எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

மலரல்ல அது; ஆனாலும், கசக்கிக் காலால் மிதித்தும் கமகமத்தது!!!

 தோ ஒரு பூ.

ஒரு முறை அதைக் கடந்து போனேன்;


மீண்டுவந்து 

பறித்து முகர்ந்தேன்;

சிறு சிறு துகள்களாக்

கிள்ளிக் கிள்ளித் தரையில் உதிர்த்தேன்;

காலால் மிதித்தேன்;


பொறுக்கி எடுத்து நசுக்கினேன்;


கசக்கினேன்.


என்ன செய்தும்.....


அதை முகர்ந்தபோது

கமகமத்து மணம் பரப்பியது.

பெற்ற தாயின் நினைப்பு வந்தது!

* * * * *

*** இது சுட்ட கவிதை. முகவரியைச் சேமிக்காததால் உள்மனம் சுடுகிறது!