ஞாயிறு, 27 நவம்பர், 2022

பெண்ணழகைப் புகழ்ந்த ‘போக’ சாமியாரும், எதிர்த்துப் போராடும் பெண்களும்!!!

‘‘பெண்கள் புடவை, சல்வார் என எந்த ஆடை அணிந்தாலும் அழகாக இருப்பார்கள். என்னைப் பொருத்தவரை அவர்கள் எந்த ஆடையும் அணியாமல் இருந்தாலும் அவர்கள் அழகிகள்தான்’’ என்று பாபா ராம்தேவ், மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நேற்று முன்தினம் நடந்த இலவச யோகா நிகழ்ச்சியில் பேசினாராம்.

‘இது தொடர்பாகத் திருப்பதி கிழக்குக் காவல் நிலையத்தில் அகில இந்தியப் பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் நேற்றுப் புகார் அளித்திருக்கிறார்கள்; ராம்தேவ் பாபா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

நாட்டில் பெண்களை இழிவுபடுத்தி இதுபோல் பேசுவது சாமியார்களுக்கு சகஜம் ஆகிவிட்டது. ஏனெனில், அவர்கள் எதைப் பேசினாலும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்’ -இது செய்தி[https://www.dinakaran.com/news_detail.asp?Nid=817672].

பெண்களைக் கொச்சைப்படுத்திய குற்றத்திற்காகப் பாபா சாமியாரைக் கைது செய்ய வேண்டும் என்று அகில இந்தியப் பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த பெண்கள் போராடுகிறார்களாம்.

இந்தப் போராட்டம் தேவையற்றது.

‘போக’ சாமியார் பாபா[ராம்தேவ்] பல பெண்களை நிர்வாணமாகப் பார்த்து ரசித்திருக்கிறார். அந்த அனுபவத்தைத்தான் மக்களிடையே பகிர்ந்திருக்கிறார்.

பெண்கள், குளியலறையிலும் அந்தரங்க உறவின்போது பஞ்சணையிலும் ஆடையில்லாமல் காட்சியளிக்கிறார்கள். அதை எப்படியோ பார்த்து ரசித்திருக்கிறார் பாபா ராம்தேவ்ஜி. பார்த்ததைப் பொதுவிடத்தில் வர்ணித்திருக்கிறார்.

இதிலென்ன தவறு?

ஆடையுடனும் சரி, ஆடை இல்லாமலும் சரி எந்தவொரு நிலையிலும் பெண்கள் அழகிகள்தான். தாடிச் சாமியார் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்.

முன்னொரு காலத்தில், பெண்களென்ன ஆண்களும் அம்மணமாகத் திரிந்தவர்கள்தான் என்பதை மறந்துவிடுதல் கூடாது.

மேலும், பெண்கள் தாங்கள் நடத்தும் போராட்டத்தை, நிபந்தனை ஏதும் விதிக்காமல் உடனடியாகக் கைவிடுதல் வேண்டும்.

ஆனாலும், அவர்களின் போராட்டத்தைத்தான் எதிர்க்கிறோமே தவிர, ‘எதிர்வினை’ ஆற்றுவதை வரவேற்கவே செய்கிறோம்.

பாபா ராம்தேவ் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளச் செல்லும்போதெல்லாம், அவரை இவர்கள் பின்தொடரலாம்.

அவரை முன்னிலைப்படுத்தி, “ஆடை உடுத்திய நிலையில் எல்லா ஆண்களும் ஆண்மை மிக்கவர்கள்தான். ஆடை உடுத்தாத நிலையிலும் அவர்கள் ஆண்மை நிறைந்தவர்களே. அதற்குப் பாபா ராம்தேவ் அவர்களே ஒரு உதாரணம்” என்று ஓங்கிய குரலில் முழங்கி, அவர் உடுத்திருக்கும் ஆடைகளை உருவி எறிந்து அவரை முழு நிர்வாணம் ஆக்கிக் காண்போருக்குக் காட்சிப்படுத்தலாம்!

இப்படி எதிர்வினை ஆற்றினால், மேலிட ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்று கொட்டமடிக்கும் போலிச் சாமியார்களின் திமிர் அடங்கும்; பெண்களைக் கண்டாலே அவர்கள் ஓடி ஒளியும் நிலை உருவாகும்!

==========================================================================