வெள்ளி, 19 ஏப்ரல், 2013

நிர்வாண ஓவியக் கண்காட்சி! [இது, ஓர் ‘உளவியல்’ கதை!!]

``உங்கள் நண்பரின் வீடு. அவர், அவசர வேலையாய் வெளியே போகிறார். ஒரு பெண் நிர்வாணமாக உங்கள் எதிரில் வருகிறாள். என்ன செய்வீர்கள்?”- இப்படியொரு கேள்வி, பல்லாண்டுகளுக்கு முன்பு, ‘I.A.S' வாய்மொழித் தேர்வில் கேட்கப்பட்டதாகச் சொல்வார்கள். இந்தக் கேள்விக்கும் இந்தக் கதைக்கும் நெருங்கிய தொடர்புண்டு!

கதையின் தலைப்பு:               பதிவின் தலைப்பே கதையின் தலைப்பு!

மாலினிக்கு ரொம்பவே ஏமாற்றம்; அழுகை அழுகையாய் வந்தது; கோபமாகவும் இருந்தது.

காரணம் வேறொன்றுமில்லை. அவள், தான் வரைந்த ஓவியங்களை வைத்து ஒரு கண்காட்சி நடத்தினாள். அன்று ஞாயிற்றுக் கிழமையாய் இருந்தும் எண்ணிப் பத்துபேர் மட்டுமே வந்தார்கள்.

“சே...ரசனை கெட்ட ஜென்மங்கள்...உணர்ச்சியில்லாத பிண்டங்கள்...” ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் மனிதராய்ப் பிறந்த அத்தனை பேரையும் திட்டிக்கொண்டிருந்தாள்.

“இதோ பார் மாலு, இந்த மாதிரி கண்காட்சிக்கெல்லாம் இவ்வளவுதான் கூட்டம் வரும். ஒரு நிர்வாணக் கண்காட்சி நடத்திப்பார். மக்கள் வெள்ளம் அலைமோதும். பத்திரிகை நிருபர்கள் பேட்டி காணப் போட்டி போடுவார்கள். டிக்கெட் போட்டால் ஆயிரக் கணக்கில் பணத்தை அள்ளிடலாம்” என்றாள் அவள் தோழி சிநேகா.

“நடத்திடறேன்” என்றாள் மாலினி, திடமான குரலில்.

“அடியே, நான் விளையாட்டுக்குச் சொன்னேன். அப்படிச் செய்துடாதே” என்று பதறினாள் சிநேகா..

“ரொம்பத் தேங்ஸ்டி” என்று மட்டும் சொன்னாள் மாலினி.

ன்று, நிர்வாண ஓவியக் கண்காட்சியின் தொடக்க நாள்.

பத்து மணிக்குக் கண்காட்சி தொடக்கம். எட்டு மணியிலிருந்தே கூட்டம் அலைமோதத் தொடங்கியது.

’இது, நிர்வாண ஓவியக் கண்காட்சி. ஓவியங்களுக்கு அருகிலேயே மாடல்களும் நிற்பார்கள்’ என்று விளம்பரப்படுத்தியிருந்தாள் மாலினி.

அலை மோதிய ஜனத்திரளைப் போலீஸ் வந்து ஒழுங்குபடுத்தி, கியூவில் நிற்க வைத்தது.

தோள்களில் கேமராக்களுடன் ஏகப்பட்ட பத்திரிகை நிருபர்கள்.

மணி பத்தாயிற்று.

ஓவியக்கூடம் திறக்கப்பட்டது.

’நான் முந்தி, நீ முந்தி’ என்று காத்திருந்தவர்கள் உள்ளே பாய்ந்தார்கள்.

அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமே காத்திருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அசடு வழிந்தார்கள். அவர்களின் முகங்களில் கோபமும் வெறுப்பும் தாண்டவமாடின.

காரணம்..........

நிர்வாண ஓவியங்களுக்கு ‘போஸ்’ கொடுத்தவர்கள்...........

சுமதி, பத்மா, மது ஆகியோர். எல்லோருமே மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்! மில்க் சாக்லேட் சுவைத்தவாறு நின்றுகொண்டிருந்தார்கள்!

அன்று, தான் அடைந்த ஏமாற்றத்தின் பிரதிபலிப்பை, இன்று, அந்த ரசிகர்கள் முகத்தில் கண்டு ரசித்து மகிழ்ந்துகொண்டிருந்தாள் மாலினி.

***********************************************************************************************************************************

'I.A.S' கேள்விக்கான விடைகளில் ஒன்று.....

“நிர்வாணமாக வரும் பெண்ணைக் கட்டியணைத்து முத்தமிடுவேன்”

“இது உங்கள் நண்பருக்குச் செய்யும் துரோகம் ஆகாதா?”- கேள்வி.

“ஆகாது. நிர்வாணமாக வருபவள் சிறுமியாகத்தான் இருக்க முடியும். இங்கே ‘பெண்’ [female]என்பது பெண் இனத்தைக் குறிக்கும் பொதுச்சொல்.”
[சில நுணுக்கமான கேள்விகளை, ‘விகடன்’ தமிழாக்கம் செய்து வெளியிட்டிருந்தது]

**********************************************************************************************************************************

கதையின் முடிவு உங்களை ஏமாற்றிவிட்டதா?

என்னைத் திட்டாதீர்கள். இதை எழுதியவர்.....

‘ஜெயரூபன்’

கதை வெளியான தேதி:                  14.02.1985.

வெளியிட்ட வார இதழ்:                    குமுதம் [14.02.1985, பக்கம்-79.]

***********************************************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக