வெள்ளி, 24 மே, 2024

பூரி ஜெகன்னாதர் கோயில் செருப்புகளைத் திருடிய தமிழர்கள்!!!

#எக்ஸ் சமூகவலைதளத்தில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடிசாவில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, புரி ஜெகன்நாதர் கோயிலின் கருவூலத் திறவுகோல் தமிழகத்தில் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி, தமிழத்தைக் கொச்சைப்படுத்திப் பேசியிருக்கும் செயல் கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் தமிழ் மொழியையும், தமிழர்களையும் புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, ஒடிசாவில் தமிழர்களை இழிவாகக் காட்ட நினைக்கிறாரென்றால், எவ்வாறு இதனைச் சகித்துக் கொள்ள முடியும்?#[தினமலர்].

சுற்றிவளைத்துத் தமிழர்களைப் பூரி ஜெகன்னாதர் கோயில் செல்வங்களைக் கொள்ளையடித்தவர்கள் என்கிறார் மோடி.


நாம் சொல்கிறோம்.....


தமிழர்கள் ஜெகன்னாதர் கோயில் சாவியைத்[கொள்ளையடிக்க] திருடினார்களோ அல்லவோ, அந்தக் கோயில் வாசலில் தினம் தினம் குவிந்த செருப்புகளைக் கொள்ளயடித்துத் தமிழ்நாட்டில் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள் என்பது உண்மை.


எங்கிருந்தெல்லாமோ எவனெவனல்லாமோ தமிழ்நாடு வந்து தமிழர்களைப் பழித்துப் பேசினால், அவன்களையெல்லாம் அடிக்க இந்தச் செருப்புகள் பயன்படுத்தப்படும், அவன் எவ்வளவு பெரிய ஆளாக் இருந்தாலும்!