எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 31 மார்ச், 2022

வருகைபுரிவோருக்கு என் நெஞ்சார்ந்த வேண்டுகோள்!

'தமிழ்ச்சரம்'[திரட்டி] என் இடுகைகளை இணைத்துக்கொள்வதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது[காரணம் எதுவாகவும் இருக்கலாம்]. என்னுடைய விருப்பமும் இதுவே. 

ஏற்கனவே, பல மாதங்களுக்கு முன்பு, 'என் இடுகைகளை இணைக்க வேண்டாம்' என்று நான் வேண்டுகோள் விடுத்திருந்தும் அது கண்டுகொள்ளவில்லை[இணைப்பைத் துண்டிப்பதற்கான வழிமுறையும் எனக்குப் பிடிபடவில்லை]. எனவே.....

என் இடுகை, தவறுதலாகத் தமிழ்ச்சரத்தில் இணைக்கப்பட்டாலும், அதைச் சொடுக்கி, என் பதிவுகளை வாசிக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டாம் என்றும், என் தளத்திற்கே நேரடியாக வருகைபுரியுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

தமிழ்ச்சரத்தின் புறக்கணிப்பால் என் தளத்திற்கு வருகைபுரிவோரின் எண்ணிக்கை குறையக்கூடும். அது குறித்தெல்லாம் எனக்குக் கவலை ஏதும் இல்லை.

நான் பதிவுகள் எழுதுவதுவதற்கான முக்கியக் காரணங்கள்.....

நினைவாற்றலை இயன்றவரை தக்கவைப்பதும், எண்ணங்களுக்குக் கட்டுரை வடிவம் கொடுப்பதும், கட்டுரைகளில் தகுதி வாய்ந்தனவற்றை நூலாக்கி அமேசான் கிண்டெலில் வெளியிடுவதும்தான்.

நன்றி.