செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

இந்துக்கள்[மிகப் பலர்] முட்டாள்கள்! இவர்களுக்கு இணையான முட்டாள்கள் இஸ்லாமியர்கள்!!

திருப்பரங்குன்றம்[மலைமீதுள்ள தர்காவில் கிடா வெட்டுதல் & அசைவம் உண்ணுதல்] பிரச்சினையைத்[கீழே உள்ள முகவரியை*ச் சொடுக்கி முழு விவரமும் அறியலாம்] தீர்க்கும் வழியறியாமல் திகைத்து நிற்கிறது தமிழ்நாடு அரசு; தீர்ப்பதும் எளிதல்ல.

இரு மதத்தவர்களும் மலை மீது கோயில்களைக் கட்டித்[ஒரு சாரார் ஆடுகளையும் கோழிகளையும் சித்திரவதை செய்து கொன்று வயிறு முட்டத் தின்று ஜீரணித்துச் சுகம் காண்பது உட்பட > அல்லாவே அனுமதிக்கிறார் என்னும் கதை வேறு] தத்தம் கடவுள்களை வழிபட்டு/வழிபடச் செய்து இவர்களும் இவர்களைச் சார்ந்தவர்களும் இந்நாள்வரை பெற்ற பலன்கள் எவை? ஆதாரபூர்வமான பதிலைச் சொன்னவர்கள் இல்லை[கொலைகளா, தற்கொலைகளா, வன்புணர்வுகளா, இயற்கைச் சீற்றங்களா இவற்றில் எவையெல்லாம் கடவுள்களால் தடுக்கப்பட்டன, அல்லது குறைக்கப்பட்டன?

உயிர்களைப் பலி கொடுப்பதோடு, “முருகன் சொன்னார்[+கடவுள்கள்], அல்லா சொன்னார் என்று பிதற்றி, இந்த மத வெறியர்கள் பக்தர்களைத் தற்கொலை[கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்தல்] போன்ற துர்மரணங்களுக்கு உட்படுத்திக்கொள்ளத் தூண்டுவார்களேயானால், எந்தவொரு அரசாங்கத்தாலும் இதைத் தடுக்க இயலாது[தேர்தலில் ஓட்டு கிடைக்காது என்னும் பயம்].

திருப்பரங்குன்றம் இயற்கையாய் அமைந்த[ஏறி நின்று இயற்கை அழகை ரசித்து இன்புறவும், மன நலம் பேணவும் உடல் நலம் பேணவும்[மருத்துவமனைகள்கூட உருவாக்கலாம்] பயன்படுகிற இடம்.

அங்கே மூடநம்பிக்கைகளை உருவாக்கும் கோயில்களைக் கட்டியது பெரும் தவறு. இதன் விளைவாக இந்து இஸ்லாம் மதத்தவரிடையே[பிற மதத்தவர்களுக்கு உள்ளேயும்தான்] கலகங்கள் உருவானதும் அவற்றால் பல்லாயிரம் உயிர்கள் பலியிடப்பட்டதும் வரலாற்றுச் சோகங்கள்.

எனவே, பெரியார் சொன்னதை இங்கு மீண்டும் பதிவு செய்கிறோம்.....

[இந்துக் கோயில்களில் இடம்பெற்றுள்ள அரிய கலையம்சங்கள் அழியும் என்பதைத் தவிர வேறு இழப்பு ஏதுமில்லை]

விதிவிலக்கு இல்லாமல் அத்தனை மதக் கோயில்களையும் இடிக்கலாம். மாறாக, கல்வி நிலையங்களகவும் மருத்துவமனைகளாகவும் அனாதை இல்லங்களாகவும் மாற்றலாம்[கடவுள் வழிபாட்டால் மக்கள் பரம யோக்கியர்களாக ஆகிறார்கள் என்பது இட்டுக்கட்டிய பொய்; உண்மைக் காரணங்கள் வேறு]. இதன் மூலமாக இனியேனும் அரிய மனித உயிர்கள் பல்லாயிரக்கணக்கில் பலியாவதைத் தடுக்கலாம்.

இதைச் செய்வதற்கான அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை.

மாறாக, அனைத்து அதிகாரங்களையும் தன் வசம் வைத்துள்ள ஒன்றிய அரசால் மேற்குறிப்பட்ட துணிச்சலான செயலைச் செய்துமுடிக்க முடியும்தான். 

“செய்யுமா?” 

“இப்படியொரு அடிமுட்டாளதனமான கேள்வியை எவரும் கேட்டதில்லை” என்பதே நம் மக்களின் பதிலாக இருக்கும்! ஹி... ஹி... ஹி!!!

                                        *   *   *   *   *