ரத்தம் வெளியேறிக்கொண்டிருக்க, அவளிருந்த கோலம் அவர்களைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியது.


அவளை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்கள். மருத்துவச் சோதனையில் அவள் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.


விசாரணையில், கொரோனா தடுப்புப் பணிக்காக அங்கு அனுபப்பட்ட  7 ராணுவ வீரர்கள் இந்த அக்கிரமச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.  


அந்த நாட்டு[கொலம்பியா] வழக்கப்படி குற்றங்களுக்கான அதிகபட்சத் தண்டனை 30 ஆண்டுச் சிறைவாசம். 7 பேருக்குமே அந்தத் தண்டனை வழங்கப்படலாம் என்பது செய்தி. https://tamil.oneindia.com/news/international/13-year-old-girl-colombia-army-soldiers-gang-rape-public-protest-390006.html?story=2

* * * * *


டலும் மனமும் மிகப் பலவீனமான நிலையிலிருக்கும் இம்மாதிரிச் சிறுமிகளை மனசாட்சியே இல்லாமல் வன்புணர்வு செய்து சிதைப்பதைப் போன்ற கொடூரம்[உலக அளவில் இது தொடர் நிகழ்வாக உள்ளது] வேறு எதுவுமே இல்லை என்று சொல்லலாம்.


இதைச் செய்யும் கயவர்களைச் சிறையில் அடைப்பதெல்லாம் செய்த குற்றத்துக்கு ஏற்றத் தண்டனையே அல்ல.


இவர்களைப் பொதுமக்கள் மத்தியில் முழு நிர்வாணமாக நிறுத்தி, மில்லிமீட்டர் கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் ஆணுறுப்பை வெட்டி அகற்ற வேண்டும். இந்தச் சித்ரவதையை, ஆரஅமற, இடைவெளி கொடுத்து, நீண்ட நேரம் செய்த பிறகு இவர்களை வெட்டவெளியில் தூக்கில் தொங்கவிடுவதே ஏற்புடையத் தண்டனை ஆகும்.


இந்த நிகழ்வைக் காணொலியாக்கி, உலகெங்கிலும் உள்ள அனைத்துத் தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் உலகோர் காணும்படியாக முன்னறிவிவிப்புச் செய்து ஒளிபரப்புதல் மிக அவசியம்.


இதை வழக்கப்படுத்தினால் மட்டுமே கள்ளங்கபடமற்ற அப்பாவிச் சிறுமிகள் வன்புணர்வு செய்யப்படுவதைத் தடுத்திட இயலும்.


ஆனால், குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் தண்டனை பல நாடுகளில் வழக்கத்தில் இல்லை. கொடியக் குற்றச் செயல்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்காத அந்த நாடுகள், சிறுமிகளை வன்புணர்வு செய்யும் குற்றங்களுக்கு மட்டுமாவது அதை வழக்கப்படுத்துதல் வேண்டும்.


இந்தத் தூக்குத் தண்டனை நாம் மேலே குறிப்பிட்ட வகையில் அமைதல் வேண்டும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.