வெள்ளி, 26 ஜூன், 2026

முழுமுதல் கடவுள் ஆனார் முதல்வர் ஜோசப்!!!

[குறிப்பிட்ட ஒரு நபர் குறித்து அடுத்தடுத்துப் பதிவுகள் எழுத நேர்ந்தமைக்கு மிகவும் வருந்துகிறேன்]
டவுள் என்று ஒருவர் இருப்பதை ஐம்புலன்களாலும் ஆறாவது அறிவாலும் எவரும் உணர்ந்ததில்லை; உணர்த்தியதும் இல்லை.

ஆனாலும் ‘அவரொருவர் இருப்பதாக மக்கள் அன்று நம்பினார்கள்; இன்றும் நம்புகிறார்கள். 

அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், ஜோசப் விஜய்தான் அந்தக் கடவுள்[மாரியம்மன் சிலையைத் தூக்கிக் கடாசியிருக்கலாம்] என்பதை, ஒட்டுமொத்த உலகமும் அறிந்து உணரச் செய்த, நாமக்கல் ‘த,வெ.க.’வினருக்கு நம் கோடானுகோடி நன்றிகள்.

ஊர் தவறாமல் பெரிய பெரிய கோயில்கள் எழுப்பி, ஜோசப் கடவுளை அங்கெல்லாம் குடியேற்றி, கும்பாபிஷேகம், பாலாபிஷேகம், பழ அபிஷேகம், சந்தன அபிஷேகம், குங்கும அபிஷேகம் எல்லாம் நடத்தி, அந்த ஜோசப் கடவுளின் புகழ் பரப்புமாறு, அவரின் பின்னோடிகள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தப் பக்தக்கோடிகளிடமும் வேண்டுகோள் வைக்கிறோம்.

ஜோசப் போற்றி! அவரின் திருவடிகள் போற்றி!! போற்றி!!!