அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 18 மார்ச், 2022

'தவ்ஹீத் ஜமாஅத்' போராட்டம்'... தமிழ்நாடு அரசின் செயல்பாடு?

#"மோடியை கண்டும், யோகியைக் கண்டும், சாவைக் கண்டும் அமித்ஷாவைக் கண்டும் அஞ்சாத கூட்டம் இது."

"அல்லாஹ்விற்கு மட்டுமே அஞ்சுகிற கூட்டம் இது." 

"'நிறுத்திக்கொள். நிறுத்திக்கொள். எங்கள் பொறுமைக் குணம் மாறும் முன் நிறுத்திக்கொள். பொறுமையை நாங்கள் இழந்து விட்டால், நீ இருக்க மாட்டாய் புரிந்துகொள்' என்று உணர்ச்சிவசப்படுகிற மக்கள் இங்கு இருக்கிறார்கள்." 

"இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு எதிராக நீதிபதிகள் தீர்ப்புக் கொடுத்தால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எங்காவது ஒரு பெரும் சம்பவத்திற்கு உள்ளாவார்களேயானால், ஏதாவது ஒரு விபத்து, ஏதாவது ஒரு அசம்பாவிதம், ஏதாவது ஒரு கொலை போன்ற சம்பவத்திற்கு உள்ளாவார்களேயானால் அதற்குத் தீர்ப்புக் கொடுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பொறுப்பு." 

மேற்கண்ட வகையில், நேற்று மதுரையில் நடைபெற்ற தமிழக 'தவ்ஹீத் ஜமாஅத்' ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டும் பேசப்பட்டும் உள்ளன.#

-என்றிவ்வாறு https://pagadhu.blogspot.com/ என்னும் தளம், 18.03.2022இல் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது[தொடர்புடைய காணொலிகளும் அதில் இடம்பெற்றுள்ளன]. மேலும், இந்நிகழ்வு குறித்து, நாராயணன் திருப்பதி தமிழ்நாடு அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையும் இப்பதிவில் உள்ளது.

                                          *   *   *   *   *

***மேற்கண்ட பதிவைச் சக பதிவர்களுடன் பகிர்வது மட்டுமே நம் நோக்கம். தனிப்பட்ட விமர்சனம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

நன்றி.

                                          *   *   *   *   *

'நாராயணன் திருப்பதி'யின் அறிக்கை:

#கடந்த இரு தினங்களுக்கு முன், தமிழக 'தவ்ஹீத் ஜமாஅத்' திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழக அரசு அனுமதி மறுக்க வேண்டும் என்று நான் கோரியிருந்த நிலையில், பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், உச்சநீதி மன்ற நீதிபதிகளையும் கொலை செய்வோம் என்று அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டும் தமிழக அரசும், தமிழகக் காவல்துறையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

மத அடிப்படைவாதச் சக்திகள் வெளிப்படையாகப் பிரதமருக்குக் கொலை மிரட்டல் விடுப்பது தமிழகத்தின் சட்ட ஒழுங்கை, அமைதியை, மத நல்லிணக்கத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.   

நீதிபதிகளைக் கொலை செய்துவிடுவோம் என்று இந்த இயக்கம் வெளிப்படையாகக் கூறியிருப்பது மத அடிப்படைவாதச் சக்திகள் தமிழகத்தில் இயங்குகின்றன என்பதை வெளிப்படையாகக் காட்டுவதோடு, இந்த இயக்கங்கள் நீதியின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையின்றித் தீவிரவாத, பயங்கரவாதப் பாதையில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கின்றன என்பதை உணர்த்துகிறது.     

இப்போதே இந்தத் தீய சக்திகளை இரும்புக்கரம்கொண்டு அடக்காவிடில், விரைவில் பயங்கரவாதம் தமிழகத்தில் மையம்கொள்ளும் என்பதைத் தமிழக அரசு உணர வேண்டும். தமிழக முதல்வர் மற்றும் தமிழகக் காவல்துறை, அந்தக் கூட்டத்தில் கொலை மிரட்டல் விடுத்த அடிப்படைவாத பயங்கரவாத இயக்கத்தைக் சேர்ந்தவர்களைக் கைது செய்ய உத்தரவிடுவதோடு, பயங்கரவாதத்தைப் பரப்பும் தமிழ்நாடு 'தவ்ஹீத் ஜமாஅத்' இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும். இல்லையேல், மதவாத, பயங்கரவாத இயக்கத்தினால் ஏற்படும் பயங்கர விளைவுகளுக்குத் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டி வரும்.  -நாராயணன் திருப்பதி

==========================================================================