வெள்ளி, 10 ஏப்ரல், 2026

வருந்துதலும் வருத்தம் தெரிவித்து அதைத் தணித்தலும்!

வறே செய்யாமல் வாழ்வது சாத்தியம் இல்லை.

செய்த தவற்றை நினைத்து வருந்தும்போது, அதனால் பாதிக்கப்பட்டவர் நமக்குத் தெரிந்தவராக இருந்தால், அவரிடம் மன்னிப்புக் கேட்பதன் மூலம் சற்றே ஆறுதல் பெறலாம்.


முன்பின் அறிமுகமே இல்லாதவர்களிடம் தவறாக நடந்துகொண்டால்[குறிப்பாகப் பொதுவிடங்களில்], பின்னர் மனம் திருந்தி வருந்தினாலும் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வாய்ப்பே இல்லை. ஆயுட்காலம்வரை முழு வருத்தத்தையும் சுமந்து வாழ நேரிடும்.

எனவே, பொதுவிடங்களில் பிறரை மதித்து நடந்துகொள்வது மிகவும் நன்மை பயப்பதாகும்.