எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 1 மே, 2019

தமிழ் பேசும் காட்டுமிராண்டிக் கும்பல்!!!

'காலைக் கதிர்'[30.04.2019] நாளிதழ்ச் செய்தி:
இச்செய்தியை வாசித்து முடித்ததும் என்னுள் முகிழ்த்த சில கவிதை வரிகள்:

சிதறுது சிதறுது தமிழனின் சிந்திக்கும் அறிவு சிதறுது.

பதறுது பதறுது பகுத்தறிவாளரின் உடம்புடன் இணைந்து 
உள்ளமும் பதறுது.

சிரிக்குது சிரிக்குது இவனின் கூமுட்டைத்தனம் கண்டு 
ஒட்டுமொத்த உலகமும் சிரிக்குது.

நகைக்குது நகைக்குது இந்த இளிச்சவாயனின் பேராசை குறித்து
நகைக் கடைக் கும்பல் நாளெல்லாம் நகைக்குது.

நாமக்கல் கவிஞர் உயிரோடு இருந்தால்.....

''தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவற்கெனப் பல இழிகுணமுண்டு'' என்று 
தவறாமல் பாடியிருப்பார்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக