எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 8 நவம்பர், 2025

அழியும் மனித அறிவும் அழியாத கடவுளும்!

‘மாறாதது எதுவும் இல்லை; மாற்றம் மட்டுமே நிரந்தரம்’["Nothing is permanent; change is the only constant"]  என்றார்கள்.

‘அழியாமல் இருப்பது எதுவும் இல்லை; அழிவே நிரந்தரம்’["Nothing is immortal, death is eternal"  என்றும் சொல்லலாம்.

கோள்கள், நட்சத்திரங்கள், பஞ்ச பூதங்கள்[மூலங்கள்], உயிர்கள் என்று மாற்றங்களுக்கு உள்ளாகும் அனைத்துமே அழிவுகளுக்கும் உள்ளாகின்றன.

எத்தனைதான் சிந்தித்தாலும், மாற்றங்களும் அழிவுகளும் நிகழ்வது ஏன் என்பது புரியாத புதிர்.

எதுவும் புரியாத நிலையில், மாற்றமும் அழிவும் இல்லாதவரான கடவுள்தான் மாற்றங்களையும் அழிவுகளையும் நிகழ்த்துகிறார் என்று சொன்னவர்கள் யார்?

மாற்றங்களுக்கு உள்ளாகி அழிந்துபோனவர்கள் சொன்னார்கள்.

மாற்றங்களுக்கு உள்ளானாலும், இன்னும் அழியாமல் இருக்கும் ஆறறிவுள்ள மனிதர்கள் இதை எப்படி நம்புகிறார்கள்?

“ஒன்னுமே புரியல இந்த உலகத்திலே!”