சனி, 13 ஜூன், 2020

நடுநிசிக் காமம்!!![குடும்பக் கதை]

தூக்கம் கலைந்து புரண்டு படுத்தான் தங்கராசு. அவனுடைய ஒரு கை, முந்தானை விலகிய மருக்கொழுந்துவின் மார்பகத்தின் மீது விழுந்தது.
மனதில் காமம் துளிர்விட, கையைச்  சுதந்திரமாகப் புழங்கவிட்டபோது....

“எடுய்யா கையை.” -மருக்கொழுந்து அதட்டினாள்.

கையைப் பின்னுக்கு இழுத்தான் தங்கராசு.

‘என்னய்யா நடு ஜாமத்தில் சேட்டை பண்றே?”

“அது வந்து மருக்கொழுந்து.....தூக்கக் கலக்கத்தில்.....” -வாய் குழறியது தங்கராசுக்கு.

“உன் கை பட்டவுடனே எனக்கு விழிப்பு வந்துட்டுது. மேற்கொண்டு என்ன நடக்குதுன்னு பார்க்கத்தான் தூங்குற மாதிரி நடிச்சேன். இதோ பாருய்யா, இந்த மாதிரி கண்ட கண்ட நேரத்தில் எல்லாம் இது வெச்சுக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன் இல்லியா?”

உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியாத நிலையில், “மருக்கொழுந்து, மண்டியில் மூட்டை சுமக்கிறவன் நான். சில சமயம் சீக்கிரம் வேலை முடிஞ்சி வந்துடுவேன். சில நாட்கள்ல  ராத்திரி மணி ஒன்பது பத்துன்னு ஆயிடும். வந்ததும் சுடு தண்ணியில் குளிச்சுட்டு, சுடச்சுட ருசியா நீ போடுற சாப்பாட்டை வயிறு முட்டத் தின்னதும் அடிச்சிப் போட்ட மாதிரி படுத்துத் தூங்கிடுவேன். இன்னிக்கும் அப்படித்தான். சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் படுத்துத் தூங்கி நடு ராத்திரியில் முழிச்சபோது, பக்கத்தில் உன்னைப் பார்த்ததும் ‘அந்த நினைப்பு’ வந்துட்டுது. என்னை மன்னிச்.....”

அவன் பேசி முடிப்பதற்குள் அவசரமாய் அவனை இழுத்து அணைத்து, “நீ தப்புப் பண்ணல. நான்தான் உன்னைப் புரிஞ்சுக்காம தப்பாப் பேசிட்டேன். இனி, உன் மனசறிஞ்சி நடந்துக்குவேன்” என்றாள்  ’புதுசு’ மாறாத மருக்கொழுந்து!
===================================================================