அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 12 அக்டோபர், 2020

உடலுறவுக்கு 'உலை' வைக்கும் கொரோனா!!!

லகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், பலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான சமூக வாழ்க்கையில் தொடங்கி அந்தரங்க வாழ்க்கைவரை அனைத்திலும் கொரோனா அச்சம் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியுள்ளது.

கூட்டமாக இருக்காதீர்கள், ஒருவரையொருவர் தொட்டுக்கொண்டு பேசாதீர்கள், 6 அடி தள்ளியே பேசுங்கள், கை குலுக்காதீர்கள்... இப்படி மனிதனுக்கு மனிதனே எதிரி என்பது போல் ஆக்கிவிட்டது கொரோனா அச்சம்.

என்னதான் பாதுகாப்புகள் கருதி இதையெல்லாம் பின்பற்றினாலும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினம்தான். இந்நிலையில் தன் காதல் மனைவியை, அன்புக் காதலனைக் கட்டியணைத்து முத்தம் கொடுப்பதுகூடத் தவறா என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அதற்கான விடை.....

கொரோனா வைரஸே தாக்கியிருந்தாலும் அதன் அறிகுறி தெரியக் குறைந்தது ஐந்து நாட்களாவது ஆகும் என்கிறார்கள். இந்நிலையில் உங்கள் அன்புத் துணைக்கும் அது இருந்தால்...?

கொரோனா வைரஸ், உடலுறவு கொள்வதால் பரவுமா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அதேசமயம் கருத்தரித்தலும் பாதுகாப்பனதா என்பதும் உறுதியளிக்கப்படவில்லை. இருப்பினும் கொரோனா தொடுதல், இருமல் ஆகியவற்றின் மூலம் பரவுகிறது என்பதால் உடல் சார்ந்து உங்களுடைய பாலுணர்வுகளை வெளிப்படுத்துவதைக் கட்டுப்படுத்துதல் அவசியம்.

எச்சில் துப்புதலும் தவறே என்று கூறிவரும் நிலையில் உதட்டோடு உதடு முத்தம் தருதலும் ஆபத்துதான். அதற்காக இந்த வைரஸ் தொண்டை வழியாகப் பரவுகிறது என்று அர்த்தமல்ல. எந்த விசயமெல்லாம் உங்களை அடிக்கடி பாலியல் உணர்ச்சிகளுக்குத் தூண்டுகிறதோ அதையெல்லாம் தவிர்க்க முயலுதல் மிக மிக அவசியம். 

உடலுறவு மூலமாகவும் பரவுகிறது என்பதற்கும் எந்தவித ஆதாரங்களும் இதுவரை இல்லை. இருப்பினும் இந்தச் சமயத்தில் உடல் பாதுகாப்புக் கருதி   உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் இன்றியமையாத் தேவையாகும்.

அதேபோல் வீட்டில் கணவன் , மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறீர்கள் எனில் வீட்டிற்கு வந்ததும் மீண்டும் ஒருமுறை குளித்துவிடுவது நல்லது. வீட்டையும் அலங்கோலமாக இல்லாமல் இந்த நேரத்தில் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். கைகளை அடிக்கடிக் கழுவுங்கள், சானிட்டைஸர் பயன்படுத்துங்கள்.

காதலர்கள் சந்திப்புகளைத் தள்ளி வைப்பது நல்லது. பொதுவெளியில் சந்திப்பது மட்டுமன்றி அவ்வாறு சந்திக்கும்போது பாலின உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினம். அதேபோல் தொலைதூரக் காதலர்களும் சந்திப்பைத் தவிர்ப்பது நல்லது. சந்திப்பிற்குப் பதிலாக வீடியோ கால் மூலம் பேசலாம்.

அதேபோல் சிங்கில்ஸ் டேட்டிங் ஆப்ஸ் மூலம் புதிய நபர்களைச் சந்திப்பதையும் தவிர்த்துவிடுங்கள். உணர்ச்சியைக் கட்டுப்படுத்தவே இயலவில்லை என்றால் சுய இன்பம் காணுதலே சிறந்தது என அறிவுறுத்துகின்றார்கள் மருத்துவர்கள். இதை 'நியூயார்க் போஸ்ட்', 'வாக்ஸ்', 'ஹெல்த்' போன்ற இதழ்களும் வலியுறுத்துகின்றன. 

ஆக, நிலைமை எதுவாக இருந்தாலும் உங்கள் தாம்பத்திய உறவைத் தள்ளி வைப்பது நல்லது என்பதே மருத்துவர்களின் அறிவுரை.

கணவன் மற்றும் மனைவி இடையே அன்பு நிலையாக இருக்க வேண்டும் என்றால் உடல் உறவு மிகவும் அவசியமான ஒன்று. என்னதான் நாம் வாய் வழியாகவோ அல்லது கண்கள் வழியாகவோ அன்பை பரிமாறிக் கொண்டு இருந்தாலும் அதற்கென்று இருக்கும் நிலைதான் உடலுறவு. எனவே, இதை மேற்கொள்வதற்குச் சில வாரங்கள் பொறுத்திருங்கள், உங்களுக்கு எந்த ஒரு நோய்த் தொற்றும் இல்லை என்றால் வீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ளலாம்.

===============================================================

News18 Tamiltamil.news18.com போன்ற இணையத் தளங்களிலிருந்து 'சுட்டு'த் தொகுத்தது!