அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியப் பொருள்களுக்கான அமெரிக்காவின் வரிவிதிப்பு உயர்வால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து இந்தியப் பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்*; மக்களிடையேயான வாதப்பிரதிவாதங்கள் தொடர்கின்றன.
இழப்புகள் ஓரளவுக்கே[திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பது செய்தி] ஆயினும், அது நேர்வதற்கு மோடியின் சுயநல அரசியலே காரணமாக உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்குத் தான்தான் காரணம் என்று டிரம்ப் சொல்லியுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து ஏற்க மறுத்து[ஏற்பதால் பாதிப்பு ஏதுமில்லை], பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் அது நிறுத்தப்பட்டது என்று மோடி சொல்லிக்கொண்டிருந்தது ஏன்?
‘டிரம்ப்’பின் கூற்றை[29 முறை பொய் சொல்லும் அளவுக்கு அத்தனைப் பெரிய பொய்யரா டிரம்ப்?] மறுக்காமலும், பாகிஸ்தானின் தோல்வியைத் திரும்பத் திரும்பச் சொல்லி எள்ளி நகையாடாமலும் மோடி இருந்திருக்கலாம்.
பாகிஸ்தானை மீண்டும் மீண்டும் இழிவுபடுத்திப் பேசியதால்[அடி மேல் அடி வாங்கிக் குப்புறக் கவிழ்ந்து கிடப்பவன் புட்டத்தில் மீண்டும் மீண்டும் எட்டி உதைப்பது போன்ற அடாத செயல் இது] இந்தியாவுக்கு விளைந்த பலன் 0%தான்.
பாவம் மோடி, இதனால்(ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது உண்மைக் காரணம் அல்ல. டிரமப்பும் புடினுமே போனில் அவ்வப்போது உறவாடுகிறார்கள்) அவர் எதிர்பார்த்தது நடந்ததோ அல்லவோ, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு மிகக் கடுமையாகச் சிதைந்தது; பொருளாதாரப் பின்னடைவும் நிகழ்ந்தது. இவற்றிற்கு இவருடைய சுயநல அரசியலே காரணம்!
* * * * *

