வியாழன், 3 ஆகஸ்ட், 2017

‘அது’ விசயத்தில் மீண்டும் ஒரு ‘அறுப்பு’ச் சம்பவம்!!

கேரளாவில் சட்டக் கல்லுரி மாணவி ஒருவர், தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 52 வயதான சாமியாரின் பிறப்புறுப்பை வெட்டிய சம்பவம் அகில உலகமும் அறிந்த ஒன்று. இன்றைய நாளிதழ்ச்[‘தி இந்து’ 03.08.2017] செய்தியின்படி, அதே கேரள மாநிலத்தில், கொச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னைப் பலவந்தமாக[பாலியல் பலாத்காரம்] முத்தமிட்ட 30 வயதான ஒரு காமுகனின் நாக்கு நுனியை[2செ.மீ]க் கடித்துத் துண்டித்துள்ளார்.

துண்டித்த நுனி நாக்கைக் காவல்துறையினரிடம் காட்டியுள்ளார். காவல்துறை அந்த நடுத்தர வயதுக் காமுகனைக் கைது செய்திருக்கிறது.
[பதிவுக்குத் தொடர்பில்லாதவர்!]
இம்மாதிரி, மனோதைரியம் வாய்த்த பெண்களுக்கு நான் மனப்பூர்வமாய் வழங்கும்  ஆலோசனை ஒன்று உண்டு.

பெண்களே,

மேற்கண்டது போன்ற கெட்ட நிகழ்வுகளுக்கு நீங்கள் உள்ளாக நேரிட்டால்[நேரவே கூடாது], நாக்கு நுனியைக் கடித்தெடுப்பதைக் காட்டிலும், உங்களைக் கற்பழிக்க முயலும் காமுகனுடைய உதட்டின் ஒரு கணிசமான பகுதியையாவது கடித்தெடுங்கள். அவனின் மூக்கைத் துண்டிப்பது அதனினும் சிறந்த செயலாகும்.

துண்டிக்கப்பட்ட நாக்கை எதிர்ப்படுகிற எல்லோரும் காணும் வாய்ப்பு இல்லையாதலால் காமுகனின் இழிசெயலையும் பெற்ற தண்டனையையும் அவர்கள் அறிவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது. 

துண்டிக்கப்பட்ட உதடுகளோ மூக்கோ அவன் புரிந்த ஈனச் செயலையும் பெற்ற தண்டனையையும் எளிதில் பிறர் அறியப் பறைசாற்றிக்கொண்டே இருக்கும்.

ஆகவே, நான் மீண்டும் நினைவுபடுத்துகிறேன், மேற்கண்டது போன்ற ஆபத்துகளை எதிர்கொள்ள நேரும்போது நான் வழங்கிய ஆலோசனையை மறவாமல் நடைமுறைப்படுத்துங்கள்.
==============================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக