பக்கங்கள்

சனி, 8 ஜூலை, 2023

உச்சம் தொட்ட, தலீபான்களின் பெண்கள் மீதான அடக்குமுறை!!!


2021இல் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோதே, பெண்களின் கல்வி, அலுவலகங்களில் பணியாற்றுதல், பொதுப்பணி செய்தல் போன்றவற்றிற்குத் தடை விதித்தார்கள்.

தொடர்ந்து, பொது இடங்களில்  அவர்கள் தலை முதல் கால்வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிதல் உட்பட ஏராளமான கட்டுப்பாடுகளை அவர்களுக்கு விதித்துவருகின்றனர். 

இந்நிலையில், புதிய உத்தரவு ஒன்றைத் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். https://edition.cnn.com/videos/world/2023/07/05/exp-afghanistan-beauty-salons-close-fst-070511aseg1.cnn

//ஆப்கானிஸ்தானில் உள்ள சலூன்களுக்குத் தலிபான்கள் அறிவித்துள்ள தடைக்கு மத்தியில் கடையை மூடுமாறு அழகு நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுகிறது// என்பதே அந்த உத்தரவின் சாராம்சம்.

ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக, வீட்டுக்குள் புழங்கும் நேரம் தவிர வெளியிடங்களில் பெண்கள் முற்றிலுமாய்த் தங்கள் உடல் மறைத்தே நடமாடுகிறார்கள்[‘பெண் பர்தாவைக் கொண்டு தன்னை மறைக்காவிட்டால் தவறான செயல்கள்(Immoral Activities) செய்வதற்கு அது தூண்டுகோலாய் அமைந்துவிடும். அதனால்தான் இன்று பரவலாகக்  காணப்படும் Eve Teasing(பெண்களைக் கேலி செய்வது) கற்பழிப்பு, கொலை, கொள்ளை என்று இவை போன்ற பல இன்னல்களுக்குப் பெண்கள் ஆளாக்கப்படுகிறார்கள்’[???] -இது, சம்பந்தப்பட்ட இஸ்லாமியர்கள் சொல்லும் காரணம்]. https://www.islamkalvi.com/jeddah_essay_competition/women_3rd_place.htm

பர்தா அணிவது சரியா தவறா என்று ஆராய்வது நம் நோக்கம் அல்ல. கட்டுப்பாடுகளை விதித்தவர்களுக்கும், கட்டுப்படுத்தப்பட்ட பெண்களுக்குமான பிரச்சினை அது.

இங்கு நமக்கு எழும் சில சந்தேகங்கள்:

வீட்டுக்கு வெளியே முற்றிலுமாய் உடல் மறைத்து நடமாடும் ஆப்கானிஸ்தான் பெண்கள், வீட்டுக்குள்ளே மட்டுமாவது[திருமண நிகழ்வுகள் உட்பட] அழகு நிலையங்களுக்கு[ம்]ச் சென்று தங்களை அலங்கரித்துக் கொள்வதன் மூலம் ஒருவரை ஒருவர் முழுமையாகப் பார்த்து மகிழும் வாய்ப்பு இருந்தது. 

தலீபான்கள், இந்த உத்தரவின் மூலம் அந்த மிகக் குறைந்த அளவிலான அற்ப மகிழ்ச்சிக்கும் உலை வைத்துவிட்டார்கள்.  

இதற்கு மேலும் பெண்களிடமிருந்து பறிப்பதற்கான சுதந்திரம் ஏதும் இல்லை என்றே சொல்லலாம். ஒருவேளை, மிச்சம் சொச்சம்னு சுதந்திரம் இருந்து, அதன் மூலம் கொஞ்சுண்டு மகிழ்ச்சியை அவர்கள் அனுபவிப்பார்களேயானால்.....

சிறுமிகள் முதல் கிழவிகள் வரையிலான அத்தனைப் பெண்களையும் மொட்டை போட்டு, உடம்பெங்கும் வெள்ளையடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தித் திருஷ்டி பரிகாரப் பொம்மைகள் போல ஆக்கிவிடலாம்.

”லாம்” எல்லாம் இல்லை, இதையும் செய்வார்கள்; பெண்களுக்கு எதிரான, இதைவிடவும் இழிவான அத்தனை அட்டூழியங்களையும் செய்யக்கூடியவர்கள்தான் தலீபான்கள்!