பக்கங்கள்

திங்கள், 4 செப்டம்பர், 2023

"சூப்பர் ஸ்டார் புதல்வியே, உனக்கு எதற்கு இந்தப் ‘பேட்டி’, ‘ஃபோட்டோ சூட்’ எல்லாம்?!”

பிரபல நடிகர் ரஜினியின் இரண்டாவது மகளான செளந்தர்யா தன்னுடைய விவாகரத்து பற்றியும், புதிய காதல்[காதல் உண்மையா? அது எத்தனை முறை மலரும்?] பற்றியும் மனம் திறந்து பேசியதாகச் செய்தி வெளியாகியுள்ளது.*

ஒரு ஹோட்டலில்தான் அவரை(இரண்டாவது கணவர் விசாகன்) இவர் பார்த்துப் பேசினாராம். அங்கு இருந்துதான் இருவரும் ஒன்றாகப் பயணிக்க ஆரம்பித்தார்களாம்.

இது விசயத்தை அப்பா ரஜினிகிட்டே இவர் சொல்ல, ஒரு ஓட்டலில்[மீண்டும் ஓட்டலா? பீச்சு, பூங்காவெல்லாம் எதுக்கு இருக்கு?] இரண்டு பேரும் சந்திச்சிப் பேசணும்னு அவர் சொல்ல, அவர்[விசாகன்] இருந்த ஓட்டலுக்கு இவரே போனாராம்.

போய்.....?

சவுந்தர்யாவே சொல்கிறார்:

ரஜினிகாந்த்அப்புறம் நடந்ததை அம்மணியே சொல்லுகிறார்:

“இவரை நான் தேடிக்கொண்டே அந்தத் தனியார் ஹோட்டலுக்குச் சென்றேன். போட்டோ பார்த்திருந்ததால்[ஏற்கனவே அவரைச் சந்தித்திருக்கிறாரே, போட்டோ எதற்கு?] இவரைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டேன். எங்கள் இருவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் இருவருக்கும் இருக்கும் ஆன்மிக நாட்டம். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ‘கனெக்ட்’ செய்ய வழி வகுத்தது அதுதான்…..” 

இன்னும் எதெல்லாமோ சொல்லி, முத்தாய்ப்பாக,

பெண்ணுக்கு முதன்முறையாகத் திருமணம் நடந்து விவாகரத்து ஆகிவிட்டால், அத்தோடு வாழ்க்கை முடிந்துவிட்டதாக எடுத்துக்கொள்ளக் கூடாது[“இப்போதெல்லாம் அப்படி யாரும் எடுத்துக்கொள்வதில்லை குழந்தாய்”]. வாழ்க்கை சென்றுகொண்டேதான் இருக்க வேண்டும். அவரவர் கர்மாவிற்கு ஏற்பச் செயல்கள் நடந்தே தீரும்” என்று தத்துவார்த்தமாகப் பேசி முடிக்கிறார்.

இருவருக்குமான ஆன்மிக நாட்டம்தான் இருவரையும் ‘கனெக்ட்’ பண்ணினதா சொன்னவர், அப்புறம் ஏனோ கர்மாவுக்கு ஏற்ப எல்லாம் நடக்கும்” என்கிறார்.

உண்மையில் இரண்டு பேரையும் இணைத்தது காதலா, ஆன்மிகமா, கர்மாவா? மூன்றுமா?

எதுவாகவோ இருக்கட்டும்.

ஆணோ பெண்ணோ, திருமணத்திற்குப் பிறகு மறுமணம் செய்வதும், மறு மறு மணங்கள் புரிவதும் சமுதாயத்தில் இயல்பாக நடக்கிற நிகழ்வுதான்.

அதற்குக் காரணம் மனப் பொருத்தம், உடல் பொருத்தம் எல்லாம் அமையாமல் இருத்தல்.

சவுந்தர்யாவும் இதற்கு விதிவிலக்கானவர் அல்ல. ஏதோ ஒரு வகையிலோ பல வகைகளிலுமோ ஒத்துவராததால்தான் முதல் கணவனிடமிருந்து பிரிந்தார்.

இதில், பிறர் தலையிடவோ குற்றம் கண்டறியவோ உரிமை இல்லை.

அடுத்து ஒருவரைத் தேர்வு செய்ததும் தவறில்லை. தேவை நேர்ந்தால்[அது நடக்கவே கூடாது] இன்னும் பல திருமணங்களும் செய்யலாம்; தவறே இல்லை[ஆனால், ஒவ்வொரு தடவையும் காதல் கத்தரிக்காய் பண்ணியதாகப் புளுகக்கூடாது].

ஆனால்…..

ஆன்மிகம், கர்மா என்று ஏதேதோ பிதற்றி, பேட்டி கண்டவரையும், அதை வாசிப்பவர்களையும் மண்டை காய வைக்கிறாரே அதுதான் தவறு.

சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், வம்புதும்புக்கெல்லாம் போகாமல், தானுண்டு தன் வேலை உண்டு என்றிருக்கும் நல்ல மனிதர் நடிகர் ரஜினிகாந்த்.

முதல் கணவருடன் விவாகரத்து ஆன பிறகு, இன்னொரு கணவரைத் தேடிக்கொண்ட ரஜினி மகள் சவுந்தர்யா, அதை இப்படிப் பேட்டி, ஃபோட்டோ சூட் என்று பகிரங்கப்படுத்தியிருப்பது[சினிமா நடிகைகளுக்கு இது விளம்பரமாக அமையும்] பெற்ற தந்தையின் மனதை நோகடிப்பது மட்டுமின்றி, அவரின் புகழுக்குப் பங்கம் உண்டுபண்ணுவதுமான செயல் ஆகும்.

இவரின் இந்த விரும்பத்தகாத செயலை வேண்டுமானால், ரஜினி முற்பிறவிகளில் செய்த வினைகளின்[கர்மா] பலன் என்று சொல்லலாம்.

* * * *

கீழ்க்காணும் முகவரியை, copy-paste செய்க.

*https://tamil.hindustantimes.com/entertainment/soundarya-rajinikanth-love-story-soundarya-

rajinikanth-shares-divorce-and-his-husband-vishagan-love-131693759791544.html