எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

குரங்கு கையில் பூமாலை! சங்கிகளின் பிடியில்.....


கிறிஸ்தவார்களோ, இஸ்லாமியர்களோ அவர்கள் வழிபடும் கடவுள்களை அளப்பரிய சக்தி படைத்தனவாகவும், மிக மேலான அறிவு[மனித அறிவைவிடவும்] உள்ளனவாகவும், கருணை புரிவனவாகவும் கற்பனை செய்து[கற்பனைதான்] வழிபடுகிறார்கள்.

சங்கிகளைப் போல ஐந்தறிவு உயிரினமான குரங்கை[+பாம்பு, பன்றி, பெருச்சாளி, கழுகு, நாய், பேய் போன்றவை]க் கடவுளாக்கி அவர்கள் துதி பாடவில்லை.

இந்தியாவில் அங்கிங்கெனாதபடி இந்தக் குரங்குக்குச் சிலை வைத்துக்கொண்டிருந்த சங்கிக் கூட்டம், அமெரிக்காவிலும் இதற்குச் சிலை வைக்க, அதை அவன் நையாண்டி செய்ய உலகமே நம்மைப் பார்த்துக் கைகொட்டி நகைக்கிறது.

‘குரங்கு கையில் சிக்கிய பூமாலை’ போல சங்கித் தலைவர்களின் பிடியில் இந்த நாடு சிக்கியதன் விளைவு இது!