எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 10 அக்டோபர், 2024

‘ரத்தன் டாட்டா’வின் ஆவிக்குப் ‘பாரத ரத்னா’ விருது!!!

/இந்தியாவின் அடையாளமாகவும் டாடா சாம்ராஜ்ஜியத்தின் தலைவராகவும் திகழ்ந்துவந்த ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாகக் காலமானார். அவருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்டிரா அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது/ -ஊடகச் செய்தி.

ரத்தன் டாட்டா உயிரோடு இருந்தபோதே விருது பெறுவதற்கான தகுதியைப் பெற்றிருந்தார் என்பது விருதுக்குப் பரிந்துரை செய்யும் அமைச்சரவையினருக்குத் தெரியாதா?

உயிரிழந்த பிறகு விருது எதற்கு?

அவரின் ஆவி அல்லது ஆன்மா அந்த விருதைப் பார்த்துப் பார்த்து பார்த்துப் பரவசப்படும் என்று நம்புகிறார்களா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அதி புத்திசாலிகள்?

எது எதற்கெல்லாமோ கடும் பஞ்சம் நிலவுகிற இந்த நாட்டில் இவர்களைப் போன்ற அதி மேதாவிகளுக்கு மட்டும் பஞ்சம் என்பதே இல்லை!

* * * * *

https://tamil.goodreturns.in/news/maharashtra-cabinet-passes-resolution-asking-the-centre-to-confer-bharat-ratna-to-ratan-tata-052447.html