“பூமியில் பல்வேறு பணிகளை நிறைவேற்றக் கடவுளால் அனுப்பப்பட்டவன்[பிரதிநிதி] நான்”-மோடி[https://tamil.abplive.com/news/india/pm-narendra-modi-said-i-am-convinced-i-am-not-born-biologically-getting-this-energy-as-god-sent-me-to-do-his-work-184390]
கடவுளால் அனுப்பப்பட்ட, கடவுளின் பரிபூரண ஆசியைப் பெற்ற, சொல்லப்போனால் கடவுளின் பிரதிநிதியான புனிதர் ‘மோடி மகா கும்பமேளாவையொட்டி இன்று (பிப்.5) பிரக்யாராஜ் நகருக்கு வருகை தருகிறார்; காலை 11 மணியளவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார்’[https://news7tamil.live/maha-kumbh-mela-prime-minister-modi-takes-holy-dip-at-triveni-sangam-today.html] என்பது செய்தி.
அண்மைச் செய்தி.....
‘புனிதர் மோடி திரிவேணிச் சங்கமத்தில் நீராடினார்.’
ராமச்சந்திர மூர்த்தியின் பிரதிநிதியான[‘மறுபிரதி’ என்றும் சொல்லலாம்] அவர் நீராடியதால்.....
கரையை ஒட்டிய ஊர்ப் பகுதிகளில் வாழும் மக்கள், பிணங்களுக்கு எரியூட்டி, பாதி எரிந்த நிலையில் அவற்றைக் கங்கையிலும் ஏனைய இரண்டு[சரஸ்வதி ஆறு கண்ணுக்குத் தெரியாதாம்!] ஆறுகளிலும் வீசுவதாலும், புண்ணியம் பெறுவதற்காகக் கோடிக்கணக்கான பக்தர்கள் தங்களின் மன அழுக்கோடு உடல் அழுக்குகளைக் கழுவியதாலும்... கழுவுவதாலும் மாசுபட்டிருக்கும் அவை புனிதம் பெற்றன என்று சொல்லலாம்.
100% புனிதரான மோடி[கடவுளால் அனுப்பப்பட்டவர் & கடவுளின் குழந்தை] புனிதநீர்க் கலவை என்று சொல்லப்படும் திரிவேணியில் நீராட வேண்டிய அவசியமே இல்லாத நிலையில், அங்கு நீராடியது அதில் புனிதம் சேர்ப்பதற்காகவே என்பது அறியத்தக்கது.
மோடியின் கருணையுள்ளம் மனித இனத்தவரால் என்றென்றும் போற்றி வணங்கத்தக்கதாகும்.
வணங்குவோம்! அவரைக் காலமெல்லாம் வாழ்த்தி வழிபடுவோம்!!