பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 26 நவம்பர், 2019

தமிழ் தற்காலிகமாக வாழும்!

#காவல்துறை அலுவலர்கள் அனைவரும் தங்கள் இருக்கையில் பராமரிக்கும் தன்பதிவேடு, முன்கொணர்வு பதிவேடு உள்ளிட்ட அனைத்துப் பதிவேடுகளையும் இனி தமிழ் மொழியில் பராமரித்தல் வேண்டும். 

வருகைப் பதிவேட்டில் தமிழில் கையொப்பம் இடுதல் வேண்டும்.

அனைத்து வரைவுக் கடிதத் தொடர்புகளும், குறிப்பாணைகளும் தமிழில் எழுதுதல் முக்கியம்.

அனைத்துக் காவல் வாகனங்களிலும், ‘காவல்’ என்னும் சொல் இடம்பெறுதல் அவசியம்.

காவல்துறை தொடர்பான அலுவலக முத்திரைகள், பெயர்ப் பலகைகள் தமிழில் இருப்பதும் மிக அவசியம்.

இவ்வாணையை அனைத்துக் காவல்துறை அலுவலர்களும் தங்கள் கவனத்தில் கொள்வதோடு, தம்மிடம் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் உரிய முறையில் அறிவுறுத்துதல் உனடடித் தேவை ஆகும்#

மேற்கண்ட வகையிலானதொரு ஆணையைத் தமிழ்நாட்டுக் காவல்துறைத் தலைவர்[டிஜிபி] திரிபாதி பிறப்பித்துள்ளார்.

தமிழை நாம் அழித்துக்கொண்டிருக்கும் நிலையில்[குறிப்பாக, தம் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்கள்], இது கொஞ்சம் ஆறுதல் தரும் செய்தியாகும்.

கவால்துறை போலவே, அனைத்துத் துறைத் தலைவர்களும் இது போன்றதொரு ஆணையைத் தத்தம் துறை சார்ந்தவர்களுக்கு வழங்குவதோடு, அது நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணித்து, இல்லையெனில் உரிய நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம் ஆகும்.

அனைத்துத் துறை சார்ந்த நூல்களையும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்வதும், அறிவியல் அறிவு வாய்த்தோருக்கு உயரிய பரிசுகள் வழங்கி அவர்களை அறிவியல் நூல்கள் எழுதிட ஊக்குவித்தலும் இன்றியமையாத் தேவைகளாகும்.

அனைத்துத் துறைகளிலும் தமிழைப் பயன்படுத்தினால் மட்டுமே அது வாழும்; வளரும்.
===========================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக