அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

கொரோனாவும், 'பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' பயன்பாடும்.

 ‘‘நம் விரல் நுனியில் க்ளிப் போன்று பொருத்தக்கூடிய ஒரு சிறிய கருவிதான் பல்ஸ் ஆக்ஸிமீட்டர். இது SpO2 எனப்படும் புற ஆக்ஸிஜன் நிலை (Peripheral oxygen saturation) அல்லது நம் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அளவிடுகிறது.’’

ஒருவருக்கு ஆக்ஸிஜன் எந்த அளவில் இருக்க வேண்டும்?

‘‘இயல்பாக ஒருவருக்கு ஆக்ஸிஜனேற்றம் அளவு 95-க்கு மேல் இருக்கும். 92-க்கு கீழ் குறைந்தால், அவருக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதுவே நுறையீரல் நிலை மோசமாக இருக்கும் நாள்பட்ட நுரையீரல் அடைப்புள்ள(COPD) நோயாளிகள் மற்றும் நுரையீரல் தொற்றுநோய் உள்ள நோயாளிகள் அல்லது நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளுக்கு 90-க்கும் குறைவாக இருக்கும். இவர்களுக்கு வீட்டிலேயே பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் அடிக்கடி சோதனை செய்து, ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்படும்.’’

http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3633&id1=139&issue=20200701

ந்தக் கொரோனா காலத்தில் 'பல்ஸ் ஆக்ஸிமீட்டரின் தேவை அதிகரித்துள்ளதால் சில தரம் குறைந்த ஆக்ஸிமீட்டர் கருவிகளும் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும் சிலர், இந்தக் கருவியைக் கையில் மாட்டி, தினமும் குறைந்தபட்சம் 20 தடவையாவது ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். உதாரணமாக, நார்மல் ஆக்ஸிஜன் அளவு 95-100% என்றால், ஒருவர் ஆக்ஸிமீட்டரில் 9 முறை பரிசோதிக்கும்போது 99% என்று காண்பிக்கும். அதுவே பத்தாவது முறை 96% என்று காண்பித்தால் அது நார்மல்தான் என்றாலும் கூட, மருத்துவத் தெளிவு இல்லாத காரணத்தால் சிலர் 'ஐயோ... கடந்த தடவையைவிட இந்த முறை அளவு குறைந்துள்ளதே. ஒருவேளை கொரோனா தொற்றாக இருக்குமோ?!' என்று தேவையில்லாமல் பதற்றப்படவும் வாய்ப்புள்ளது. 

யாரெல்லாம் அவசியம் பயன்படுத்த வேண்டும்?

1.கொரோனா டெஸ்ட் 'பாசிட்டிவ்' என்று வந்து தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டவர்கள் ஆக்ஸிமீட்டர் வாங்கி வைத்துக்கொண்டு தினமும் பரிசோதித்துக் கொள்ளலாம்.

2.கொரோனா டெஸ்ட் 'நெகட்டிவ்' என்று வந்து 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அந்த 14 நாள்களும் ஆக்ஸிமீட்டர் மூலம் உடலின் ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.

3.ஏதேனும் காய்ச்சல் அல்லது சளி, இருமல் இருப்பவர்கள் அவை குணமாகும்வரை பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தலாம்.

4. ஏற்கெனவே ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு அல்லது வேறு ஏதேனும் நுரையீரல், சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள் இதை அவசியம் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.

5. மருத்துவமனையில் பணிபுரிவோர்கள் பணிக்குச் செல்லும் முன்பும், சென்று வந்த பிறகு இதனைக் கொண்டு உடலின் ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதித்துக் கொள்ளலாம்.

6. இது தவிர, முதியோர்கள் முதல் குழந்தைகள்வரை யார் வேண்டுமானாலும் தங்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவைத் தெரிந்துகொள்ள பல்ஸ் ஆக்ஸிமீட்டரைப் பயன்படுத்தலாம்.

https://www.vikatan.com/health/healthy/doctor-guidance-on-how-to-use-a-finger-pulse-oximeter 

சில வாரங்களுக்கு முன்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் வெளிப்படுத்தாத ஏசிம்ப்டமடிக் நிலையில்  (ASYMPTOMATIC INFECTION)  இருப்பதாக தெரிவித்தது. அதாவது ஏசிம்ப்டமடிக் நிலையில் இருப்பவர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இருக்காது. அப்படியிருந்தாலும் பெரியளவில் அது வெளிப்படாது.

பொதுவாக ஏசிம்ப்டமடிக் உள்ளவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதே அறியாமல் இருப்பார்கள்.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பவர்களுக்கு கொரோனாவுக்கு மருத்துவச் சிகிச்சை இல்லாமலே தானாகவே குணமாகிவிடும்.

உடல் பலவீனமாக இருக்கும் ஏசிம்ப்டமடிக் தொற்றாளர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சுத்திணறல் ஏற்படும். அப்பொழுது தான் கொரோனா தொற்று இருப்பதே தெரியவரும்.

ஏசிம்ப்டமடிக் தொற்றாளருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து மிகவும் மோசமான நிலையில்  மருத்துவச் சிகிச்சைக்குச் செல்லும் போது பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. இவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்குவது பிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர் என்கிறார்கள் மருத்துவர்கள்.

http://www.dinamalarnellai.com/web/news/90230

பிராணாயாமத்தின் பொழுது காற்று நுரையீரலில் அதிக நேரம் நிறுத்தப்படுவதால் காற்றிலுள்ள ஆக்சிஜன் அதிக அளவு பரிவர்த்தனை செய்யப்படுகிறது.

இதனால் செல்களுக்கு அதிக ஆக்சிஜன் என்கிற பிராணவாயு கொடுக்கப்பட்டு சக்தி வீணாவது தடுக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாகக் கிடைக்கும் ஆக்சிஜனால் கிடைக்கும் பிராண சக்தி தசைகளில் உள்ள மயோகுளோபினால் சேர்த்து வைக்கப்படுகிறது. 

சாதாரணமாக சுவாசிக்கும் போது நுரையீரலில் உள்ள 3000 காற்றறைகள் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் பிராணாயாமத்தின் போது 6000 காற்றறைகள் செயல்படுகின்றன.

எனவே, இரு மடங்கு சக்தி கிடைப்பதோடு, அதிகமான பிராணசக்தி சேமிக்கப்பட்டு ஒரு நிலையில்  மூலாதாரத்தில் சேர்கிறது. இதனால் ஆயுளும் அதிகரிக்கிறது.

செல்களுக்குத் தேவையான பிராணவாயுவைப் பிராணாயாமம் மூலம் பெறும் தன்மையையும் உடல் அடைவதால் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும் தன்மையைப் பெற்றுவிடுகின்றன.

நிமிடத்துக்கு 15 முறை சுவாசிக்கும் மனிதன் 10 நிமிடம் பிராணாயாமம் செய்யும் போது ஒரு பங்கு நேரம் உள் இழுத்தல், நாலு பங்கு நேரம் உள்ளே வைத்தல், இரண்டு பங்கு நேரம் வெளியே விடுதல் என்று சுவாசம் செய்யும் போது 140 சுவாசங்களை மிச்சப்படுத்துகிறான்.

https://sites.google.com/view/homsidhmedics/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE

===============================================================