அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 23 நவம்பர், 2020

பழங்காலக் கருத்தடையும் பருவப் பெண்கள் பட்டபாடும்!!!

* "போடு தோப்புக்கரணம்":

பாலுறவு முடிந்தவுடன், தோப்புக்கரணம் போடுவது போல நேராக உட்கார்ந்து எழுவது மற்றும் குதிப்பதன் மூலம், கருப்பையில் விந்தணு நுழைவது தடுக்கப்படும். அத்துடன் கொஞ்சம் தும்மினால் பலன் உறுதி செய்யப்படும். குழந்தை உருவாகாமலிருக்க, பழங்காலக் கிரேக்கர்கள் கையாண்ட முறை இது[ஆண்களுக்கு உடலுறவு இன்பம் வழங்கும் பெண்களுக்கு இப்படியொரு தண்டனையா?! அடப்பாவிகளா!]]

* கசடு நீர்க்கலவை:

கொல்லர்கள் பயன்படுத்திய நீரின் கசடுகளைக் குடித்தால் கரு உண்டாகாது என்று நம்பப்பட்டது. கொல்லர்கள் தங்களுடைய உபகரணங்களைக் குளிர்விப்பதற்காக இந்த நீரைப் பயன்படுத்தினர்.

ஒரு வகையில் இது பலன் அளித்தது என்றே சொல்லலாம். ஏனெனில் அந்த நீரில் கந்தகம் மிகுந்திருக்கும். இந்த முறை கரு உண்டாவதைத் தடுக்கும் என்றாலும் குமட்டல், சிறுநீரகச் செயலிழப்பு, மரத்துப் போதல், கோமா மற்றும் மரணம் போன்ற பக்கவிளைவுகள் இதில் உள்ளன.

இந்த நுட்பம், முதலாவது உலகப் போர் நடந்த காலம் வரைகூடப் பயன்படுத்தப்பட்டது. தங்களுக்குக் குழந்தை பிறக்காத நிலையை உருவாக்கும் என்பதால் கந்தகம் சார்ந்த தொழிற்சாலைகளில் வேலைபார்க்கப் பெண்கள் தாங்களாக முன்வந்தார்களாம்.

* முதலைச் சாணம்:

தேன் மற்றும் முதலையின் சாணத்தைக் கலந்து பிறப்புறுப்பில் பூசித் தடையை உண்டாக்கினால் கரு உண்டாகாது என்பது  எகிப்தியரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது[மனுசச் சாணம் தவிர, மாட்டுச் சாணம், கழுதைச் சாணம், குதிரைச் சாணம் எல்லாம் பயன்படுத்தியிருந்தாலும் தப்பில்லை.

* விதைப்பை வைத்தியம்:  

"பீவர்" எனும் சிறு உயிரினம் ஒன்றின் விதைப் பைகளைக் கால்களுக்கிடையே கட்டிக்கொள்வது, அல்லது, அந்த விதைகளை நன்றாக அரைத்து, பழங்கால மதுவில் கலந்து குடிப்பது கருத்தரிப்பைத் தடுக்கும் என்று கனெடியர்கள் நம்பினார்கள்[மனுசனுங்க விதைகளையே அறுத்து எடுத்திருந்தா கருத்தடைப் பிரச்சினையே இருந்திருக்காதே].

* அந்தக்கால ஆணுறை:

இந்த ஆணுறை  பன்றியின் குடலில் இருந்து தயாரிக்கப்பட்டது என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என வழிகாட்டும் பயனாளர் கையேடும் அதனுடன் தரப்பட்டுமாம்.

இந்த ஆணுறையைப் பயன்படுத்துவதற்கு முன்பு மிதமான வெப்பம் உடைய பாலில் இதை நனைத்துவிட்டுப் பயன்படுத்த வேண்டுமாம். இதைப் பயன்படுத்திய அதி புத்திசாலி ஆண்கள் எந்த நாட்டவர் என்பது தெரியவில்லை.

* எலுமிச்சைச் சாறு:

விந்தணுவைக் கொல்லும் குணம் எலுமிச்சைக்கு இருப்பதால், அதன் ஒரு துண்டை 'உள்ளே ' வைத்துவிடுவது[பாவி ஆண்கள் பொண்ணுகளை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்!]

*தலைப்பிரட்டை மருத்துவம்:

இது, கி.மு. 900ஆம் ஆண்டுப் பழக்கம். உடலுறவு முடிந்தவுடன் பெண்கள், பாதரசத்தில் வறுத்த 16 தலைப் பிரட்டைகளை(தவளைக் குஞ்சு)ச் சாப்பிட வேண்டும் என்று சீன நாட்டுப் பிறப்புக் கட்டுப்பாட்டு நிபுணர்கள் கூறி வந்துள்ளனர். கொல்லர்களின் தண்ணீரைப் போல, இதுவும் தவறான வழிகாட்டுதலாக இருந்துள்ளது. இதுவே விஷமாகும் ஆபத்து உள்ளது.

இதைச் சாப்பிட்டு நிரந்தரமாகவே கருத்தரிக்கும் தன்மையைப் பெண்கள் இழந்தனர். கல்லீரல், சிறுநீரகங்களில் கோளாறு மற்றும் பிற முக்கிய உறுப்புகளில் கோளாறு ஏற்படும் பக்க விளைவுகள் இதில் உள்ளன. நிலைமை மிக மோசமாகிப் போனால் மரணமும் ஏற்படும்.

* அபின் பூ:

இருபுறம் வெடித்துள்ள 'அபின் பூவை' உடலுறவின்போது ஒரு மெல்லிய திரையைப் போல பயன்படுத்துவார்கள் அல்லது அதற்கு மாற்றாக, பெண் உறுப்புக்குள் இந்தப் பூக்களை நுழைத்துக்கொள்வார்கள். புகைபிடித்தல் போன்ற தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்று நம்பினார்கள் சில நாட்டவர்கள்.

* கோக--கோலா:

உடலுறவு முடிந்ததும் பெண்கள் கோக-கோலாவை உறுப்பில் ஊற்றிக் கொள்வார்கள். அதில் உள்ள சர்க்கரை, விந்தணுக்களைச் செயல் இழக்கச் செய்யுமாம். 1950களில் இந்தப் பழக்கம் மக்களிடையே இருந்திருக்கிறது.

===============================================================

நன்றி: https://www.bbc.com/tamil/global-54314302