எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 30 மார்ச், 2025

கடவுளால் அனுப்பப்பட்ட மோடியை அந்தக் கடவுளாலும் திருத்த இயலாது!!!

#மியான்மருக்கு நிவாரணப் பொருட்களை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இதன் கீழ், மனிதநேய உதவிக்காகச் சிறப்பு மருத்துவக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்[ராணுவ அதிகாரி ஜெக்னீத் கில் தலைமையிலான 118 பேர் கொண்ட சத்ருஜீத் பிரிகேட் குழுவினர், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளுடன் மியான்மர் கிளம்பிச் சென்றனர். பேரிடர் பாதித்த பகுதிகளில் மேம்பட்ட மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை வழங்க இக்குழு தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது#[ஊடகச் செய்தி]

பாராட்டத்தக்க இந்த நல்ல செயலுக்கு  'ஆபரேஷன் பிரம்மா' என்று பெயரிடப்பட்டுள்ளதாம். புராணங்கள் புளுகிவைத்த 100% கற்பனைக் கதை மாந்தனான[கதாபாத்திரம்] பிரம்மாவின் பெயர் எதற்கு?

ஆப்ரேசன் இந்தியா’ என்று பெயர் சூட்டியிருந்தால் போதாதா?

10000[?]க்கும் மேற்பட்ட உயிரிழப்புடன் ஏராளமானோர் காயமடைந்து, அளப்பரிய வேதனையில் சிக்கித் தவிக்கும் மக்களின்[பெரும்பாலோர் புத்த மதத்தவர்] மனங்களில் இந்து மதத் திணிப்பா?

கடவுளால் அனுப்பப்பட்ட மோடி மீண்டும் கடவுளின் திருவடி சேரும்வரை திருந்தமாட்டார்!

அந்தக் கடவுளாலும் இவரைத் திருத்த இயலாது!!

                                          *   *   *   *   *

https://www.dinamalar.com/news/india-tamil-news/india-launches-operation-brahma-to-help-myanmar/3891336