எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

கூட்டுத் தற்கொலையும் அணு ஆயுதக் கையிருப்பும்!!!

 

புதிது புதிதாய் உருவாகிப் பரவும் 

அரிய வகை நோய்கள்!

போக்குக்காட்டி மறைந்திருந்து புதிய அவதாரம்

தரித்துவரும் பழைய நோய்கள்! 

இவற்றின்  அதிரடித் தாக்குதலால் மரிக்கும் 

மனித உயிர்களின் எண்ணிக்கை

பல்லாயிரம் பல லட்சம் என

நாளும் அதிகரித்துக்கொண்டே போகிறது!

என்றோ தொடங்கிய

கில்லாடி நோய்க் கிருமிகளுக்கும் வல்லாண்மை

மனித அறிவுக்குமான 

போர் இன்றளவும் தொடர்கிறது.

போர் முற்றுப்பெறுவது சாத்தியமா?

எப்போது?

வென்றிடும்  வாய்ப்பு மனிதருக்கா 

கிருமிகளுக்கா?

விடை கண்டறிவது அத்தனை எளிதல்ல.

ஒருவேளை,

மனிதர்கள் தோற்றால்.....

ஒட்டுமொத்த மனித இனமும்

கூட்டுத் தற்கொலை புரியும் மனநிலைக்குத்

தள்ளப்படும்.

அப்போது உதவுவது

அணு ஆயுதங்கள் மட்டுமே!

======================================================================

படைப்பு:

கவிஞானி ‘பசி’ பரமசிவம்[ஹி...ஹி... ஹி!!!]