வெள்ளி, 27 ஜனவரி, 2017

ரூ5.5 கோடியில் தனித் தமிழ்நாடு!

    1. ரப்புரை அவசியமில்லை. எவரும் மேடையேறி முழங்கத் தேவையில்லை. அலைகடலெனத் திரண்டு ஊர்வலம் போவது, உண்ணாநோன்பு இருப்பது, போகுவரத்தை மறிப்பது,  அடிபட்டு உதைபட்டுச் சித்திரவதைக்குள்ளாவது, உயிர்த்தியாகம் செய்வது என்று எந்தவொரு இடும்பை தரும் செயலிலும் ஈடுபட வேண்டாம்.
    2. சுருங்கச் சொன்னால்....
  1. உடம்பில் தூசு படாமல், சின்னஞ்சிறு சிராய்ப்புகூட இல்லாமல், கத்தி ஏந்தாமல், இரத்தம் சிந்தாமல், யுத்தம் ஏதும் நிகழ்த்தாமல் நம்மால் ‘தனித் தமிழ்நாடு’தனைப் பெற்றிட முடியும். 

எப்படி? எப்படி? எப்படி?

“ஏழுமலை வாசா! வெங்கடேஸ்வரா! 14.9 கிலோ எடையில் தங்க சாலிக்கிராம ஹாரம் மற்றும் 4.65 கிலோ எடையில் 5 வரிசை கொண்ட தங்கக் காசு மாலை ஆகியவற்றை உனக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறோம்” என்றிப்படி, இன உணர்வு கொண்ட அத்தனை தமிழர்களும் [ஏழுமலையானிடம்] கோரிக்கை வைத்தால் போதும்[ஆகும் செலவை இன உணர்வுள்ள அத்தனை தமிழர்களும் பகிர்ந்துகொள்ளலாம்]. அவர் நம் கோரிக்கையை நிறைவேற்றுவார்.

நாம் தனித் தமிழ்நாடு பெறுவது 100% உறுதி.

இதை எப்படி நம்புவது என்கிறீர்களா?

இன்றைய நாளிதழில்[‘தின வணிகம்’, 26.01.2017] வெளியான கீழ்வரும் செய்தியைப் படியுங்கள்.

செய்தியின் தலைப்பு: தெலுங்கானா மாநிலம் உதயம் எதிரொலி. ஏழுமலையானுக்கு ரூ.5.5 கோடி தங்க நகைகள் காணிக்கை

செய்தியின் சாரம்: #ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ள முதல்வர் கே.சந்திரசேகர ராவ், தெலுங்கானா மாநிலம் உருவானால்[ஏழுமலையான் உருவாக்கிக் கொடுத்தால்] திருப்பதி ஏழுமலையானுக்கு 14.9 கிலோ எடையில் தங்க சாலிக்கிராம ஹாரம் மற்றும் 4.65 கிலோ எடையில் 5 வரிசை கொண்ட தங்கக் காசு மாலை ஆகியவற்றை ஏழுமலையானுக்குக் காணிக்கையாக வழங்குவதாக நேர்ந்துகொண்டார்[போராட்டக்காரர்கள் பலரின் உயிர்த் தியாகமும் இவரின் உண்ணாநோன்பும் பலன் தரவில்லை என்று நினைத்தார் போலும்!]. கோரிக்கை நிறைவேறியதால், நேர்ந்துகொண்டபடி காணிக்கையை வழங்க உள்ளார். இதன் மொத்த மதிப்பு 5.5 கோடியாகும்#

5.5 கோடி ரூபாய்க்காக ஏழுமலையான் ஒரு மாநிலத்தை உருவாக்கித் தந்தார் என்றால், அதே தொகைக்கு[கூடுதல் காணிக்கை குறித்துக் கலந்தாலோசிப்போம்] நமக்குத் ‘தனி நாடு’ பெற்றுத் தருவார் என்பதில் கிஞ்சித்தும் ஐயத்திற்கு இடமில்லை!
===============================================================================

7 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. முந்தைய பதிவு, தமிழ்மணத்தின் முகப்புப் பக்கத்தில் வெளியாகாமல் மிகவும் தாமதமாகப் பின் வரிசையில் இடம்பெற்றதால் பார்வையாளர் எண்ணிக்கை மிகவும் குறைந்தது[பிரச்சினைக்குரிய தலைப்பு காரணமோ என்னவோ அடிக்கடி இது நேர்கிறது].

      இதனால், முந்தைய பதிவையே தலைப்பை மாற்றி வெளியிட்டுத் தமிழ்மணத்தில் இணைத்தேன். தமிழ்மணமும் இணைத்துக்கொண்டது. ஆனாலும், தமிழ்மணப் பட்டியலில் உள்ள பதிவுகள் நகர்ந்து புதிய பதிவுகளுக்கு இடம்தராமல் உள்ளன. பட்டியலில் இப்பதிவு இன்னும் இடம்பெறவில்லை; பதிவுக்கான ‘பார்வை’ எண்ணிக்கையும் மிக மிகக் குறைவாகவே உள்ளது.

      இப்படிச் சில இடர்ப்பாடுகள்[எனக்கு மட்டுமா?] அடிக்கடி நேர்வதால் பதிவு இடுவதில் சலிப்பு நேர்ந்துள்ளது.

      ஏதோ நடந்துவிட்டுப் போகட்டும் என்னும் மனநிலையில் நான்.

      நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. தனபாலன் அவர்களின் கருத்துக்கான என் பதிலுரையைப் படியுங்கள் கில்லர்ஜி. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நேற்று[26.01.2016] வெளியான ‘கத்தியின்றி...’ தலைப்பிலான பதிவும் தளத்தில் உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. மாடு பிடிக்கவே போராட்டமா இருக்கு .இதிலே எங்கே நாடு பிடிக்கிறது :)
    (இரண்டு முறை கருத்து போட வேண்டியுள்ளதே)

    பதிலளிநீக்கு
  5. இப்படியெல்லாம் பதிவெழுதித் திருப்திப்பட வேண்டியதுதான். நன்றி பகவான்ஜி.

    பதிலளிநீக்கு