சூரியன் திடீரென அதன் ஒளிர்வை[வெப்பம்] இழந்தால், பூமியில் உள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுவதற்குக் கணிசமான நேரம் எடுக்கும்.
சூரியனிலிருந்து ஒளி பூமியை அடைய 8½ நிமிடங்கள் ஆகும் என்பதால், 8½ நிமிடங்கள்வரை அதன் விளைவுகள் நமக்குத் தெரியாது. அதே சமயம், நமது கிரகம் வெப்பத்தை நன்றாகத் தக்க வைத்துக்கொள்கிறது என்பதால் நாம் உடனடியாக உறைந்து இறந்துவிடமாட்டோம்.
முதல் ஒரு மணிநேரம்:
கணிசமான சேதம் எதுவும் இல்லை. கோளின் இருண்ட பக்கத்தில் சூரியனின் கதிர்களைப் பிரதிபலிக்கும் சந்திரனும் இருட்டாகிவிடும்.
முதல் 12 மணி நேரம்:
இந்தக் கோளில் வழக்கப்போல் உயிரினங்கள் இறந்துகொண்டிருக்கும். பெரிய அளவிலான மாற்றங்கள்[உயிரின இறப்பை] நிகழா.
முதல் வாரம்:
பெரும்பாலான சிறிய தாவரங்கள் இறந்துவிடும், முதல் வாரத்திற்குப் பிறகு பூமியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 32 டிகிரி பாரன்ஹீட்டாகக் குறைவதை நாம் அறியலாம்.
ஒரு சில மாதங்களுக்குப் பிறகு:
ஒளிச்சேர்க்கை நின்றுவிடும். என்னினும், மேலும் பல பெரிய மரங்கள் சூரிய ஒளி இல்லாவிட்டாலும் பல தசாப்தங்களாக உயிர்வாழ்கின்றன என்பது அறியற்பாலது. சில மாதங்களுக்குள், கடலின் மேற்பரப்பு உறைந்துவிடும். ஆனால், கடல்கள் திடமாக உறைவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். இருப்பினும், சில சிறிய கடல் உயிரினங்கள் புவிவெப்பத் துவாரங்களிலிருந்து வெளிப்படும் வெப்பத்தில் உயிர்வாழக்கூடும்.
சில பத்தாண்டுகளுக்குப் பிறகு:
பெரும்பாலான மனிதர்கள் அழிவார்கள். உயிர் பிழைத்த சிலர் பூமியின் மையத்திற்கு அருகில் இடம்பெயர்ந்து, செயற்கை நகரங்களில் புவிவெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி வாழ வேண்டியிருக்கும்.
சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு:
வெப்பநிலை -400 ‘ஃபாரன்ஹீட்’வரை குறையும். வளிமண்டலம் சரிந்து, கதிர்வீச்சு உள்ளே ஊடுருவி, பூமி வளம் குன்றி, தரிசு நிலமாக மாறும். மேலும், கடல்களுக்கு அடியில் உள்ள பாக்டீரியாக்கள் மட்டுமே வாழும் உயிரினங்களாக இருக்கும்.
இறுதியாக, பூமி இப்படித்தான் இருக்கும்.
நன்றி: அன்வேஷ் நாகா[அமெச்சூர் வானியல் பார்வையாளர் ]