எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 24 அக்டோபர், 2025

செ.நு.அறிவை[AI]ப் பயன்படுத்திப் பகுத்தறிவைச் சிதைக்கும் சங்கிப் பதர்கள்!!!

கிருஷ்ணனைக் கற்பனைக் கதைகள் மூலம் கதாநாயகன் ஆக்கியவை புராணங்கள். அந்தக் கதாநாயகனைப் பிரபலக் கடவுளாக ஆக்கியவர்கள் சங்கிப் புளுகர்கள்.

புராணக் கதைகளைப் பரப்புரை செய்து மக்களின் சிந்திக்கும் அறிவை முடமாக்கிப் பிழைப்பு நடத்துபவர்கள் இவர்கள்.

இவர்கள் அறிவியலின் நிரந்தர எதிரிகளும்கூட.

இதன் வளர்ச்சியைத் தடுப்பதற்கு இடையறாது ஒருங்கிணைந்து பாடுபவர்கள் இந்தப் பாதகர்கள்.

செயற்கை நுண்ணறிவு[Artificial intelligence> AI] இவர்களின் மூடநம்பிக்கை வளர்ப்பிற்கு வலுவான தடையாக அமையுமோ என்று அஞ்சியதன் விளைவு, பொய்த் தகவல்களைப் பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள் இவர்கள்.

இவர்களில் ஒருவன் ராஜஸ்தான்காரனான 25 வயதான ‘விஜய் மீல்’ என்னும் களிமண் மண்டையன். 

'கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே' என்பது போன்ற[எ-டு: மனித அனுபவத்தின் ஒவ்வொரு பகுதியையும் செயற்கை நுண்ணறிவு(AI) தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இந்த இயந்திரங்கள் வழியாகத் தெய்வத்துடன் தொடர்பு கொள்வது பற்றிய ஒரு முன்னோட்டத்தை இந்தியா வழங்கக்கூடும்] நம்பிக்கை வார்த்தைகளைக் கீதா-ஜிபிடி சொல்ல, அதனால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருக்கிறானாம் இந்த மீல்.

இவன் அளந்துவிட்டுள்ள கதையை முழுமையாக அறிந்திடக் கீழ்க்காணும் முகவரியைச் சொடுக்குங்கள்.

https://www.bbc.com/tamil/articles/cj3z0kj4xyzo   - 20 அக்டோபர் 2025