வெள்ளி, 26 ஜூன், 2026

பேருந்துத் தொடக்க விழாவும் மக்களைப் பெருந்துயரில் ஆழ்த்திய முதல்வர் ஜோசப்பும்!

சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்காகப் புதிதாக வாங்கப்பட்ட 300 டீசல் & சிஎன்ஜி (CNG) பேருந்துகளைத் தமிழக முதல்வர் சி. விஜய் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

இது மாநிலத்தின் பொதுப் போக்குவரத்து வாகனத் தொகுப்பில் ஒரு முக்கியச் சேர்க்கையாகும்.

இந்தத் தொடக்க நிகழ்வின் தொடர்ச்சியாக, முதல்வர் விஜய் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பேருந்தில் பயணம் செய்தார். அப்போது அவர் பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்தவாறு காணொளி ஒன்றையும் பதிவு செய்தார். [https://www.msn.com/en-in/news/india/watch-superstar-cm-vijay-takes-bus-ride-after-launching-300-new-tnstc-buses-in-chennai/ar-AA26v0fl?ocid=msedgdhp&pc=NMTS&cvid=6a3dd11b62954956baa2865e10d18ebd&ei=14]

பேருந்தை அவரே[ஜோசப்] இயக்கி[வழக்கம்போல்] நம் மக்களைப் பேரானந்தப் பேராழி[கடல்]யில் குளித்துப் பெரும்பேரின்பத்தில் திளைக்கச் செய்வார் என்று எதிர்பார்த்தோம்.

ஏமாற்றமே மிஞ்சியது.

வருந்துகிறோம் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் ஜோசப் அவர்களே!