வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

பகவான் மோடியும் ‘பக்கா’ அடிமை அண்ணாமலையின் பகற்கனவும்!!!

 

இந்தியா பல மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய நாடு.

மாநில ஆட்சியாளர்கள் நிர்வாகத் திறமை அற்றவர்களாக இருப்பினும், மத்திய அரசு நலத்திட்டங்கள் பல வகுத்து அவற்றை நிறைவேற்றினால், அனைத்து மாநிலங்களும் வளர்ச்சிபெறும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவுக்கு அதிகாரப் பலமும் பணப் பலமும் அதற்கு உள்ளன.

என்னதான் நிர்வாகத் திறமையுள்ள முதல்வர்கள் தத்தம் மாநிலங்களை முன்னேற்றக் கடுமையாக உழைத்தாலும், மத்திய அரசின் நிதி உதவி இல்லாமல் அது சாத்தியமாவது எளிதல்ல.

இந்த அடிப்படையான அரசியல் அறிவுகூட இல்லாமல், “தமிழ்நாடு[ஒரு மாநிலம்] வளர்ந்தால் வளர்ந்த பாரதம் வரும்[வளரும்]” என்று பேசியிருக்கிறார் அண்ணாமலை என்னும் வடக்கன்களின் அடிவருடி.

தமிழ்நாடு வளர வேண்டுமானால், ‘திமுக’ ஆட்சி அகற்றப்பட்டுத் தமிழ்நாட்டைப் ‘பாஜக’ ஆள வேண்டுமாம்.

மக்களின்[தமிழ்நாடு] அங்கீகாரத்தைப் பெறுவதன்[2026 தேர்தல்] மூலம் இங்கு ‘பாஜக கூட்டணி’[தனித்துப் பாஜக ஆட்சி என்று சொல்லத் ‘தில்’ இல்லை] ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமாம்.

இது தமிழ்நாடு ‘பாஜக’ தலைவர் காணும் பகற்கனவு.

மோடியைச் சந்தித்து அவரின் தாள் பணிந்து, இரு கரம் குவித்து, “கடவுளால் இம்மண்ணிற்கு அனுப்பப்பட்ட புனிதரே, உடனடியாக ‘திமுக’ ஆட்சியைக் கலைத்துக் குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்துங்கள். அதிகாரப் பலத்தைத் ‘திமுக’ இழக்கும் நிலையில் அடுத்து வரும் தேர்தலில் கோடி கோடியாய்ப் பணத்தையும், மோடியான நீங்கள் பெற்றிருக்கும் ஆன்மிகப் பலத்தையும் பயன்படுத்தி மிக எளிதாக அதை வீழ்த்திவிடலாம்” என்று அண்ணாமலை கோரிக்கை வைத்தால்.....

உலகம் சுற்றும் வயோதிக வாலிபரான தலைவர் மோடி அதை நிறைவேற்றுவார்.

2026 தேர்தலுக்கு 16 மாதங்கள் போல் கால அவகாசம் உள்ளது.

இந்த அவகாசத்தில், 2024 தேர்தலில் வாக்களிக்காததற்காக, பேரிடர்க் காலத்தில் நிதி வழங்காமலும், நிதிநிலையறிக்கையில் தமிழ்நாட்டிற்கான நலத்திட்டங்களை அறிவிக்காமலும் தமிழர்களைப் பழிவாங்கினாரே மோடி, அதைப் போலவே, அடுத்த தேர்தல் வருவதற்குள் இப்போதுள்ள பல நலத்திட்டங்களையும் கிடப்பில் போட்டு, தமிழர்களைப் பட்டினி கிடந்து வயிறு காய வைக்கலாம்.

குறைந்தபட்ச வாழ்க்கை வசதிகூட இல்லாமல் இவர்கள் வாடி வதங்கிக் கிடப்பதைப் பார்த்துப் பார்த்துப் பார்த்து பேரானந்தத்தில்[தொடர் தேர்தல் தோல்வி மூலம் பெற இயலாதது] திளைக்கலாம் மோடியின் பரமப் பக்தர் அண்ணாமலையும் பகவான் நரேந்திர மோடியும்!