எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 2 ஜூன், 2017

உலகில் ஒரு பிராமணன்கூட யோக்கியன் இல்லையா?

கேள்வி கேட்டவர் காந்தியடிகள். பதில் சொன்னவர்: பெரியார். வெகு சுவையான பழைய சம்பவம். படிக்கலாமே!

1957ஆம் ஆண்டில் பெங்களூரில் பெரியாரும் காந்தியாரும் சந்தித்தபோது[‘கிளர்ச்சிகளும் செய்திகளும்’ 1. ப. 2995].....
காந்தியார்: உங்களுக்கு ஒரு பார்ப்பனரிடம்கூட நம்பிக்கையில்லையா?

பெரியார்: நம்பிக்கை ஏற்படமாட்டேன் என்கிறது.

காந்தியார்: இராசகோபாலாச்சாரியாரிடம்கூட உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

பெரியார்: அவர் நல்லவர்; உண்மையானவர்; தியாகி; சுயநலம் இல்லாதவர். அதே நேரத்தில் அவர் அவர்களது வகுப்பு[பிராமணர் ஜாதி] நலனுக்கும் உண்மையான தொண்டராக இருக்கிறார். அவர்களுக்காகவும் அவர் சுயநலமில்லாமல் தொண்டு செய்கிறார். எங்கள் நலத்தை[பிராமணர் அல்லாதார்] அவரிடம் நம்பி ஒப்படைக்க முடியாது.

காந்தியார்: இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியானால், உலகத்தில் ஒரு பிராமணன்கூட யோக்கியன் இல்லை என்பது உங்கள் கருத்தா?

பெரியார்: இருக்கலாமோ என்னவோ எனக்குத் தென்படவில்லை.

காந்தியார்: அப்படிச் சொல்லாதீர்கள். நான் ஒரு பிராமணனைப் பார்த்திருக்கிறேன். சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவர் நல்ல பிராமணன் என்றே நான் கருதுகிறேன். அவர் யார் தெரியுமா? அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே.

பெரியார்: அப்பாடா! தங்களைப் போன்ற மகாத்மாவினுடைய கண்ணுக்கே இப்பரந்த உலகத்தில் ஒரே ஒரு நல்ல பிராமணன் தென்பட்டாரென்றால் எங்களைப் போன்ற சாதாரணப் பிறவிகளின் கண்களுக்கு எப்படி உண்மைப் பிராமணன் தென்பட முடியும்?
===============================================================================

நன்றி: திருமழபாடி நண்பர் முனைவர் அ. ஆறுமுகம் அவர்கள்.

2 கருத்துகள்: