அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 19 மார்ச், 2022

சொர்க்கம் மூன்று! நரகமும் மூன்றே!!

*பைபிளின்படி.....  பல சந்தர்ப்பங்களில் அவர் தனது தீர்க்கதரிசிகளுக்குச் சொர்க்கத்தைக் காட்டினார் (ஏசாயா 6; எசேக்கியேல் 1; டேனியல் 7: 9-10; 2 கொரிந்தியர் 12: 1-4; வெளிப்படுத்துதல் 1: 4-5). கடவுள்[கர்த்தர்] இப்போது சொர்க்கத்தில் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.[https://turk-sinema.ru/ta/fortune-telling/est-rai-ili-ad-sushchestvuet-li-ad-i-rai-iz-vospominanii-amerikanskogo.html]

'கிறிஸ்தவர்கள் நரகம் என்பது பாவம் செய்பவர்கள் தண்டனை பெறும் துன்பமான இடம் என்று நம்புகின்றனர்.' https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

மேற்கண்ட ஆதாரத்தைக் கொண்டு, சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் இருப்பைக் கிறித்தவம் உறுதிப்படுத்துகிறது என்பதையும், அவற்றைக் கர்த்தர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.

*சொர்க்கத்தின் தலைவன் உடலெல்லாம் கண்கள்(???) கொண்ட இந்திரன். (இந்திரனைப் பற்றிய கதைகளைப் படித்தவர்கள், உண்மையில் இவர் எப்படிச் சொர்க்கத்தின் அதிபதி ஆனார் என்று ஆச்சர்யபடுவார்கள்). https://yauwanajanam.activeboard.com/t41671314/topic-41671314/?page=1&sort=oldestFirst

நரகம் (சமசுகிருதம்:नरक, நரகா) என்பது இந்துத் தொன்மவியலின் அடிப்படையில் பூமியில் பிறக்கும் உயிர்களில் பாவங்கள் செய்த ஆன்மாவிற்குத் தண்டனை விதிக்கும் உலகமாகும். இதன்[நரகம்] அரசராக யமன் உள்ளார். பாவ புண்ணியங்களைக் கணக்கிடும் பணியாளனாகச் சித்ரகுப்தன் உள்ளார்[https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)

இந்த ஆதாரங்களின் மூலம், இந்துமதத்தினரும் 'சொர்க்கம்-நரகம்' என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் என்பதை அறியலாம்.

*‘மக்கள் சிலர் தாங்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனையாக நரகத்தில் நெருப்பினால் தீண்டப்பட்டு, அவர்களின் சருமத்தின் நிறமே மாறிவிடும். பிறகு அல்லாஹ் அவர்களைத் தன் தனிக்கருணையினால் சொர்க்கத்தில் அனுமதிப்பான். அவர்கள் நரகத்தில் இருந்து விடுதலை அடைந்தவர்கள் என்று சொல்லப்படுவார்கள் என நபி(ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

"இஸ்லாம் மார்க்கத்தின்படி, சொர்க்கம், நரகம் எல்லாம் உண்டு"[https://ne-np.facebook.com/thouheedjamath/videos/]

***மேலே இடம்பெற்றுள்ளவை சொர்க்கம், நரகம் ஆகியன பற்றிய ஆதாரங்கள். 

இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால், ஒரு சொர்க்கமும் ஒரு நரகமும் இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டிருப்பது தவறானது ஆகும். 

கர்த்தர்தான் சொர்க்கத்தின் தலைவர் என்கிறார்கள் கிறித்தவர்கள். அதன் தலைவர் இந்திரன்தான் என்கிறார்கள் இந்துமதத்தினர். இஸ்லாமியரோ, அல்லாஹ்தான் தலைவர் என்கிறார்கள். எனவே, இவர்களின் கூற்றுப்படி, மூன்று சொர்க்கங்கள் உள்ளன என்றாகிறது. சொர்க்கங்கள் மூன்று எனின், நரகங்களும் மூன்றே என்பது உறுதியாகிறது. 

இவை மும்மூன்றோ முப்பது முப்பதோ எவ்வாறோ இருந்து தொலையட்டும். நம் கவலை நாத்திகர்களைப் பற்றித்தான்.

சொர்க்கத்தில் அனுமதிக்கப்படாத நாத்திகர்கள், மூன்றில் எந்த ஒரு நரகத்தில் கிடந்து வதைபடுவார்கள்?

மூன்றில் எது கொஞ்சமே கொஞ்சமேனும் தேவலாம்?

பதில், மதவாதிகளுக்கு மட்டுமே தெரியும்! ஹி... ஹி... ஹி!!!
==========================================================================