அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

அமெரிக்கப் பெண்ணிடம் அடி உதை வாங்கிய தடிச்சாமியார்!!!

இவன் பேர் மணிகண்டன்; நாமக்கல்காரன்[பக்கத்தூர்]; சோம்பேறி.

உழைக்காம பிழைக்க என்னடா வழின்னு யோசிச்சான்; சாமியாராயிட்டான்.
உள்ளூரில் இந்த வேடம் எடுபடாதுன்னு, திருவண்ணாமலைக்குப் போய், இவன மாதிரி சாமியார்கள் இருக்கிற குடியிருப்புப் பகுதியில் தங்கியிருந்தான்.

ஐந்து மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பொண்ணு இதே பகுதியில் ஒரு வீட்டில் தனியாகத் தங்கியிருந்தது.

அந்தப் பொண்ணை நோட்டம் விட்ட இவன், எப்படியாவது பணிய வைச்சிக் காரியத்தை முடிச்சிட்டா, அந்தப் பொண்ணையே கல்யாணமும் பண்ணிட்டு அமெரிக்கா போயி சொகுசா வாழலாம்னு மனக்கோட்டை கட்டினான்.

அன்றைய தினத்தில், கையில் ஒரு அரிவாளையும் தங்கத் தாலியையும் எடுத்துட்டு, அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போயி, அரிவாளைக் காட்டிப் பயமுறுத்திப் பலாத்காரம் பண்ண முயற்சி பண்ணினான்.

அந்த அமெரிக்கப் பொண்ணு நம்ம பொண்ணுக மாதிரி பயந்தாங்கொள்ளி அல்ல. தைரியமா இந்தப் போலிச்சாமியாரை எதிர்த்துப் போராடிச்சி. அடி உதைன்னு இவனை நிலைகுலைய வெச்சதோட, இவன்கிட்ட இருந்த அரிவாளைப் பிடுங்கி வெட்டிச்சி. இவன் தலையில் காயம். அமெரிக்கப் பொண்ணுக்கும் காயம்.

இவங்க ரெண்டுபேரும் போட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்து மக்கள் அங்கே திரண்டாங்க. சாமியார் தடியனுக்குத் தர்ம அடி குடுத்துக் கட்டிப் போட்டாங்க. காவல்துறைக்குத் தகவல் தர அவங்க இவனைக் கைது செய்துட்டாங்க.

அந்த அமெரிக்கப் பொண்ணுக்குத் தற்காப்புக் கலை தெரியும்னு காவல்துறைக்காரங்க சொல்லியிருக்காங்க[24.08.2020 தினத்தந்தி நாளிதழ்] https://www.dailythanthi.com/Districts/tiruvannamalai

எது எப்படியோ, எங்க ஊர் மானம் அந்தரத்தில் ஊர் உலகமெல்லாம் சுத்தி வருது!
=====================================================================