எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

மலரல்ல அது; ஆனாலும், கசக்கிக் காலால் மிதித்தும் கமகமத்தது!!!

 தோ ஒரு பூ.

ஒரு முறை அதைக் கடந்து போனேன்;


மீண்டுவந்து 

பறித்து முகர்ந்தேன்;

சிறு சிறு துகள்களாக்

கிள்ளிக் கிள்ளித் தரையில் உதிர்த்தேன்;

காலால் மிதித்தேன்;


பொறுக்கி எடுத்து நசுக்கினேன்;


கசக்கினேன்.


என்ன செய்தும்.....


அதை முகர்ந்தபோது

கமகமத்து மணம் பரப்பியது.

பெற்ற தாயின் நினைப்பு வந்தது!

* * * * *

*** இது சுட்ட கவிதை. முகவரியைச் சேமிக்காததால் உள்மனம் சுடுகிறது!