பக்கங்கள்

வியாழன், 18 ஜூலை, 2019

அன்புள்ள எச்.ராசாவுக்கு.....!!!

ராசா தம்பி, வன்முறையைப் பத்தி நீயா பேசுறே? ஹி...ஹி...ஹி!

சிலையை உடைப்பேன்... செருப்பால் அடிப்பேன்னெல்லாம் பேசுன/பேசுற நீயா வன்முறையைப் பத்திப் பேசுறே?!

புதிய கல்விக்கொள்கைக்கான வரையறையில் 4 பக்கத்தைச் சிவக்குமார் மகன் சூர்யா படிக்கணும், அப்புறம்தான் கருத்துச் சொல்லணும்னு சொல்லுறே. அந்த நாலு பக்கத்தையும் நீ படிச்சியா ராசா?

படிக்கிற பழக்கமெல்லாம் உனக்கு இருக்கா என்ன?

நிறையப் படிப்பா. படிச்சாத்தான் சிந்திக்க முடியும்.

’தாய்மொழி, ஆங்கிலம், விருப்ப மொழி என்றுதான் உள்ளதுன்னு சொல்லுறே. முதல் இரண்டும் சரி. அந்த மூனாவது ‘விருப்ப மொழி’ மாணவர்களுக்கு வீண் சுமைன்னு சூர்யா பேசுனது எல்லாப் பத்திரிகையிலும் வெளியாயிருக்கு. அதை நீ படிச்சியா?

அந்த மூனாவது மொழி இந்திதான்கிறது உனக்குத் தெரியவே தெரியாதா ராசா? 

மக்களைவைத் தேர்தலில் ஜெயிச்சி மத்திய மந்திரி ஆகிறதாக் கனவு கண்டே. அது பகற்கனவாயிடிச்சி. என்னவெல்லாமோ உளற ஆரம்பிச்சுட்டே.

தேசியச் செயலாளர் பதவி எந்த நேரத்திலும் பறிபோகலாம். அதைத் தக்கவைக்கிறதில் கவனம் செலுத்து தம்பி. 
=================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக