'ஜெயிலர் 2' படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்குச் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்திருந்தார்.
அப்போது அவரிடம் அகமதாபாத் விமான விபத்து குறித்துச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "அகமதாபாத் விமான விபத்து ரொம்ப வருத்தமான விஷயம். ஆண்டவன் அருளால் இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கணும்" என்றார்[தினத்தந்தி].
“ஆண்டவன் அருளால் இனி இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்கணும்” என்கிறார் புகழின் உச்சியைத் தொட்ட ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்து.
“இந்தப் படு பயங்கர அவல நிகழ்வைத் தடுக்காமல் அந்த அருள்மிகு ஆண்டவன் என்ன செய்துகொண்டிருந்தார்?” என்பது உச்ச நடிகரிடம் நாம் கேட்கும் கேள்வி.
உச்சத்திடம் கேட்கும் இன்னொரு நம் கேள்வி:
“உன்னை நான்தானே கோடி கோடி கோடீஸ்வரன் ஆக்கினேன். குறைந்தபட்சம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக ஒரு கோடி ரூபாய் கொடு ரஜினி” என்று சொல்லியிருப்பாரே?”
நம் 1+1 கேள்விகளுக்கு அவர் பதில் சொல்வாரா?
* * * * *
https://www.dailythanthi.com/cinema/cinemanews/ahmedabad-plane-crash-is-very-sad-rajinikanth-1163524