அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

சீமானின் சீறலும் கொதிக்கும் மதவாதிகளும் பிறரும்!!!


“இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள்” என்று ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவர் சீமான் பேசிவிட்டாராம். இதைக் கண்டித்து இஸ்லாம், கிறிஸ்தவ அமைப்புகள் மட்டுமல்லாமல், விடுதலைச் சிறுத்தை போன்ற கட்சித் தலைவர்களும் கொதியோ கொதி என்று கொதித்திருக்கிறார்கள்.

குண்டர் சட்டத்தில் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று போர்க்குரல் எழுப்பியிருக்கிறார்கள்.


உண்மையில், சாத்தான், பேய், பிசாசு, ஆவி, பில்லி, சூனியம் எல்லாம் இருப்பதாகப் பொய் சொல்லி, அதைப் பரப்புரை செய்து மக்களை மூடத்தனங்களின் பிடியிலிருந்து விடுபட முடியாமல் தடுத்துக்கொண்டிருக்கும் இவர்களைத்தான் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்[அதற்கான காலம் இன்னும் கனியவில்லை].


இவர்களென்ன கடவுளின் பிள்ளைகளா?


“ஆம்” என்றால், இவர்களின் தந்தையான கடவுள், மக்களின் மனங்களில் கெட்ட எண்ணங்களைப் புகுத்திக்கொண்டிருக்கும் சாத்தானை அழித்து ஒழிக்காமல், காலங்காலமாய் அதைக் கொட்டமடிக்கவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது ஏன்?


சொல்லப்போனால், எந்தவொரு மதத்தவராயினும், மனிதராய்ப் பிறந்து வாழும் அத்தனை பேரிடமும் நல்ல குணங்களைக் காட்டிலும் கெட்ட குணங்களே அதிகம்.


மிகுதியும் கெட்ட குணங்களைக் கொண்டவர்களை, நல்ல குணங்களின் உற்பத்தி நிலையமான கடவுளா[அப்படியொருவர் இருந்தால்] படைத்திருப்பார்?


அல்ல! அல்லவே அல்ல!!


சாத்தான்தான் படைத்திருப்பார்[பெற்றெடுத்திருப்பார்] என்பதில் கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமில்லை.


ஆக, மனிதராய்ப் பிறந்த எல்லோருமே[மதவாதிகள் உட்பட] சாத்தானின் பிள்ளைகளாக இருக்கும்போது, சீமான் பேசியதில் என்ன தவறு இருக்க முடியும்?


சீமானைக் கைது செய்திட வேண்டும் என்று போர்க்குரல் எழுப்பும் அத்தனை பேரும் இதைப் புரிந்துகொள்வது நல்லது!