அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 6 ஜூலை, 2020

ஜக்கி வாசுதேவ் போல ‘சத்குரு’ ஆவது எப்படி?

கீழ்க்காணும், ஜக்கி வாசுதேவ் அவர்களின் அறிவுரை/அறவுரை, https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/aen-kaalil-vizhunthu-vananga-vaendum என்னும் முகவரியில் படித்தது. நீங்களும் படியுங்கள்.
#உங்கள் உடலை வெறும் தசை, எலும்பு, நரம்பு என்று .வெறும் உறுப்புகளாகப் பார்க்கலாம். அல்லது உடல் என்பதை[ச்] சக்தி அடிப்படையிலும் பார்க்கலாம். இந்த[ச்] சக்திதான் உங்கள் எல்லா உறுப்புகளையும் உருவாக்க அடிப்படையாக இருக்கும் சக்தி. இதை[க்] குறிப்பிட்ட வகையில் ஒருங்கிணைத்தால், ஒருவரின் உடலிலிருந்து சக்தி வெளிப்படும் விதமாகச் செய்ய முடியும்.
நம் பாதங்களில் மிகவும் அதிகமான சக்தி ஓட்டம் நடக்கிறது என்று விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்து இருக்கிறார்கள். அதை உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் காலில் விழும் பழக்கம். ஒரு யோகியையோ குருவையோ பார்த்தால் வெறுமனே போய் காலில் விழுந்தால் போதாது. எப்படி விழவேண்டும், எப்படி அவர் பாதங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு குறிப்பிட்ட வழிமுறைகள் உண்டு. அதை அறிந்து அவர்களின் பாதம் பற்றினால், மிகுந்த சக்தியை அவரிடமிருந்து நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும். அதனால்தான் அந்த யோகியோ குருவோ விரும்பினால் மட்டுமே அவர் பாதங்களை நீங்கள் தொட அனுமதிப்பார்கள். எல்லா சமயங்களிலும் தொடுவதற்கு அனுமதி இல்லை.
கோவிலில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது எதற்கென்றால், அங்கு கடவுள் சக்திரூபமாக இருக்கிறார். அங்கிருக்கும் சக்தியை[ப்] பெற்றுக் கொள்ளும் தன்மை இயல்பாகவே அனைவருக்கும் இருப்பதில்லை. எனவே அதனுடன் நீங்கள் தொடர்பில் வரவேண்டும். அதற்காகத்தான் கோவிலில் நீங்கள் தரையில் உட்காரவேண்டும் அல்லது உடல் தரையில் படும்படி விழுந்து வணங்க வேண்டும் என்றார்கள். அதுவும் ஆண்கள் என்றால் சட்டையைக் கழற்றிவிட்டு சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கலாம். பெண்கள் என்றால் ஈர உடையுடன் சாஷ்டாங்கமாக வணங்கவேண்டும் என்று வகுத்தார்கள்.
யோக முறைப்படி சொல்லப் போனால், சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது சூரிய நமஸ்காரத்தில் மிக முக்கியமான ஒரு நிலை. சாஷ்டாங்க நமஸ்காரம் என்றால் உடலின் எட்டு அங்கங்கள் மட்டுமே தரையில் பட வேண்டும்.
ஆனால் தற்சமயம் பொத்தென்று உடலை கீழே போட்டு உடலின் அனைத்து பாகங்களும் தரையில் படுமாறு வணங்குகிறோம். கோவிலில் படுத்து உறங்குவது போல் கீழே கிடப்பதில் அத்தனை சுகமோ என்னவோ? ஆனால் பாரம்பரிய முறைப்படி சாஷ்டாங்கமாகத்தான் ஒருவர் விழுந்து வணங்க வேண்டும். இவ்வாறு செய்வதற்கு[ப்] பல சிறப்புகள் உண்டு#
‘குறிப்பிட்ட வகையில் ஒருங்கிணைத்தால், ஒருவரின் உடலிலிருந்து சக்தி வெளிப்படும் விதமாகச் செய்ய முடியும்’ என்கிறார் ஜக்கி. 
தை ஒருங்கிணைப்பது, எப்படி ஒருங்கிணைப்பது என்பவை பற்றியெல்லாம் நமக்கு எதுவும் புரியவில்லை. ஆனாலும், கேள்வி கேட்காமல் “சரி” சொல்வோம்.
‘யோகிகளின் பாதம் பற்றினால், மிகுந்த சக்தியை அவர்களிடமிருந்து நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும்’ என்றும் சொல்கிறார்.
இன்றளவில் யோகிகள் இருக்கிறார்களா, எங்கே இருக்கிறார்கள், சக்தியை எப்படி எடுத்துக்கொள்வது, பாதம் பற்றுவதால் நமக்குள் எப்படிச் சக்தி பரவும் என்பவை பற்றி நமக்கு எதுவுும் தெரியாாாது. ஆகையால், அவரே ஒரு யோகி என்பதால், அவரின் பாதம் பற்றுவோம்.
அங்கு[கோயில்] கடவுள் சக்திரூபமாக இருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்
கடவுள் கோயிலில் மட்டும்தான் சக்தியாக இருக்கிறாரா? வேறு எங்கும் அவ்வாறு இல்லையா? என்றெல்லாம் வினா எழுப்பாமல், அவருடைய அறிவுரை, அல்லது அறவுரையின்படி கோயிலில் உள்ள கடவுளின் திருவடியில் ‘சாஸ்டாங்கமாக’ விழுந்து வணங்குவோம். வணங்கினால்.....
நாமும் யோகி ஜக்கி வாசுதேவ் போல சத்குரு ஆகலாம். 
ஆகலாம்தானே?! ஹி...ஹி...ஹி!