பக்கங்கள்

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

‘ஆசைநாயகி’ ஆன அம்மாவும் ‘அனாதை’ ஆன சிறுமியும்!!!

 [கண்கலங்குகிறார்கள்! கலங்குகிறோம்!!]

ந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடைப்பள்ளியைச் சேர்ந்தவர் சுகாசினி. இவருக்குக் கீர்த்தனா, ஜெர்சி என இரண்டு மகள்கள். 

கணவன் இல்லை.

இவர் துரதிர்ஷ்டசாலிதான்.

பிள்ளைகள் பெரியவர்களாகி, திருமணம் ஆனவர்களாகவோ, சுயமாகச் சம்பாதிப்பவர்களாகவோ இருந்தால் எஞ்சிய ஆயுட்காலத்தை ஆண் துணை இல்லாமலே  கழித்துவிட முடியும்.

இவருடைய இரு மகள்களுமே சிறுமிகள்.

இந்த அம்மா பாலுறவு விசயத்தில் மிகவும் பலவீனமானவராக இருந்தால், நம்பகமான[இவர் விரும்பாதபோது தொடர்பைத் துண்டித்துக்கொண்டு, வேறு எந்தவொரு வகையிலும் தொல்லை தராதவன்] ஆணுடன், பிள்ளைகள் அறியாத வகையில் வாய்ப்புக் கிடைக்கும்போது உடலுறவு இச்சையைத் தணிக்கலாம்[இன்றையக் காலச் சூழலில் இது தவறில்லைதான்].

அப்படியொரு நபர் கிடைக்காதபோது, பெற்றெடுத்த வாரிசுகளுக்காக ‘அந்த’ ஆசையைத் துறந்து வாழ்வது இந்த அம்மாவுக்கான கடமை.

‘அவ்வாறு வாழ்வது கடினம்; வாழ்ந்தால் பைத்தியம் பிடிக்கவும்கூடும்’ என்று அஞ்சினால், பிள்ளைகளை அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு, “போதும்… போதும்” என்று பிதற்றும் வகையில் ‘புணர்ச்சி சுகம்’ வழங்கும் ஒரு போக்கிரியுடன் சேர்ந்து வாழலாம்; ‘தில்’ இருந்தால் திருமணமும் செய்துகொள்ளலாம்.

ஆனால், இந்தச் சுகாசினி என்னும் சுகபோகி இவற்றில் எதையும் செய்யாமல் வீட்டோடு ஒருவனைச் சேர்த்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறாள்.

இவளுடனான கள்ள உறவில் கசப்போ, சலிப்போ ஏற்பட்டிருந்தால், சொல்லாமல்கொள்ளாமல் அவன் ஓடியிருப்பான்.

அதைச் செய்யவில்லை அவன்.

காரணம், அவனின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடந்திருக்கலாம். இவளையும் பிள்ளைகளையும் ஏதோ காரணம் சொல்லி, காரில் வெளியே[ராஜ மகேந்திரவரம்] அழைத்துப்போனான்.

குறுக்கிட்ட, ‘கோதாவரி’ ஆற்றுப்பாலத்தில் காரை நிறுத்தி, செல்பி எடுப்பதாகச் சொல்லி, அம்மா, மகள்கள் என மூவரையும் பாலத்தின் விளிம்பில் நிற்கவைத்து ஆற்றில் தள்ளினான்.

சுகாசினியும், இளைய மகள் ஜெர்சியும் ஆற்றில் விழ, அது அவர்களை அடித்துச்சென்றது.

மூத்தவள் கீர்த்தனா, சுதாரித்துக்கொண்டு, பாலத்திலிருந்த பிளாஸ்டிக் குழாயை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு தொங்கினாள்.

ஒரு கையால் குழாயைப் பற்றிக்கொண்டு இன்னொரு கையால் தன்னிடமிருந்த அலைபேசியில், எண் 100ஐத் தொடர்புகொண்டு காவல்துறைக்குத் தகவல் அனுப்பினாள்.

அது அதிகாலை நேரம் ஆயினும்[03.30] கவல்துறையினர் விரைந்துவந்து கீர்த்தனாவை மீட்டார்கள்.

இது நேற்றைய[07.08.2023]ச் செய்தி[‘புதிய தலைமுறை’].

இனி வருவதுதான், நம் கண்களைக் குளமாக்கி, இதயத்தை நொறுங்கவைக்கும் உச்ச நிகழ்வு.

தன்னைக் காப்பாற்றிய காவல்துறையினரிடம்…..

“என் அம்மாவுடன் வசித்தவர்தான் எங்களைக் காரில் அழைத்துவந்து ஆற்றில் தள்ளினார்” என்றாள் கீர்த்தனா.

இங்கே நம் கவனத்தை ஈர்ப்பது…..

‘என் அம்மாவுடன் வசித்த…’ என்னும் சொற்றொடர்.

எங்களுடன் வசித்த…” என்று சொல்ல அந்தச் சிறுமிக்கு மனம் வரவில்லை.

அந்தரங்க ஆசையைக் கட்டுப்படுத்தாமல் ஒரு தறுதலைக்கு ஆசைநாயகி ஆன ஒருத்திக்குப் பிள்ளையாகப் பிறந்த இந்த அனாதையை அக்கம்பக்கத்தார் எவரும் ஆதரிக்கமாட்டார்கள்.

படைத்த கருணைக் கடவுளுக்கோ ஆற்ற வேண்டிய பிற கடமைகள் ஏராளம் இருக்கும்.

இவளைத் தத்தெடுத்துப் பாதுகாத்து வளர்த்து ஆளாக்குவது ஆந்திர மாநில அரசின் கடமையாகும்.

* * * * *