எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

பா.ஜ.க.வில் இன்னுமொரு ‘அறிவுச் சூன்யம்’!!!

சில நாள் முன்பு, பிரயாக்சிங் தாக்கூர்[நாடாளுமன்ற உறுப்பினர்] என்னும் பா.ஜ.க.வின் சாமியாரிணி, அருண்ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் போன்ற பா.ஜ.க.வின் தலைவர்களை எதிர்க்கட்சியினர் சூன்யம் வைத்துக் கொன்றுவிட்டதாக உளறியது.

இப்போது அக்கட்சியைச் சேர்ந்த இன்னொரு ‘மெண்டல்’[அஸ்ஸாம் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ., திலீப் குமார் பால்], “கிருஷ்ணர் போல் புல்லாங்குழல் வாசித்தால் பசு மாடுகள் கூடுதலாகப் பால் கறக்கும்” என்று திருவாய் மலர்ந்தளியிருக்கிறது.

பசுக்கள் செவிமடுக்கும் வகையில் இன்னிசைக் கருவிகளை நாளும் இசைத்தால், அவை சிறிது கூடுதலாகப் பால் வழங்கக்கூடும். அதுவும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

இந்தக் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாத இந்தப் பா.ஜ.க.வின் அறிவுச் சூன்யம் புதியதொரு மூடநம்பிக்கையை மக்கள் மனங்களில் திணித்திருக்கிறது.

கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை இந்த ஆள் எப்போதாவது பார்த்திருக்கிறாரா? அப்புறம் எப்படி இப்படியான ஒரு பொன்மொழியை இவரால் உதிர்க்க முடிந்தது!

இவரைப் போன்றவர்கள் இனியும் இம்மாதிரி உளறிக்கொட்டுவதைத் நிறுத்திட வேண்டும். தவறினால், இது போன்ற குற்றங்களுக்கான எதிர்வினைகளைப் பா.ஜ.க. எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.
=================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக