திங்கள், 21 ஏப்ரல், 2025

முற்றுகிறது ஆதிக்க வெறியனுக்கும் தமிழ்நாட்டுத் தலைவனுக்குமான மோதல்!!!

மிழ்நாடு அரசு நிர்வாகத்தைச் சீர்குலைப்பதற்கென்றே தான் அனுப்பிய ‘எடுபிடி’யைத் தூண்டிவிட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் இழந்த அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான[உதகையில் பல்கலக்கழகத் துணைவேந்தர்கள் மாநாடு] நடவடிக்கையில் ஈடுபட வைக்கிறார் இந்த நாட்டுப் பிரதமர் மோடி என்றால், அவர் எந்த அளவுக்கு ஆதிக்க வெறி கொண்டவர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஏற்கனவே, ‘எடுபிடி’யின் அடாவடித்தனங்களால் கடும் சினத்திற்கும் மனக் கொதிப்பிற்கும் உள்ளாகியிருக்கும் தமிழர்கள், கட்டுப்பாடிழந்து கலவரங்களில் ஈடுபட்டால், தமிழ்நாட்டில் அமைதி சீர்குலைந்துவிட்டதாகத் ‘திமுக’ ஆட்சியைக் கலைப்பதோடு.....

இங்குள்ள தமிழினத் துரோகிகளை அணி சேர்த்து, 2026 தேர்தலில் வென்று தமிழ்நாட்டில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது மோடியின் திட்டம்.

‘எடுபிடி’யின் உதகை மாநாடு தொடர்பான அடுத்த கட்ட நிகழ்வுகளுக்குப் பிறகு மோடியின்  சுயரூபம் வெளிப்படும் என்று நம்பலாம்.

வடக்கன்களிடம் விலைபோகும் கொத்தடிமைகளைப் போலவே, ஒட்டுமொத்தத் தமிழினமும் வடக்கன்களின் தலைவனுக்கு ஆதரவளிக்குமா, எதிர்த்துப் போராடி வெற்றி பெறுமா என்பது கொஞ்சம் நாட்களில் தெரியவரும்.

இனியும் தமிழ்நாட்டை ஆட்சிபுரிவது வடக்கன்களா, தமிழினத் தலைவர்களா[ஸ்டாலினோ வேறு எவருமோ] என்பதை முடிவு செய்யவேண்டிய இக்கட்டான அரசியல் சூழலில் சிக்கிக் கிடக்கிறார்கள் தமிழ் மக்கள்.