ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

கார்கால நாய்களும் காம வெறிப் பெண்களும்!!!

ள்ள உடலுறவுக்கு  இடையூறாக உள்ளது என்று தான் பெற்ற குழந்தையைத் தாயே கொன்றுவிடுவதும், கள்ளத்தனமாய்க் காம சுகம் தருபவன் மூலம் அதைச் செய்துமுடிப்பதும் நம் புனித மண்ணில் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டிருப்பதை ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. இதற்கு மேற்கண்ட நிகழ்வும் ஒரு சான்றாகும்.

ஒத்த மனமும், ஒத்த உடலமைப்பும் ஒத்த புரிந்துணர்வும் இருபாலருக்கும் ஏற்ற வகையில் அமையாதபோது, கணவன் மனைவி என்னும் இருவரில் ஒருவரோ இருவருமோ திருட்டுத்தனமாகப் புணர்ச்சிச் சுகத்தை நாடுவது உலக வழக்கமாக உள்ளது.

இந்த ஒழுக்கக்கேட்டைத் தவிர்ப்பதற்காக அறிஞர்கள் வகுத்துத்தந்த எந்தவொரு நெறிமுறையும் உரிய அளவில் பலன் தந்ததாகத் தெரியவில்லை.

இம்மாதிரி நிகழ்வுகளை அறிய நேரும்போது நம்மை வியப்பில் ஆழ்த்தும் மிகப் பெரிய ஐயம் என்னவென்றால்.....

ஒரு காமுகி, கள்ளக் காமுகனுடன் உடலுறவில் ஈடுபடும்போது கொஞ்ச நேரம்கூடப் பிரிந்திருப்பதைச் சகிக்கமாட்டாளா? பிரிவதும் சாத்தியம் இல்லையா, ‘பிணையல்’ போட்டுக்கொண்ட ஆண்&பெண்(அதற்கான நேரம் வரும்வரை  பிரிய முடியாது) 
 தெரு நாய்கள் போல?
 
01%கூட பிள்ளைப் பாசம் இல்லாத பெண் ஜென்மங்களைப் படைத்தவனும் கடவுள்தானே?

கயமைக் குணம் படைத்த இந்தக் கடவுளையா[இருந்தால்.....] புத்தி கெட்டப் பக்தர் கூட்டம் கொண்டாடிக் கூத்தடிக்கிறது!?