வெள்ளி, 3 மார்ச், 2017

உலக மகாகாகாகாகாகாகாகா நம்பர் 1 நகைச்சுவைக் கதை!!!!!!!!!!

குமுதம் வார இதழ்,  தன் இணைப்பில்[‘லைஃப்’] இம்மாதிரியான அதியற்புதச் சிரிப்புக் கதைகளைத் ['கடவுளின் குரல்’ என்னும் தலைப்பில்] தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. மனுஷாள் யாவரும் படித்து இன்புறலாம்; ஆயுஷு பரியந்தம் இன்ப லோகத்தில் சஞ்சரிக்கலாம்!
ழக்கப்படியான சந்திரமௌளீஸ்வர ஆராதனைக்கு அப்புறம், சின்னதா ஒரு காமாட்சி விக்ரகத்தை வைச்சு ஆராதிச்சுண்டு இருந்தார் ஆச்சார்யா.

அப்போ  எங்கிருந்தோ ஒரு பொம்பளை வேகவேகமா அங்கே வந்தா; “எனக்கு உடனடியா ஒரு புடவை குடு!...” அப்படின்னு ஆச்சார்யாளைப் பார்த்துச் சத்தம் போட்டுக் கேட்க ஆரம்பிச்சா.

மகா பெரியவா பூஜை பண்றச்சே குறுக்கிட்டுப் பேசறதே தப்பு. எல்லாத்தையும்விட, அவரைப் பார்த்து, ‘குடு’ன்னு கேட்டது மகாமகா தப்பு. ஆச்சார்யா என்ன பண்ணப் போறாரோன்னு எல்லாரும் பதட்டமா பார்த்தா.

பூஜை பண்ணிண்டு இருந்த ஆச்சார்யா, அவளைத் திரும்பிப் பார்த்தார். 

“என்ன பார்க்கிறே...முதல்ல எனக்குப் புடவை குடு!” அப்படின்னவ, தான் கட்டிண்டிருந்த பழைய புடவை இடது முழங்காலுக்கு மேலே கொஞ்சம் பெரிசா கிழிஞ்சிருக்கிறதைக் காட்டி, “இதோ பார் எப்படிக் கிழிஞ்சிருக்கு!” அப்படின்னு ரகளை பண்ண ஆரம்பிச்சுட்டா.

‘பரமாச்சார்யா பரம பவித்ரமா பூஜை பண்ற நேரத்துல இப்படி ஒரு தொல்லையா?’ன்னு மடத்துச் சிப்பந்திகள் சிலர் அந்தப் பொம்பளையை அங்கேர்ந்து வெளியில போகச் சொல்லி விரட்ட ஆரம்பிச்சா.

சட்டுன்னு கையை அசைச்சு, அவாளைத் தடுத்த பெரியவா, பக்கத்துல பழங்கள் வைச்சிருந்த தட்டைக் கீழே இழுத்துண்டு, ஒரு புடவையை எடுத்துண்டு வரச்சொல்லி ஜாடை பண்ணினார். சீடர்கள் கொண்டுவந்து குடுத்த புடவையை அந்தத் தட்டுல வைச்சு வந்தவகிட்டே குடுத்தார். புடவையை மட்டும் எடுத்துண்ட அவ, அதுக்காகவே வந்த மாதிரி, சட்டுனு அங்கேர்ந்து புறப்பட்டுட்டா.

ஆச்சார்யா தன்னோட பூஜையைத் தொடர்ந்தார். எல்லாரும் பார்த்துண்டு இருந்தா. அவ்வளவு பெரிய கூட்டத்துல அந்தச் சமயத்துல ஒரே ஒருத்தருக்கு மட்டும் ஒரு சந்தேகம் வந்துது.

கொஞ்ச நாள் முன்னாலதான் இந்த மாதிரி மனநிலை சரியில்லாத ஒருத்தி மடத்துக்கு வந்தா. அபிராமி அந்தாதி சொல்லிட்டுக் குணமாகிப் போனா. இப்போ வந்தவளும் அந்த மாதிரி சித்தபிரமை புடிச்சவளா இருப்பாளோ...வாங்கிண்டு போன புடவையை அவ என்ன செய்வா? இந்தச் சந்தேகம் வந்ததும் அந்தச் சீடர் அந்தப் பொம்பளை பின்னாலேயே வேகமாகப் போனார்.

கொஞ்ச தூரம் போனவர் அப்படியே திடுக்குன்னு நின்னார். காரணம், யாரோ பளார்னு தன்னைக் கன்னத்தில் அறைஞ்சது மாதிரி இருந்திருக்கு. கன்னம் சிவக்கத் தன்னை அடிச்சது யாருன்னு தெரியாம திகைச்சி மயங்கி விழுந்தவர், கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் ஒரு வழியா எப்படியோ எழுந்து மடத்துக்குத் திரும்பினார். 

அப்போதான் பூஜையை முடிச்சுண்டு எழுந்த மகா பெரியவா, முதல் பார்வையா அந்தச் சீடனைப் பார்த்தார். “என்ன, புடவையை வாங்கிண்டு போனவ என்ன செய்யறான்னு பார்க்கப் போனியா? அவ சித்த பிரமை பிடிச்சவன்னு நினைச்சியாக்கும். அவ யார் தெரியுமா? அம்பாள்டா! அந்த மட்டும் ஒரே அறையோட நிறுத்தினாளேன்னு சந்தோஷப்பட்டுக்கோ” என்று சொன்னவர், அங்கே இருந்த காமாட்சி விக்கிரகத்தைச் சுட்டிக்காட்டினார்.

வந்தவ[ள்] கட்டிட்டிருந்த புடவையில் முழங்காலுக்கு மேல கிழிஞ்சிருந்த மாதிரியே அம்பாள் விக்கிரகத்துக்குச் சாத்தியிருந்த புடவை கிழிஞ்சிருந்துது!

அம்பாளே ஆச்சார்யாளைத் தேடிவந்து தனக்கு என்ன வேணும்னு கேட்டு வாங்கிண்டு போறான்னா, மகா பெரியவா எப்பேர்ப்பட்ட மகான்! அவரைத் தரிசனம் பண்ண நமக்குக் கிடைச்சிருக்கிற பாக்யமெல்லாம் எப்பவோ பூர்வ ஜன்மாவுல பண்ணின புண்ணியம்னு நினைச்சு சிலிர்த்துப்போனா அங்கே இருந்தவா எல்லாரும்!
===============================================================================

பல சந்திப் பிழைகளை மட்டும் திருத்தி, கட்டுரையை[கதை!!!] அச்சு அசலாகப் பதிவு செய்திருக்கிறேன்.


4 கருத்துகள்: